ETV Bharat / bharat

கோவிட்-19: வெளிநாட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியர் தகவல்! - Covid-19 latest news

புதுச்சேரி: ஆரோவில் பகுதியில வசித்துவரும் வெளிநாட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும், இரு மாநில எல்லைகளிலும் மருத்துவக் கண்காணிப்பு நடைபெற்றுவருவதாகவும் விழுப்புரம் ஆட்சியர் அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

kovit-19-collectors-reported-to-be-under-surveillance-of-foreigners
kovit-19-collectors-reported-to-be-under-surveillance-of-foreigners
author img

By

Published : Mar 21, 2020, 4:21 PM IST

புதுச்சேரி மாவட்டம் அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஆரோவில் பகுதி இங்கு பெரும்பாலும் வெளிநாட்டினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்பைத் தடுக்கும்விதமாக, புதுச்சேரி-விழுப்புரம் ஆகிய இரு மாவட்ட ஆட்சியாளர்கள், மருத்துவக் குழுவுடன் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரோவில் பகுதி அருகே நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும், ஆரோவில் பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்குக் கண்டறிதல் சோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியர் தகவல்

மேலும், அப்பகுதில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது என்றும், இங்குள்ள வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட வாடா!

புதுச்சேரி மாவட்டம் அருகே உள்ள விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள ஆரோவில் பகுதி இங்கு பெரும்பாலும் வெளிநாட்டினர் வசித்துவருகின்றனர்.

இந்நிலையில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பாதிப்பைத் தடுக்கும்விதமாக, புதுச்சேரி-விழுப்புரம் ஆகிய இரு மாவட்ட ஆட்சியாளர்கள், மருத்துவக் குழுவுடன் மாவட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கை குறித்து இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆரோவில் பகுதி அருகே நடைபெற்ற இந்த ஆய்வின்போது, அப்பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்கு கோவிட்-19 பெருந்தொற்று கண்டறியும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, புதுச்சேரி விழுப்புரம் மாவட்ட எல்லைகளில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று குறித்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என்றும், ஆரோவில் பகுதியிலுள்ள வெளிநாட்டவர்களுக்குக் கண்டறிதல் சோதனைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளதாக ஆட்சியர் தகவல்

மேலும், அப்பகுதில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படுகிறது என்றும், இங்குள்ள வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துவருவதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:கோவிட்-19 எதிரொலி: புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதலை வெளியிட்ட வாடா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.