ETV Bharat / bharat

மக்களோடு சேர்ந்து 2020 புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி! - புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி

புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்தில், மக்களோடு சேர்ந்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடற்கரைச் சாலையில் கொண்டாடினார்.

புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி
புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி
author img

By

Published : Jan 1, 2020, 5:44 AM IST

உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரைச் சாலையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகளவில் கூடினர். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவல் துறையின்ர் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காந்தி சிலை அருகே உள்ள அரசு உணவகத்தின் மாடி மேலிருந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொதுமக்களும் ஆரவாரமாகப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி

இந்நிகழ்ச்சியில், ஏராளமான உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாட்டவர் வரை பலர் கலந்துகொண்டு புத்தாண்டை கொண்டாடினர். இதனிடையே, புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு சுற்றுலாப் பயணி, திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட காவல் துறையினர், உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தி வந்தனர். அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ் சென்றால் கைது - மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

உலகம் முழுவதும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டுவருகிறது. இதையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கடற்கரைச் சாலையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அதிகளவில் கூடினர். மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் பலத்த பாதுகாப்புகள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்துக் காவல் துறையின்ர் ஆயிரத்து 500 பேர் பாதுகாப்புக்காக பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புத்தாண்டை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காந்தி சிலை அருகே உள்ள அரசு உணவகத்தின் மாடி மேலிருந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார். பொதுமக்களும் ஆரவாரமாகப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

புத்தாண்டு கொண்டாடிய கிரண்பேடி

இந்நிகழ்ச்சியில், ஏராளமான உள்ளூர்வாசிகள் முதல் வெளிநாட்டவர் வரை பலர் கலந்துகொண்டு புத்தாண்டை கொண்டாடினர். இதனிடையே, புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்த ஒரு சுற்றுலாப் பயணி, திடீரென மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட காவல் துறையினர், உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில், கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிலர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பதாகைகளை ஏந்தி வந்தனர். அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையும் படிங்க: புத்தாண்டு தினத்தில் பைக் ரேஸ் சென்றால் கைது - மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை

Intro:புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடற்கரை சாலையில் மக்களோடு சேர்ந்து கொண்டாடினார்.


Body:புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன உலகம் முழுவதும் இன்று ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுவதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் அதிகளவில் மக்கள் கூடினர் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களான கடற்கரை சாலை காந்தி சிலை அருகே டுப்லக்ஸ் சிலையருகே மற்றும் தேவாலயங்களில் அருகே நகரின் மையப்பகுதியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டன போக்குவரத்து காவல்துறை 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் இந்த ஆண்டு தனியார் புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகள் கடந்த ஆண்டை விட குறைவாக செய்யப்பட்டிருந்தது இதனால் மக்கள் கூட்டம் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கூடியது புத்தாண்டை முன்னிட்டு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடற்கரை சாலையை காந்தி சிலை அருகே அரசு உணவகத்தின் மாடி மேல் இருந்து மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார் பொதுமக்களும் ஆரவாரமாக புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் மாநில சட்டப்பணிகள் வெளிநாட்டவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு புத்தாண்டை கொண்டாடினர் இதற்கிடையே கடற்கரை சாலையில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஒரு சுற்றுலாப் பயணி திடீரென மயக்கம் அடைந்தார் அவரை போலீசார் உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று திரும்பினார் இதற்கிடையே கடற்கரை சாலை காந்திசிலை அருகே நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் சிலர் குடியிருப்பு சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பதாகைகளை ஏந்தி வந்தனர் அவர்கள் போலீஸார் தடுத்து நிறுத்தினர்

இதற்கிடையில் புத்தாண்டை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன இதில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர்


Conclusion:புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடற்கரை சாலையில் மக்களோடு சேர்ந்து கொண்டாடினார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.