ETV Bharat / bharat

மதம், சாதி குறிப்பிடவில்லை என்றால் பள்ளியில் இடமில்லையாம் - காரணம் இதுதான்!

author img

By

Published : Feb 22, 2020, 2:04 PM IST

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்திலுள்ள ஒரு பள்ளியில், மதம், சாதி ஆகியவற்றை குறிப்பிடாததால், தன்னுடைய குழந்தையைச் சேர்க்க அனுமதி மறுப்பதாகப் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Kerala school denies admission to child after parents didn't fill caste, religious column
Kerala school denies admission to child after parents didn't fill caste, religious column

கேரளாவைச் சேர்ந்த நசீம், தன்யா தம்பதியினர் தங்களது மகனை அரசு உதவிபெறும் பள்ளியான புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ செயலி சம்பூர்ணாவில், அனைத்துத் தகவல்களையும் பதிவேற்றியுள்ளனர்.

இந்தச் சூழலில், மதம், சாதி ஆகிய பகுதிகளில் தகவல்களைச் சேர்த்தால்தான் பள்ளியில் சேர்க்க அனுமதியளிக்கப்படும் என்று அச்செயலியில் வந்துள்ளது. குழப்பமடைந்த அவர்கள், பள்ளிக்கு நேரில் சென்று, செயலியில் ஏதும் தொழில்நுட்பக் கோளாறா என வினவியுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகத் தரப்பில் செயலியில் அவ்வாறு ஏதும் கோளாறு இல்லை என்றும் கட்டாயம் சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளனர். தாங்கள் தங்களுடைய குழந்தையின் சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை, அதனால் அவையிரண்டும் இல்லாமல் பள்ளியில் சேர்க்குமாறு கோரியுள்ளனர். அவர்கள் தரப்பு வாதத்தை முற்றிலும் நிராகரித்த நிர்வாகம் அவர்களது மகனைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்துள்ளது.

அரசு சாதி, மத அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதவித்தொகையும் வழங்குவதாகக் கூறிய பள்ளி நிர்வாகம் இப்போது மாணவருக்கு சாதி, மதம் தேவையில்லாமல் இருந்தாலும், பிற்காலத்தில் மாணவருக்கு கிடைக்கும் அரசின் உதவிகள் மறுக்கப்பட்டு, அவரின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவாதம் தேவையற்ற எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

பள்ளி நிர்வாகம் கூறுவது சரிதான் என்று கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், கேரள கல்வித் துறை இவ்விவகாரம் குறித்து விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளது.

இதையும் படிங்க: இனவாதம் பேசியதாகக் கூறி ஏஐஎம்ஐஎம் தலைவர் மீது எப்ஐஆர்!

கேரளாவைச் சேர்ந்த நசீம், தன்யா தம்பதியினர் தங்களது மகனை அரசு உதவிபெறும் பள்ளியான புனித மேரி உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, அப்பள்ளியின் அதிகாரப்பூர்வ செயலி சம்பூர்ணாவில், அனைத்துத் தகவல்களையும் பதிவேற்றியுள்ளனர்.

இந்தச் சூழலில், மதம், சாதி ஆகிய பகுதிகளில் தகவல்களைச் சேர்த்தால்தான் பள்ளியில் சேர்க்க அனுமதியளிக்கப்படும் என்று அச்செயலியில் வந்துள்ளது. குழப்பமடைந்த அவர்கள், பள்ளிக்கு நேரில் சென்று, செயலியில் ஏதும் தொழில்நுட்பக் கோளாறா என வினவியுள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகத் தரப்பில் செயலியில் அவ்வாறு ஏதும் கோளாறு இல்லை என்றும் கட்டாயம் சாதி, மதத்தைக் குறிப்பிட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் தங்களது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளனர். தாங்கள் தங்களுடைய குழந்தையின் சாதி, மதத்தைக் குறிப்பிட விரும்பவில்லை, அதனால் அவையிரண்டும் இல்லாமல் பள்ளியில் சேர்க்குமாறு கோரியுள்ளனர். அவர்கள் தரப்பு வாதத்தை முற்றிலும் நிராகரித்த நிர்வாகம் அவர்களது மகனைப் பள்ளியில் சேர்க்க அனுமதி மறுத்துள்ளது.

அரசு சாதி, மத அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் உதவித்தொகையும் வழங்குவதாகக் கூறிய பள்ளி நிர்வாகம் இப்போது மாணவருக்கு சாதி, மதம் தேவையில்லாமல் இருந்தாலும், பிற்காலத்தில் மாணவருக்கு கிடைக்கும் அரசின் உதவிகள் மறுக்கப்பட்டு, அவரின் நலனில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளது. இந்த விவாதம் தேவையற்ற எனவும் நிர்வாகம் கூறியுள்ளது.

பள்ளி நிர்வாகம் கூறுவது சரிதான் என்று கேரளாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ள நிலையில், கேரள கல்வித் துறை இவ்விவகாரம் குறித்து விசாரிக்க களத்தில் இறங்கியுள்ளது.

இதையும் படிங்க: இனவாதம் பேசியதாகக் கூறி ஏஐஎம்ஐஎம் தலைவர் மீது எப்ஐஆர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.