ETV Bharat / bharat

அமலாக்க விசாரணையிலிருந்து தப்பிக்க மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்ந்தாரா ரவீந்திரன்?

author img

By

Published : Dec 9, 2020, 5:59 PM IST

திருவனந்தபுரம்: தங்கக் கடத்தல் வழக்குத் தொடர்பாக மூன்றாவது முறையாக விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன், உடல்நலக் குறைவு காரணம் காட்டி இன்று மீண்டும் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன்
அமலாக்க விசாரணையிலிருந்து தப்பிக்க மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்ந்தாரா ரவீந்திரன்?

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல்செய்தது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடன் மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர், ஐ.டி. செயலர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவசங்கரை, தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்து விசாரணை செய்துவருகிறது.அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின.

அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், சி.எம். ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை கடந்த நவம்பர் மாதம் இரண்டு அழைப்பாணைகளை அனுப்பியது.

கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு, நுரையீரல் சுவாசக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டுமுறை விசாரணை ஆணையத்தின் முன் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த 4ஆம் தேதி தனது வீட்டிற்குத் திரும்பிய சி.எம். ரவீந்திரனை, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் டிச.10ஆம் தேதியன்று முன்னிலையாகுமாறு அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக அழைப்பாணையை அனுப்பியது.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணம் காட்டி இன்று மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன்
அமலாக்க விசாரணையிலிருந்து தப்பிக்க மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்ந்தாரா ரவீந்திரன்?

இதனால், கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் டிச.10 தேதியன்று நடைபெறவிருக்கும் விசாரணைக்கு அவர் நேரில் முன்னிலையாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட விரைந்த வெளிநாட்டுத் தூதர்கள்

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஜூலை 5ஆம் தேதி 30 கிலோ எடையுள்ள சுமார் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத்துறை பறிமுதல்செய்தது.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையை மேற்கொண்டுள்ள தேசிய புலனாய்வு முகமை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், பாசில் ஃபரீத் ஆகிய நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலருடன் மூத்த ஐஏஎஸ் அலுவலர் சிவசங்கருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, முதலமைச்சர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலர், ஐ.டி. செயலர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட சிவசங்கரை, தேசிய புலனாய்வு முகமை கைதுசெய்து விசாரணை செய்துவருகிறது.அவரிடம் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் வெளியாகின.

அதில், இந்தக் கடத்தலில் பினராயி விஜயனின் கூடுதல் தனிச்செயலர் ரவீந்திரனுக்கும் தொடர்பிருப்பது தெரியவந்தது. அதனடிப்படையில், சி.எம். ரவீந்திரனுக்கும் அமலாக்கத் துறை கடந்த நவம்பர் மாதம் இரண்டு அழைப்பாணைகளை அனுப்பியது.

கரோனா வைரஸ் தொற்றுப் பாதிப்பு, நுரையீரல் சுவாசக் கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டுமுறை விசாரணை ஆணையத்தின் முன் முன்னிலையாக முடியாத சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, கடந்த 4ஆம் தேதி தனது வீட்டிற்குத் திரும்பிய சி.எம். ரவீந்திரனை, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் டிச.10ஆம் தேதியன்று முன்னிலையாகுமாறு அமலாக்கத் துறை மூன்றாவது முறையாக அழைப்பாணையை அனுப்பியது.

இந்நிலையில், உடல்நலக் குறைவு காரணம் காட்டி இன்று மீண்டும் அவர் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் கூடுதல் தனிச் செயலர் சி.எம். ரவீந்திரன்
அமலாக்க விசாரணையிலிருந்து தப்பிக்க மூன்றாவது முறையாக மருத்துவமனையில் சேர்ந்தாரா ரவீந்திரன்?

இதனால், கொச்சியில் உள்ள அமலாக்க இயக்குநரகத்தில் டிச.10 தேதியன்று நடைபெறவிருக்கும் விசாரணைக்கு அவர் நேரில் முன்னிலையாக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்களைப் பார்வையிட விரைந்த வெளிநாட்டுத் தூதர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.