ETV Bharat / bharat

தாயின் பெயரை மாற்றக்கோரிய மெகபூபா முப்தியின் இளைய மகள்!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் பின்னொட்டுப் பெயரை மாற்றக்கோரி, அவரது இளைய மகள் நோட்டீஸ் வெளியிட்டுள்ளார்.

author img

By

Published : Aug 23, 2020, 9:03 PM IST

Mehbooba Mufti
Mehbooba Mufti

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் இளைய மகள் இர்திக் ஜாவித் தனது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெகபூபா முப்தி என்ற அவரது தாயாரின் பெயரை மெகபூபா சையத் என மாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக உள்ளூர் செய்தித்தாளில் ஒரு நோட்டீஸ் ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஏழு நாள்களுக்குள் துறைச் சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மெகபூபா முப்தியும் அவரது கணவர் ஜாவித் இக்பால் ஷாவும் தற்போது இணைந்து வாழவில்லை. இவர்களுக்கு இல்திஜா, இர்திக் என்ற இருமகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் தனது தாயாரின் பெயரை பின்னொட்டாக (surname) இணைத்துக் கொண்ட நிலையில், இளைய மகள் தனது தந்தையுடனான பிணைப்பை அதிகரித்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது இர்திக் ஜாவித் தனது பாஸ்போர்ட்டில் தாயார் பெயரை மாற்றம் செய்ய முயன்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டபோது, மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தற்போது வரை, இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’மாணவர்களுடைய மனதின் குரலைக் கேளுங்கள்’ - ராகுல் காந்தி

ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தியின் இளைய மகள் இர்திக் ஜாவித் தனது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் மெகபூபா முப்தி என்ற அவரது தாயாரின் பெயரை மெகபூபா சையத் என மாற்றவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதற்காக உள்ளூர் செய்தித்தாளில் ஒரு நோட்டீஸ் ஒன்றினையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றத்தில் ஏதேனும் மாற்றம் இருப்பின், ஏழு நாள்களுக்குள் துறைச் சார்ந்த அலுவலர்களிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

மெகபூபா முப்தியும் அவரது கணவர் ஜாவித் இக்பால் ஷாவும் தற்போது இணைந்து வாழவில்லை. இவர்களுக்கு இல்திஜா, இர்திக் என்ற இருமகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் தனது தாயாரின் பெயரை பின்னொட்டாக (surname) இணைத்துக் கொண்ட நிலையில், இளைய மகள் தனது தந்தையுடனான பிணைப்பை அதிகரித்துக் கொண்டார்.

இந்நிலையில், தற்போது இர்திக் ஜாவித் தனது பாஸ்போர்ட்டில் தாயார் பெயரை மாற்றம் செய்ய முயன்றுள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் சிறப்புத் தகுதி ரத்து செய்யப்பட்டபோது, மெகபூபா முப்தி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். தற்போது வரை, இவர் காவலில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:’மாணவர்களுடைய மனதின் குரலைக் கேளுங்கள்’ - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.