ETV Bharat / bharat

2 பயங்கரவாதிகள் பற்றிய தகவலுக்கு ரூ.15 லட்சம் அறிவித்த காஷ்மீர் காவல் துறை!

author img

By

Published : Oct 22, 2019, 9:58 PM IST

தோடா:  ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில காவல் துறையினர் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இரு தீவிரவாதிகள்

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தோடா காவல் துறை சார்பாக வங்கிகள் முன்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்தச் சுவரொட்டியில் ஒருவருடைய பெயர் ஹரூண் அப்பாஸ் வாணி. இவர் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர் என்றும் காட் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டு அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இன்னொருவர் மசூத் அஹ்மத், மஜ்மி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் பேசுகையில், "இரண்டு பயங்கரவாதிகளையும் தீவிரமாகத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாவோ பிடிப்போம். ஹரூண் என்பவர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டுவருகிறார்" எனக் கூறினார்.

மேலும் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு முதல் முறையாக காவல் துறை சார்பாக சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: தகவல் அளித்தால் தக்க சன்மானம்' - கொள்ளை வழக்கில் எஸ்.பி. அறிவிப்பு

ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் இரண்டு பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தோடா காவல் துறை சார்பாக வங்கிகள் முன்பு சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அந்தச் சுவரொட்டியில் ஒருவருடைய பெயர் ஹரூண் அப்பாஸ் வாணி. இவர் எம்.பி.ஏ. பட்டம் படித்தவர் என்றும் காட் கிராமத்தைச் சேர்ந்தவர் எனவும் குறிப்பிடப்பட்டு அவருடைய புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் இன்னொருவர் மசூத் அஹ்மத், மஜ்மி கிராமத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து காவல் துறை அலுவலர் ஒருவர் பேசுகையில், "இரண்டு பயங்கரவாதிகளையும் தீவிரமாகத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. நிச்சயம் அவர்களை உயிருடனோ அல்லது பிணமாவோ பிடிப்போம். ஹரூண் என்பவர் மாநிலத்தில் உள்ள இளைஞர்களைக் குறிவைத்து தடைசெய்யப்பட்ட இயக்கங்களில் சேர்க்க தீவிரமாக செயல்பட்டுவருகிறார்" எனக் கூறினார்.

மேலும் பயங்கரவாதிகளை பிடிப்பதற்கு முதல் முறையாக காவல் துறை சார்பாக சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: தகவல் அளித்தால் தக்க சன்மானம்' - கொள்ளை வழக்கில் எஸ்.பி. அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.