பாகிஸ்தான் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறி அத்துமீறிய தாக்குதல், பயங்கரவாத ஊடுருவல் உள்ளிட்ட தீங்கு விளைவிக்கும் செயல்களில் அவ்வப்போது ஈடுபட்டுவருகிறது. அதுமட்டுமின்றி இந்தியாவிற்குள் ஆயுதங்களையும் கடத்தி வரும் முயற்சியும் நடைபெறுகின்றன.
இந்த சதித்திட்டங்களை எல்லையில் இருக்கும் இந்திய ராணுவ பாதுகாப்பு படையினர் திறமையாக கையாண்டு தடுத்து வருகின்றனர். அந்த வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியிலிருந்து ஆயுதங்களை கடத்தும் பாகிஸ்தான் முயற்சியை இந்திய ராணுவம் மீண்டும் தடுத்து நிறுத்தியுள்ளது.
இந்திய எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியருகே, ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதி வழியாக ஆயுதங்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் காஷ்மீர் போலீஸ் மற்றும் தங்தார் பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
அங்கு கிடந்த பையை சோதனையிட்டதில் 5 பிஸ்டல்கள், தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை இருப்பது தெரியவந்தது. இது கடந்த ஐந்து நாள்களில் பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது முயற்சியாகும் எனக் கூறப்படுகிறது.