ETV Bharat / bharat

'உலகின் மருந்தகமாக இந்தியா செயல்படுகிறது' - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்!

author img

By

Published : May 30, 2020, 3:40 AM IST

டெல்லி: கரோனா பேரிடர் காலத்தில், உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பா ஒன்றிய வெளியுறவுத் திட்டத் தலைவர் ஜோசப் போரலுடன் கரோனாவிற்குப் பின்னான பொருளாதார மீட்பு குறித்தும், இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்தின் 15ஆவது மாநாட்டு ஏற்பாட்டு குறித்தும் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் மற்ற நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத் தொடர்பை அதிகரித்துள்ளது என இந்தக் கலந்துரையாடலில், பங்கேற்ற வெளியுறவுத் துறைச் செயலாளர் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "கரோனா பேரிடர் காலத்தில் மற்ற நாடுகளின் மருந்து தேவைக்கு ஏற்ப, அவை வைத்த கோரிக்கையின்படி, அவர்களுக்கு மருந்துகளை அளித்து உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டது.

வளர்ந்த நாடுகளையும் வளர்ந்துவரும் நாடுகளையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவரும் இந்தியா, அந்நாடுகளில் இருவழி பரிமாற்றம் மூலம் தகவல், பொருள்களை கொடுத்தும், ஆலோசனைகளை வழங்கியும் வருகிறது.

தொடர்ந்து சார்க், பிரிக்ஸ், ஜி - 20 உள்பட ஐரோப்பா ஒன்றியம் ஆகியவைகளுடன் விரைவில் மாநாடுகள் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன': ஹர்ஷ் வர்தன்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐரோப்பா ஒன்றிய வெளியுறவுத் திட்டத் தலைவர் ஜோசப் போரலுடன் கரோனாவிற்குப் பின்னான பொருளாதார மீட்பு குறித்தும், இந்திய - ஐரோப்பிய ஒன்றியத்தின் 15ஆவது மாநாட்டு ஏற்பாட்டு குறித்தும் காணொலி மூலம் கலந்துரையாடினார்.

கரோனா நோய்த்தொற்று காலத்தில் மற்ற நாடுகளுடன் இந்தியா பொருளாதாரத் தொடர்பை அதிகரித்துள்ளது என இந்தக் கலந்துரையாடலில், பங்கேற்ற வெளியுறவுத் துறைச் செயலாளர் பட்டாச்சாரியா தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து பேசிய ஜெய்சங்கர், "கரோனா பேரிடர் காலத்தில் மற்ற நாடுகளின் மருந்து தேவைக்கு ஏற்ப, அவை வைத்த கோரிக்கையின்படி, அவர்களுக்கு மருந்துகளை அளித்து உலகின் மருந்தகமாக இந்தியா செயல்பட்டது.

வளர்ந்த நாடுகளையும் வளர்ந்துவரும் நாடுகளையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டுவரும் இந்தியா, அந்நாடுகளில் இருவழி பரிமாற்றம் மூலம் தகவல், பொருள்களை கொடுத்தும், ஆலோசனைகளை வழங்கியும் வருகிறது.

தொடர்ந்து சார்க், பிரிக்ஸ், ஜி - 20 உள்பட ஐரோப்பா ஒன்றியம் ஆகியவைகளுடன் விரைவில் மாநாடுகள் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க: 'கரோனா, வெட்டுக்கிளி, அதிக வெப்பம் எனத் தொடர் பிரச்னைகள் வருகின்றன': ஹர்ஷ் வர்தன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.