ETV Bharat / bharat

பிஎஸ்எல்வி சி-47 வெற்றி - மகிழ்ச்சியில் இஸ்ரோ சிவன்!

author img

By

Published : Nov 27, 2019, 10:52 AM IST

பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் கார்டோசாட்-3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது, தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

I am happy that PSLV-C47 injected precisely in the orbit with 13 other satellites, says ISRO Sivan
I am happy that PSLV-C47 injected precisely in the orbit with 13 other satellites, says ISRO Sivan

ராணுவப் பயன்பாட்டிற்காக இஸ்ரோவால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோளையும், அமெரிக்க நாட்டினுடைய 13 நானோ வகை செயற்கைக்கோள்களையும் தாங்கிய பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் இன்று காலை 9:28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர், கார்டோசாட் சி-3 செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், '' பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக 14 செயற்கைக்கோள்களும் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்சியளிக்கிறது. இந்தக் கடினமான பணியையும் நாம் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு உழைத்த அனைத்து சக பணியாளர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 6 ராக்கெட்கள், 7 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 13 திட்டங்கள் இஸ்ரோ வசம் உள்ளன '' என்றார்.

சந்திராயன்-2 விண்கலம் 90 விழுக்காடு வெற்றி பெற்றிருந்தாலும், கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. அதற்குப் பின் இஸ்ரோ செயல்படுத்திய அடுத்தத் திட்டமான ராணுவ கண்காணிப்பிற்கான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிபெற்றதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் இது இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

ராணுவப் பயன்பாட்டிற்காக இஸ்ரோவால் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கார்டோசாட்-3 செயற்கைக்கோளையும், அமெரிக்க நாட்டினுடைய 13 நானோ வகை செயற்கைக்கோள்களையும் தாங்கிய பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் இன்று காலை 9:28 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பின்னர், கார்டோசாட் சி-3 செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், '' பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக 14 செயற்கைக்கோள்களும் புவியின் சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது மகிழ்சியளிக்கிறது. இந்தக் கடினமான பணியையும் நாம் செய்து வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு உழைத்த அனைத்து சக பணியாளர்களுக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 6 ராக்கெட்கள், 7 செயற்கைக்கோள்கள் என மொத்தம் 13 திட்டங்கள் இஸ்ரோ வசம் உள்ளன '' என்றார்.

சந்திராயன்-2 விண்கலம் 90 விழுக்காடு வெற்றி பெற்றிருந்தாலும், கடைசி நிமிடத்தில் தோல்வியடைந்தது. அதற்குப் பின் இஸ்ரோ செயல்படுத்திய அடுத்தத் திட்டமான ராணுவ கண்காணிப்பிற்கான கார்டோசாட்-3 செயற்கைக்கோள் திட்டம் வெற்றிபெற்றதால், இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமில்லாமல் இது இந்திய மக்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க:கார்டோசாட் - 3 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம்!

Intro:Body:

விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்டின் சிறப்புகள்! #PSLVC47 #PSLV #ISRO



https://www.etvbharat.com/tamil/tamil-nadu/bharat/bharat-news/pslv-c47-set-to-launch-cartosat-3-at-25th-november-says-isro/tamil-nadu20191119121825727


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.