ETV Bharat / bharat

ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை: சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு!

author img

By

Published : Aug 27, 2020, 5:46 PM IST

புதுச்சேரி: அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை நடத்தப்படும் முறைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

minister
minister

புதுச்சேரியில் கரோனா தொற்றை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜிப்மர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கரோனா பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முடிவுகளை தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனையில் அரைமணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 100 பேரின் உமிழ்நீர் மாதிரிகளை சேமித்த பிறகு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால் 3 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை நடத்தப்படும் முறைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆகியோரிடம் பரிசோதனை தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: பூட்டிக் கிடக்கும் அங்கன்வாடிகள்: போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறும் அவலம்!

புதுச்சேரியில் கரோனா தொற்றை கண்டறிய ஆர்டிபிசிஆர் பரிசோதனை ஜிப்மர், கதிர்காமம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படுகிறது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் கரோனா பரிசோதனைக்கு வருவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முடிவுகளை தெரிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

தற்போது புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை தொடங்கியுள்ளது. இந்த பரிசோதனையில் அரைமணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். 100 பேரின் உமிழ்நீர் மாதிரிகளை சேமித்த பிறகு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது. இதனால் 3 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும்.

இந்நிலையில், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ஆன்டிஜன் ரேபிட் பரிசோதனை நடத்தப்படும் முறைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவ கண்காணிப்பாளர் வாசுதேவன், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் ஆகியோரிடம் பரிசோதனை தொடர்பான விளக்கங்களை கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: பூட்டிக் கிடக்கும் அங்கன்வாடிகள்: போதை ஆசாமிகளின் கூடாரமாக மாறும் அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.