ETV Bharat / bharat

'விமானப் பயணங்களின் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசின் உத்தரவில் தலையிட முடியாது'

விமானப் பயணங்களின் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

author img

By

Published : Jun 5, 2020, 10:05 PM IST

டெல்லி உயர் நீதிமன்றம்
டெல்லி உயர் நீதிமன்றம்

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இரண்டு மாதங்களாக முடக்கப்பட்ட உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு தேவையற்ற விமானப் பயணத்தை தவிர்க்கும் நோக்கில் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தது.

விமானப் பயணங்களின் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, வீர் விக்ராந்த் சவுகான் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது.

பேரிடர் காலத்தில் அத்தியாவசியப் பயணத்தைத் தவிர, மற்ற பயணங்களை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த முடிவை விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிமன்றம், "விமான சேவை மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த பேரிடர் காலத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணிகள், விமான நிறுவனங்கள் ஆகியோரை சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. பேரிடர் காலத்தில் எடுக்கப்பட்டுள்ள அரசின் இந்த முடிவை நியாயமற்றது, தன்னிச்சையானது என சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இரண்டு மாதங்களாக முடக்கப்பட்ட உள்நாட்டுப் பயணிகள் விமான சேவை மே 25ஆம் தேதி மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனால், மூன்று மாதங்களுக்கு தேவையற்ற விமானப் பயணத்தை தவிர்க்கும் நோக்கில் குறைந்தபட்ச, அதிகபட்ச விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்தது.

விமானப் பயணங்களின் விலையை நிர்ணயிக்கும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, வீர் விக்ராந்த் சவுகான் என்பவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி டி.என். படேல், நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோர் கொண்ட அமர்வு, மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனத் தெரிவித்தது.

பேரிடர் காலத்தில் அத்தியாவசியப் பயணத்தைத் தவிர, மற்ற பயணங்களை தவிர்க்கும் நோக்கிலேயே இந்த முடிவை விமானப் போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர். இதுகுறித்து நீதிமன்றம், "விமான சேவை மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இந்த பேரிடர் காலத்தில் நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பயணிகள், விமான நிறுவனங்கள் ஆகியோரை சமாதானப் படுத்தும் வகையில், மத்திய அரசு விலையை நிர்ணயம் செய்துள்ளது. பேரிடர் காலத்தில் எடுக்கப்பட்டுள்ள அரசின் இந்த முடிவை நியாயமற்றது, தன்னிச்சையானது என சொல்ல முடியாது" என தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திருப்பதியில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.