ETV Bharat / bharat

கரோனா உறுதி: இன்னுயிரை மாய்த்துக் கொண்ட வைர வியாபாரி!

author img

By

Published : Jul 11, 2020, 9:14 AM IST

குஜராத்: கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியானதையடுத்து, வைர வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Guj: Diamond trader kills self after testing COVID-19 positive
Guj: Diamond trader kills self after testing COVID-19 positive

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன. இருந்தபோதிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் நான்புராவைச் சேர்ந்த 63 வயது வைர வியாபாரிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிகுந்த மனவேதனையுடன் இருந்து ஷா தனது வாகனத்தில் நேற்று (ஜூலை 10) காலை ரயில் நிலையம் சென்றார். பின்னர் அங்கு வந்த ரயில் முன் பாய்ந்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், ஷா உடலை மீட்டு உடற் கூறாவிற்கு அனுப்பி வைத்தனர். இதில் ஷாவின் சட்டை பையில் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வைத்துள்ளார். அதில், கரோனா வைரஸ் உறுதியானதிலிருந்து மிகுந்த வேதனையுடன் இருந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். ஷாவிற்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

இதையும் படிங்க...இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் தீவிராக களமிறங்கியுள்ளன. இருந்தபோதிலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93 ஆயிரத்து 802ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 95 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் நான்புராவைச் சேர்ந்த 63 வயது வைர வியாபாரிக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மிகுந்த மனவேதனையுடன் இருந்து ஷா தனது வாகனத்தில் நேற்று (ஜூலை 10) காலை ரயில் நிலையம் சென்றார். பின்னர் அங்கு வந்த ரயில் முன் பாய்ந்து தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.

தகவலறிந்து வந்த காவல் துறையினர், ஷா உடலை மீட்டு உடற் கூறாவிற்கு அனுப்பி வைத்தனர். இதில் ஷாவின் சட்டை பையில் தற்கொலைக்கான காரணத்தை குறிப்பிட்டு கடிதம் ஒன்றை வைத்துள்ளார். அதில், கரோனா வைரஸ் உறுதியானதிலிருந்து மிகுந்த வேதனையுடன் இருந்ததால், தற்கொலை செய்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார். ஷாவிற்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர்.

இதையும் படிங்க...இந்தியாவில் 8 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.