முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலோன் உள்ளிட்ட பல உயர்நிலைப் பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை சைபர் தாக்குதல் நடத்தி, ஹேக் செய்துள்ளனர்.
பல உலகளாவிய கார்ப்பரேட் தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் வணிகர்களின் கணக்குகளை ஹேக் செய்ய ட்விட்டரின் அமைப்புகளுக்கு, ஹேக்கர்கள் அணுகலைப் பெற்றதாக வெளியான தகவல்களுக்குப் பிறகு, இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) ஆராய்ந்து செயல்பட்டது.
தீங்கிழைக்கும் ட்வீட்டுகள் மற்றும் இணைப்புகளைப் பார்வையிட்டு, இந்தியப் பயனர்கள் பற்றிய தகவல்களையும், பாதிக்கப்பட்ட பயனர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத அணுகல் குறித்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என்பதையும் சிஇஆர்டி-இன் ட்விட்டரிடம் கேட்டுள்ளது.
ஹேக்கிங் சம்பவத்தின் தாக்கத்தைத் தணிக்க ட்விட்டர் மேற்கொண்ட தீர்வு நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் கோரியுள்ளது.