புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் தாமதத்தால், அரசுக்கு கடந்த ஒரு வாரத்தில் பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, "பிரதமரின் அறிவிப்பால் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எந்த பயனும் இல்லை. மின்சாரம் தனியார் மயமாக்குவதை புதுச்சேரி அரசு கடுமையாக எதிர்க்கிறது.
மத்திய அரசு கரோனா நிதி வழங்குவதில் அரசியல் செய்யக்கூடாது. ஒரு வார கால தாமதத்திற்கு பின்னரே கிரண்பேடி, மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார். இதனால் மாநில அரசுக்கு பெருமளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
குடும்ப அட்டைதாரர்களுக்கு வரும் வாரத்தில் இலவச அரிசி வழங்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 29 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தினசரி தொற்று எண்ணிக்கை கூடி வருவதால், மாநில எல்லைகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆர்.எஸ். பாரதி கைது விவகாரத்தில் அதிமுக அரசு காழ்புணர்ச்சி காரணமாக பொய் வழக்கு தொடுத்துள்ளது" இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் - நாராயணசாமி ஆவேசம்