ETV Bharat / bharat

'இனி எல்லா இருக்கையும் உங்களோடு தான்' - கோ ஏர் விமானத்தின் புதிய வசதி!

மும்பை: கோ ஏர் விமான போக்குவரத்து நிறுவனம் புதிதாக 'கோஃப்ளை பிரைவேட்' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

author img

By

Published : Jul 25, 2020, 9:15 AM IST

கோ ஏர்
கோ ஏர்

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து துறை கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினாலும், பெரும்பாலான மக்கள் கரோனா அச்சத்தால் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்காகவும், மக்களை கவர்வதற்காகவும் பல்வேறு வகையான புதிய திட்டங்களையும், சலுகைகளையும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், கோ ஏர் என்ற‌ விமான போக்குவரத்து நிறுவனம், புதிய முயற்சியாக கோஃப்ளை பிரைவேட்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது மக்களுக்கு ஒரு பிரைவேட் ஸ்பேஸ் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோஃப்ளை பிரைவேட்' வசதியானது பல வரிசைகளை ஒருவர் ஒரே PNR மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம், பயணிகளுக்கு நம்பிக்கை உருவாகிறது. கரோனா அச்சத்தால் மக்கள் தனிமையிலே பயணம் செய்யவே விரும்புகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக கோஏர் நிர்வாக இயக்குநர் ஜெ வாடியா பேசுகையில், "சார்ட்டர் விமானத்தின் வசதிகள் எளிதில் யாருக்கும் கிடைத்திடாது. ஆனால், அத்தகைய வசதியை அனைவருக்கும் கொண்டுவந்த முதல் விமான நிறுவனம் கோ ஏர் ஆகும். சார்ட்டர் விமானத்தின் கட்டணத்தை ஒப்பிடுகையில் கோஃபிளை பிரைவேட் விமான கட்டணம் மிகவும் குறைவு தான். இந்த வசதியினால் வாடிக்கையாளர்களுக்கு பிரைவேட் ஸ்பேஸ் அதிகளவில் கிடைக்கிறது" எனத் தெரிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், விமான போக்குவரத்து துறை கடுமையான நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. மே 25ஆம் தேதி உள்நாட்டு விமான போக்குவரத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கினாலும், பெரும்பாலான மக்கள் கரோனா அச்சத்தால் பயணம் செய்வதை தவிர்த்து வந்தனர். ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பாதிப்பை சரிசெய்வதற்காகவும், மக்களை கவர்வதற்காகவும் பல்வேறு வகையான புதிய திட்டங்களையும், சலுகைகளையும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், கோ ஏர் என்ற‌ விமான போக்குவரத்து நிறுவனம், புதிய முயற்சியாக கோஃப்ளை பிரைவேட்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வசதியானது மக்களுக்கு ஒரு பிரைவேட் ஸ்பேஸ் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோஃப்ளை பிரைவேட்' வசதியானது பல வரிசைகளை ஒருவர் ஒரே PNR மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் மூலம், பயணிகளுக்கு நம்பிக்கை உருவாகிறது. கரோனா அச்சத்தால் மக்கள் தனிமையிலே பயணம் செய்யவே விரும்புகின்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இது தொடர்பாக கோஏர் நிர்வாக இயக்குநர் ஜெ வாடியா பேசுகையில், "சார்ட்டர் விமானத்தின் வசதிகள் எளிதில் யாருக்கும் கிடைத்திடாது. ஆனால், அத்தகைய வசதியை அனைவருக்கும் கொண்டுவந்த முதல் விமான நிறுவனம் கோ ஏர் ஆகும். சார்ட்டர் விமானத்தின் கட்டணத்தை ஒப்பிடுகையில் கோஃபிளை பிரைவேட் விமான கட்டணம் மிகவும் குறைவு தான். இந்த வசதியினால் வாடிக்கையாளர்களுக்கு பிரைவேட் ஸ்பேஸ் அதிகளவில் கிடைக்கிறது" எனத் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.