ETV Bharat / bharat

சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை:பெண் உட்பட இருவர் கைது

author img

By

Published : Aug 7, 2019, 8:16 PM IST

புதுச்சேரி: காரைக்காலில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை செய்த பெண் உட்பட இருவரை 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்

GIRL CHILD abused POCSO ACT

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2ஆம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பெண்மணியின் செல்ஃபோன் எண்ணை டிராக் செய்தபோது திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார் அப்பெண்மணியை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்ற அப்பெண்மணி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்ற பெண்மணி மற்றும் காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த சுரேஷ் (26) ஆகிய இருவரையும் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

சிறுமியைக்கடத்தியவர்கள்

15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சுரேஷ் காரைக்கால் கிளை சிறையிலும் அப்பெண்மணி புதுச்சேரி காலாப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரியைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடந்த 2ஆம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் அப்பெண்மணியின் செல்ஃபோன் எண்ணை டிராக் செய்தபோது திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரியவந்தது.

அங்கு விரைந்த போலீசார் அப்பெண்மணியை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டனர். இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் சிறுமியை கடத்திச் சென்ற அப்பெண்மணி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்ற பெண்மணி மற்றும் காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த சுரேஷ் (26) ஆகிய இருவரையும் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.

சிறுமியைக்கடத்தியவர்கள்

15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, சுரேஷ் காரைக்கால் கிளை சிறையிலும் அப்பெண்மணி புதுச்சேரி காலாப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

Intro:சிறுமியை கடத்தி லெஸ்பியன் உறவு. 'போக்சோ' சட்டத்தில் பெண் உட்பட இருவர் கைது. மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.Body:சிறுமியை கடத்தி லெஸ்பியன் உறவு. 'போக்சோ' சட்டத்தில் பெண் உட்பட இருவர் கைது. மேலும் ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு.

காரைக்காலை அடுத்துள்ள கோட்டுச்சேரியை சேர்ந்தவர் ஜோதி என்பவரது மனைவி கலைஅமுது (22). இவர் பிள்ளைத்தெருவாசல் கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி (பள்ளி மாணவி)யை கடந்த 2-ம் தேதியன்று கடத்திச் சென்றதாக சிறுமியின் தாய் ராணி காரைக்கால் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கலைஅமுது அந்த சிறுமியுடன் காணாமல் போனது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து கலைஅமுதுவின் செல்போன் எண்ணை போலீசார் ட்ராக் செய்தபோது அவர் சென்னை திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் என்னும் ஊரில் தங்கியிருப்பது தெரிய வந்தது. க்ரைம் போலீசார் அங்கு விரைந்து கலைஅமுதுவை கைது செய்து அவரிடமிருந்து சிறுமியை மீட்டு இருவரையும் காரைக்கால் கொண்டு வந்து விசாரணை செய்தனர். விசாரணையில் கலைஅமுது சிறுமியை கடத்திச் சென்று அவருடன் லெஸ்பியன் உறவு கொண்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக சிறுமியை கடத்திச் சென்று லெஸ்பியன் உறவு கொண்ட கலைஅமுது (22) மற்றும் சிறுமியை காரில் கடத்திச் செல்ல உடந்தையாக இருந்த கோட்டுச்சேரியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ் (26) ஆகிய இருவரையும் "போக்சோ" சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார், இருவரையும் காரைக்கால் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள். .இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க சிறப்பு நீதிபதி சிவகடாட்சம் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சுரேஷ் காரைக்கால் கிளை சிறையில் அடைக்கப்பட்டார். கலை அமுது புதுச்சேரி காலாப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். மேலும், வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தலைமறைவாக உள்ள காரைக்கால் மதகடியை சேர்ந்த கணேஷ் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.