ETV Bharat / bharat

மோடி தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம்!

author img

By

Published : May 31, 2019, 7:42 PM IST

டெல்லி: பிரதமராக முறைப்படி மோடி பொறுப்பேற்றதையடுத்து, அவரது தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது.

முதல் அமைச்சரவை கூட்டம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்திய மக்களவைத் தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதில் பாஜக 303 இடங்களில் வெற்றி வாகை சூடி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், இணை அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், தனிப் பொறுப்பு வழங்கப்பட்ட 9 பேர் என மொத்தமாக 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பொறுப்பேற்று கொண்டார். இதைத் தொடர்நது மாலை 5மணிக்கு அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழக்கும் பாதுகாப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கும் கோப்பில் பிரதமராக மோடி முதல் கையெழுத்திட்டார்.

அதன்படி, வீரர்களின் ஆண் குழந்தைக்கு ரூ.2000-யில் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல்,பெண் குழந்தைக்கு ரூ.2,250-யில் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவாக இந்திய மக்களவைத் தேர்தல் கருதப்படுகிறது. இந்நிலையில், 17ஆவது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றிபெற்றது. இதில் பாஜக 303 இடங்களில் வெற்றி வாகை சூடி தனிப்பெரும்பான்மையுடன் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் கேபினெட் அந்தஸ்து கொண்ட மத்திய அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், இணை அமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்ட 24 பேர், தனிப் பொறுப்பு வழங்கப்பட்ட 9 பேர் என மொத்தமாக 57 அமைச்சர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று பொறுப்பேற்று கொண்டார். இதைத் தொடர்நது மாலை 5மணிக்கு அவரது தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழக்கும் பாதுகாப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு ஒப்புதல் வழங்கும் கோப்பில் பிரதமராக மோடி முதல் கையெழுத்திட்டார்.

அதன்படி, வீரர்களின் ஆண் குழந்தைக்கு ரூ.2000-யில் இருந்து ரூ.2500 ஆக உயர்த்தி வழங்கப்படும். அதேபோல்,பெண் குழந்தைக்கு ரூ.2,250-யில் இருந்து ரூ.3,000 ஆக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.