ETV Bharat / bharat

யானை கொல்லப்பட்ட விவகாரம்: கேரளாவை வில்லனாக்க முயற்சி - பினராயி விஜயன்

திருவனந்தபுரம்: யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் கேரளாவை வில்லனாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

author img

By

Published : Jun 5, 2020, 7:28 PM IST

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளா மாநிலம் பாலக்காட்டில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மலப்புர மாவட்டத்தில் விலங்குகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வேட்டைக்காரர்கள், வனவிலங்குகளை கொலை செய்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற பாலக்காட்டை விட்டுவிட்டு மலப்புரம் குறித்து மேனகா கருத்த தெரிவித்ததால், இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கேரளாவையும், மலப்புரத்தையும் வில்லனாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தவறான, பொய்யான கருத்துகள் மூலம் வெறுப்பு பரப்புரையை மத்திய அமைச்சர்கள் மேற்கொள்கிறார்கள். யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் கேரளாவையும் மலப்புரத்தையும் வில்லானக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்.

பரப்புரையை தவறான புரிதலில் மேற்கொண்டிருந்தால், மேனகா காந்தி திருத்திக் கொண்டிருப்பார். ஆனால், தன்னை திருத்திக் கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. தவறான தகவல்கள் மூலம் கேரளா மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பும் முயற்சி இது என்பது இதன்மூலம் தெரியவருகிறது. கேரளாவின் சுயமரியாதையை கெடுக்கும் விதமான இந்த முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இதையும் படிங்க: திருப்பதியில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

கேரளா மாநிலம் பாலக்காட்டில் வெடி மறைத்து வைக்கப்பட்டிருந்த அன்னாசி பழத்தை சாப்பிட்டு கர்ப்பிணி யானை உயிரிழந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மலப்புர மாவட்டத்தில் விலங்குகளுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. வேட்டைக்காரர்கள், வனவிலங்குகளை கொலை செய்பவர்கள் மீது எந்த விதமான நடவடிக்கையும் எடுப்பதில்லை என தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற பாலக்காட்டை விட்டுவிட்டு மலப்புரம் குறித்து மேனகா கருத்த தெரிவித்ததால், இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், கேரளாவையும், மலப்புரத்தையும் வில்லனாக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "தவறான, பொய்யான கருத்துகள் மூலம் வெறுப்பு பரப்புரையை மத்திய அமைச்சர்கள் மேற்கொள்கிறார்கள். யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் கேரளாவையும் மலப்புரத்தையும் வில்லானக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனை கடுமையாக கண்டிக்கிறேன்.

பரப்புரையை தவறான புரிதலில் மேற்கொண்டிருந்தால், மேனகா காந்தி திருத்திக் கொண்டிருப்பார். ஆனால், தன்னை திருத்திக் கொள்ள அவர் முயற்சிக்கவில்லை. தவறான தகவல்கள் மூலம் கேரளா மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பும் முயற்சி இது என்பது இதன்மூலம் தெரியவருகிறது. கேரளாவின் சுயமரியாதையை கெடுக்கும் விதமான இந்த முயற்சியை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இதையும் படிங்க: திருப்பதியில் ஜூன் 10 முதல் பக்தர்களுக்கு அனுமதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.