ETV Bharat / bharat

‘திறமையான மனித வளங்களே உண்மையான வலிமை’ - கட்டுரை

author img

By

Published : Mar 6, 2020, 9:16 AM IST

மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா 50 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை அடையாளம் காணத் தவறிவிட்டன. மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் சவால்களை புதிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

NPR
NPR

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை ஆறு முறை நடந்துள்ளது. இந்த முறை, சாதி வாரியான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மனித வளங்களின் செயல்திறனின் மூலம் கிடைக்கும் அதன் பொருளாதார வளங்கள் 'மக்கள்தொகையின் பங்களிப்பு' என்று கருதப்படுகிறது சமீபத்திய ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் நலத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பரவலாக அளிக்கின்றன. அந்த திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை விவரங்கள் அவசியமாகிறது. இடஒதுக்கீட்டை உருவாக்குவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக மாற்றத்தை அடைய தரமான கல்வி இன்றியமையாதது. இதன் மூலம், திறமையான மனித வளங்கள் கிடைக்கும்.

அதே சமயத்தில் எதிர்மறையான முடிவுகளாக இருந்தால் மக்கள் தொகை நாட்டிற்கு சாபம் ஆகிவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை அறிக்கை (2019)இன்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2027க்குள் சீனாவை மிஞ்சி உலகில் முதலிடத்தைப் பிடிக்கும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா 50 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை அடையாளம் காணத் தவறிவிட்டன. மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் சவால்களை புதிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

மக்கள்தொகை பெருகினால், மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து நாடு ஏழ்மையாக மாறும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் மக்களின் மனப்பான்மையும் தேவைகளும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எதிர்கால வருமான ஆதாரமாகவும், வயதான காலத்தில் ஒரு ஆதரவாகவும் பார்த்தார்கள். எனவே, அவர்கள் அதிகமான குழந்தைகளை பெறுவதில் ஆர்வம் காட்டினர்.

தற்போது மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவின்மை மற்றும் பழைய மரபுகள் அதிக மக்கள்தொகைக்கு வழிவகுத்தன. வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு காரணமாயின.

ஆசியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை இந்தியா பதிவு செய்து வருகிறது. மக்கள்தொகை வளர்ச்சி 1951-71 காலகட்டத்தில் 2.1 விழுக்காடாகவும், 1971-91 காலகட்டத்தில் 2.2 விழுக்காடாகவும் இருந்தது. 1991-2011க்கு இடைப்பட்ட காலத்தில் இது 1.8% ஆகவும், 2011-2016க்கு இடையில் 1.3% ஆக மேலும் குறைந்தது.

பொருளாதார கணக்கெடுப்பு (2019)ன்படி , 2011-12ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.1 விழுக்காடாக இருந்தது. இது 2021-2031 ஆம் ஆண்டில் 0.7 விழுக்காடாகவும், 2031-2041 ஆண்டில் 0.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் குறைவாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில், 20-59 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிப்பார்கள்.

2041க்குள், சராசரி வயது 59 வயதாக இருக்கும். மாதிரி பதிவு முறை தரவின்படி, பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மக்கள் தொகையை குறைக்கவும், மக்கள் தொகையை நிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் தரம், மக்கள்தொகையின் பங்களிப்பு, நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வருமான சமமின்மை ஆகியவை நாட்டின் எதிர்கால சவால்களாக இருக்கும்.

'முதுமை இந்தியா' கணக்கெடுப்பு அறிக்கை (2017)இன்படி, 60 வயதை கடந்தவர்கள் 2015இல் எட்டு விழுக்காடாக இருந்தனர். 2050-க்குள் அவர்களின் எண்ணிக்கை 19 விழுக்காடாக உயரும்.

மக்களை திறமையான மனித வளங்களாக உருவாக்க வேண்டும். இதை அடைவதற்கு, முதன்மை மற்றும் உயர் கல்வியில் அதிக அளவிலான சீர்திருத்தங்கள் அவசியம். ஆராய்ச்சி மனநிலையை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும் 'திறன் இந்தியா' போன்ற நிகழ்ச்சிகள் இளைஞர்களிடையே திறமைகளை வளர்க்க உதவும். இவை தொடர்ச்சியான செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிற்கல்வி திறன் வழங்கப்பட வேண்டும். நோய்களின் ஆரம்ப கட்டத்தை கண்டறிய கிராமப்புற மருத்துவம் பலப்படுத்தப்பட வேண்டும். இறுதியில், அவர்களை திறமையான மனித வளங்களாக பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை உருவாக்குபவர்களாக உருவாக்க வேண்டும்.

சில காலமாக நாடு பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. ஆயினும் கூட தொழிலாளர்கள், மென்பொருள் பொறியாளர் போன்ற கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்தும் அந்நிய செலாவணி தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற சமயங்களில் தான், வலுவான மனித வளங்கள் என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் என்று தெளிவாகத் தெரியும்.

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இருப்பினும், மக்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டதன் மூலம் உலகின் முக்கிய சக்தியாக மாறுவதற்கான அனைத்து திறமைகளையும் பெற்றுள்ளனர். அது இப்போது அமெரிக்காவிற்கு கூட ஒரு சவால் விடுகிறது.

திறமை இருக்கும்போது அதிக மக்கள் தொகை கூட ஒரு நாட்டிற்கு வரமாக இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்க சீனா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதற்கு நேர்மாறாக, அதிக மக்கள் தொகை திறமையாகவும் வளமாகவும் இல்லாவிட்டால் ஒரு சாபக்கேடாகவும் இருக்கலாம். எனவே இது தொடர்பாக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒரு பெண் படித்தால், முழு குடும்பமும் கல்வியறிவு பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பாதுகாப்போம்’ போன்ற திட்டங்கள் நன்கு செயல்படுத்தப்பட்டால் அவற்றை மனித வளத்தின் செல்வமாக மாற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

இந்த வகையான திட்டங்கள் நாட்டிற்கு 'மக்கள்தொகை பங்களிப்பினை' வழங்குகின்றன. அதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வேலையின்மை குறையும். பொருளாதார வளர்ச்சி ஒரு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

எனவே அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குடிமக்களை பொருளாதாரத்தை மேம்படுத்தும் மையங்களாக மாற்றுபவையாக இருக்க வேண்டும். திறமையான மனித வளத்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படும். அப்போது தான் ... மக்கள்தொகை வளர்ச்சி என்பது நாட்டிற்கு ஒரு வரமாக இருக்கும்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தேதி அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து மக்கள் தொகை கணக்கெடுப்பு இதுவரை ஆறு முறை நடந்துள்ளது. இந்த முறை, சாதி வாரியான விவரங்களை சேகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் மனித வளங்களின் செயல்திறனின் மூலம் கிடைக்கும் அதன் பொருளாதார வளங்கள் 'மக்கள்தொகையின் பங்களிப்பு' என்று கருதப்படுகிறது சமீபத்திய ஆண்டுகளில், தேசிய மற்றும் மாநில அளவிலான கட்சிகள் நலத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை பரவலாக அளிக்கின்றன. அந்த திட்டங்களை செயல்படுத்த மக்கள் தொகை விவரங்கள் அவசியமாகிறது. இடஒதுக்கீட்டை உருவாக்குவதிலும் அவை முக்கிய பங்கு வகிக்கிறது. சமூக மாற்றத்தை அடைய தரமான கல்வி இன்றியமையாதது. இதன் மூலம், திறமையான மனித வளங்கள் கிடைக்கும்.

அதே சமயத்தில் எதிர்மறையான முடிவுகளாக இருந்தால் மக்கள் தொகை நாட்டிற்கு சாபம் ஆகிவிடும். ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை அறிக்கை (2019)இன்படி, இந்தியாவின் மக்கள் தொகை 2027க்குள் சீனாவை மிஞ்சி உலகில் முதலிடத்தைப் பிடிக்கும்.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த இந்தியா 50 ஆண்டுகளாக குடும்பக் கட்டுப்பாடு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நடவடிக்கைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு காரணமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை அடையாளம் காணத் தவறிவிட்டன. மக்கள்தொகை வளர்ச்சியால் ஏற்படும் சவால்களை புதிய கண்ணோட்டத்தில் பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

மக்கள்தொகை பெருகினால், மக்களின் தனிநபர் வருமானம் குறைந்து நாடு ஏழ்மையாக மாறும் என்ற பொதுவான கருத்து நிலவுகிறது. 21ஆம் நூற்றாண்டில் மக்களின் மனப்பான்மையும் தேவைகளும் மாறிவிட்டன. ஒரு காலத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எதிர்கால வருமான ஆதாரமாகவும், வயதான காலத்தில் ஒரு ஆதரவாகவும் பார்த்தார்கள். எனவே, அவர்கள் அதிகமான குழந்தைகளை பெறுவதில் ஆர்வம் காட்டினர்.

தற்போது மேம்பட்ட மருத்துவ வசதிகள் காரணமாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மக்களின் கல்வியறிவின்மை மற்றும் பழைய மரபுகள் அதிக மக்கள்தொகைக்கு வழிவகுத்தன. வெவ்வேறு இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்களும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு காரணமாயின.

ஆசியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை இந்தியா பதிவு செய்து வருகிறது. மக்கள்தொகை வளர்ச்சி 1951-71 காலகட்டத்தில் 2.1 விழுக்காடாகவும், 1971-91 காலகட்டத்தில் 2.2 விழுக்காடாகவும் இருந்தது. 1991-2011க்கு இடைப்பட்ட காலத்தில் இது 1.8% ஆகவும், 2011-2016க்கு இடையில் 1.3% ஆக மேலும் குறைந்தது.

பொருளாதார கணக்கெடுப்பு (2019)ன்படி , 2011-12ஆம் ஆண்டில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 1.1 விழுக்காடாக இருந்தது. இது 2021-2031 ஆம் ஆண்டில் 0.7 விழுக்காடாகவும், 2031-2041 ஆண்டில் 0.5 விழுக்காடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பாலின விகிதத்தைப் பொறுத்தவரை ஆண்களை விட பெண்கள் குறைவாக உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. நம் நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அடுத்த பத்தாண்டுகளில், 20-59 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள் மக்கள்தொகையில் பெரும்பங்கு வகிப்பார்கள்.

2041க்குள், சராசரி வயது 59 வயதாக இருக்கும். மாதிரி பதிவு முறை தரவின்படி, பீகார், உத்தரபிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மக்கள் தொகையை குறைக்கவும், மக்கள் தொகையை நிலைப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாழ்க்கைத் தரம், மக்கள்தொகையின் பங்களிப்பு, நகர்ப்புற மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் வருமான சமமின்மை ஆகியவை நாட்டின் எதிர்கால சவால்களாக இருக்கும்.

'முதுமை இந்தியா' கணக்கெடுப்பு அறிக்கை (2017)இன்படி, 60 வயதை கடந்தவர்கள் 2015இல் எட்டு விழுக்காடாக இருந்தனர். 2050-க்குள் அவர்களின் எண்ணிக்கை 19 விழுக்காடாக உயரும்.

மக்களை திறமையான மனித வளங்களாக உருவாக்க வேண்டும். இதை அடைவதற்கு, முதன்மை மற்றும் உயர் கல்வியில் அதிக அளவிலான சீர்திருத்தங்கள் அவசியம். ஆராய்ச்சி மனநிலையை மாணவர்களிடையே ஊக்குவிக்க வேண்டும் 'திறன் இந்தியா' போன்ற நிகழ்ச்சிகள் இளைஞர்களிடையே திறமைகளை வளர்க்க உதவும். இவை தொடர்ச்சியான செயல்பாட்டில் இருக்க வேண்டும்.

கிராமப்புற பொருளாதாரத்தை வலுப்படுத்த தொழிற்கல்வி திறன் வழங்கப்பட வேண்டும். நோய்களின் ஆரம்ப கட்டத்தை கண்டறிய கிராமப்புற மருத்துவம் பலப்படுத்தப்பட வேண்டும். இறுதியில், அவர்களை திறமையான மனித வளங்களாக பயன்படுத்துவதன் மூலம் செல்வத்தை உருவாக்குபவர்களாக உருவாக்க வேண்டும்.

சில காலமாக நாடு பொருளாதார மந்தநிலையை சந்தித்து வருகிறது. ஆயினும் கூட தொழிலாளர்கள், மென்பொருள் பொறியாளர் போன்ற கிட்டத்தட்ட அனைத்து வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களிடமிருந்தும் அந்நிய செலாவணி தொடர்ந்து வருகிறது. இதுபோன்ற சமயங்களில் தான், வலுவான மனித வளங்கள் என்பது நாட்டின் பொருளாதாரத்திற்கு பலம் என்று தெளிவாகத் தெரியும்.

சீனா உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. இருப்பினும், மக்கள் அனைத்து துறைகளிலும் தங்கள் திறமைகளை மேம்படுத்திக் கொண்டதன் மூலம் உலகின் முக்கிய சக்தியாக மாறுவதற்கான அனைத்து திறமைகளையும் பெற்றுள்ளனர். அது இப்போது அமெரிக்காவிற்கு கூட ஒரு சவால் விடுகிறது.

திறமை இருக்கும்போது அதிக மக்கள் தொகை கூட ஒரு நாட்டிற்கு வரமாக இருக்கக்கூடும் என்பதை நிரூபிக்க சீனா ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இதற்கு நேர்மாறாக, அதிக மக்கள் தொகை திறமையாகவும் வளமாகவும் இல்லாவிட்டால் ஒரு சாபக்கேடாகவும் இருக்கலாம். எனவே இது தொடர்பாக இந்தியா விழிப்புடன் இருக்க வேண்டும்.

ஒரு பெண் படித்தால், முழு குடும்பமும் கல்வியறிவு பெறும் என்பது அனைவரும் அறிந்ததே. ‘பெண் குழந்தைகளை படிக்க வைப்போம், பாதுகாப்போம்’ போன்ற திட்டங்கள் நன்கு செயல்படுத்தப்பட்டால் அவற்றை மனித வளத்தின் செல்வமாக மாற்றி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

இந்த வகையான திட்டங்கள் நாட்டிற்கு 'மக்கள்தொகை பங்களிப்பினை' வழங்குகின்றன. அதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வேலையின்மை குறையும். பொருளாதார வளர்ச்சி ஒரு உண்மையான வளர்ச்சியாக இருக்கும்.

எனவே அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குடிமக்களை பொருளாதாரத்தை மேம்படுத்தும் மையங்களாக மாற்றுபவையாக இருக்க வேண்டும். திறமையான மனித வளத்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்படும். அப்போது தான் ... மக்கள்தொகை வளர்ச்சி என்பது நாட்டிற்கு ஒரு வரமாக இருக்கும்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கில் நால்வருக்கும் தூக்கு தேதி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.