ETV Bharat / bharat

கொரோனாவால் பொருளாதசாரம் பாதிப்படைந்துள்ளது - காங்கிரஸ்

author img

By

Published : Mar 12, 2020, 10:30 PM IST

டெல்லி: கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ள நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

Congress
Congress

கொரோனா, யெஸ் வங்கி, பொருளாதார மந்த நிலை ஆகிய விவகாரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இவைகளை முன்வைத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர், "கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆனால், பிரமதரும் நிதியமைச்சரும் அமைதி காக்கின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். மோடியின் நண்பர்களால் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள யெஸ் வங்கியை மீட்டெடுப்பதற்கே சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை ஆகியவற்றின் வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது. சென்செக்ஸ் 2, 700 புள்ளிகள் குறைந்துள்ளதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை தாங்கிக்கொள்ள வேண்டும். 72 மணி நேரத்தில், சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு 18 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாயை தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை பீப்பாய் ஒன்றுக்கு 35 அமெரிக்க டாலர்களுக்கு கீழ் உள்ளது.

இருந்தபோதிலும், பெட்ரோல் விலை 70 ரூபாய்க்கு மேல் விற்கிறது. 2004ஆம் ஆண்டு, கச்சா எண்ணெயின் விலை 35 அமெரிக்க டாலர்களாக இருந்தபோது பெட்ரோல் லிட்டருக்கு 37 ரூபாயாக விற்றது. பொதுமக்களின் பாக்கெட்டுகளை காலி செய்து உங்களின் பாக்கெட்டுகளை நிரப்பி கொள்கிறீர்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்தல்

கொரோனா, யெஸ் வங்கி, பொருளாதார மந்த நிலை ஆகிய விவகாரங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திவருகிறது. இவைகளை முன்வைத்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலாவிடம் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே இருந்த செய்தியாளர்கள் கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர், "கொரோனாவால் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது. ஆனால், பிரமதரும் நிதியமைச்சரும் அமைதி காக்கின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும். மோடியின் நண்பர்களால் நிதி நெருக்கடியை சந்தித்துள்ள யெஸ் வங்கியை மீட்டெடுப்பதற்கே சேமிப்பு கணக்கு, நிரந்தர வைப்புத் தொகை ஆகியவற்றின் வட்டி விகிதத்தை எஸ்பிஐ குறைத்துள்ளது. சென்செக்ஸ் 2, 700 புள்ளிகள் குறைந்துள்ளதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் முதலீடு செய்தவர்கள் இதனால் ஏற்படும் விளைவுகளை தாங்கிக்கொள்ள வேண்டும். 72 மணி நேரத்தில், சிறு மற்றும் குறு முதலீட்டாளர்களுக்கு 18 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 75 ரூபாயை தாண்டியுள்ளது. கச்சா எண்ணெயின் சர்வதேச விலை பீப்பாய் ஒன்றுக்கு 35 அமெரிக்க டாலர்களுக்கு கீழ் உள்ளது.

இருந்தபோதிலும், பெட்ரோல் விலை 70 ரூபாய்க்கு மேல் விற்கிறது. 2004ஆம் ஆண்டு, கச்சா எண்ணெயின் விலை 35 அமெரிக்க டாலர்களாக இருந்தபோது பெட்ரோல் லிட்டருக்கு 37 ரூபாயாக விற்றது. பொதுமக்களின் பாக்கெட்டுகளை காலி செய்து உங்களின் பாக்கெட்டுகளை நிரப்பி கொள்கிறீர்கள்" என்றார்.

இதையும் படிங்க: 'பதற்றம் வேண்டாம்... தேவை முன்னெச்சரிக்கையே' - பிரதமர் அறிவுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.