கரோனா தொற்று காரணமாக புதுச்சேரியில் அனைத்து வியாபார நிறுவனங்கள் இரவு 9 மணிவரை திறக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டைப் போன்று புதுச்சேரியிலும் இரவு 10 மணிவரை கடைகள், உணவகங்கள் திறக்க அனுமதிக்க வேண்டும் எனப் புதுச்சேரி வர்த்தக சங்கம் சார்பில் முதலமைச்சர் நாராயணசாமிக்கு கோரிக்கைவைக்கப்பட்டது.
