ETV Bharat / bharat

ஜேஎன்யூ முன்னாள் மாணவர் சர்ஜில் இமாம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

author img

By

Published : Jul 26, 2020, 12:28 PM IST

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சர்ஜில் இமாம், குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்தின் போது தேசத்திற்கு எதிராக பேசியதாக டெல்லி காவல்துறை அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Patiala House Court  Sharjeel Imam  Jamia violence  பாட்டியலா நீதிமன்றம்  டெல்லி காவலர்கள்  சர்ஜில் இமாம்  ஜேஎன்யூ சர்ஜில் இமாம்
ஜேஎன்யூ முன்னாள் மாணவர் சர்ஜில் இமாம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிக்கையை பாட்டியலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ(தேச துரோகம்), 153(ஏ)(பகைமை ஊக்குவித்தல்), 153 (பி)(ஒருமைப்பாடுக்கு குந்தகம் விளைவிப்பது), 505 (வதந்தி பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழும் உபாச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கவுகாத்தி சிறையிலுள்ள முனைவர் பட்ட மாணவர் இமாம், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் ஜனவரி 16ஆம் தேதி அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அஸ்ஸாம் தனிநாடாக அறிவிப்பதைத் தவிற வேறு வழியில்லை என்ற தொனியில் பேசியதாக காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் ஒரு பாசிச ஆவணம் என்று அவர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முனைவர் பட்ட மாணவர் மீது டெல்லி காவல்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த குற்றப்பத்திரிக்கையை பாட்டியலா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விசாரணை ஜூலை 27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கையில் சம்பந்தப்பட்ட நபர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ(தேச துரோகம்), 153(ஏ)(பகைமை ஊக்குவித்தல்), 153 (பி)(ஒருமைப்பாடுக்கு குந்தகம் விளைவிப்பது), 505 (வதந்தி பரப்புவது) ஆகிய பிரிவுகளின் கீழும் உபாச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது கவுகாத்தி சிறையிலுள்ள முனைவர் பட்ட மாணவர் இமாம், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் தேதி ஜாமிய மில்லியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் ஜனவரி 16ஆம் தேதி அலிகார் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டால் அஸ்ஸாம் தனிநாடாக அறிவிப்பதைத் தவிற வேறு வழியில்லை என்ற தொனியில் பேசியதாக காவல்துறை தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், அரசியலமைப்புச் சட்டம் ஒரு பாசிச ஆவணம் என்று அவர் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஜேஎன்யு மாணவர் ஷர்ஜீல் இமாம் மீது உபா சட்டம் பாய்ந்தது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.