ETV Bharat / bharat

மனைவியை கொன்றுவிட்டு போலீஸ் தற்கொலை!

டெல்லி: சிறப்பு பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர், தனது மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : May 6, 2020, 11:47 AM IST

dsd
sds

டெல்லியில் லோதி காலனியிலிருந்த காரில் பெண் காவலர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில், இப்பெண்ணின் கணவர் மனோஜ் சிறப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. அவரை தொடர்புகொள்ள முடியாமல் காவல் துறையினர் தவித்துவந்த நிலையில், மனோஜ் தனது சொந்த கிராமத்தில் தனது தூப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் அதுல் குமார் தாக்கூர் கூறுகையில், " கொலை செய்யப்பட்ட பெண் காவலருக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். பெண் காவலரின் உடல் கிடைத்த தினத்தன்று அவரின் கணவர் நண்பனிடம் எமர்ஜென்சி கார் வேண்டும் என அதிகாலையில் வாங்கிச்சென்றுள்ளார். அதே காரில்தான் பெண் காவலரின் உடல் இருந்தது.

தனது மனைவியை கொலை செய்த அச்சத்தில் சொந்த கிராமத்திற்கு சென்று மனோஜ் தற்கொலை செய்திருக்கலாம். கொலைக்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லோதி காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: காட்டெருமை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழப்பு

டெல்லியில் லோதி காலனியிலிருந்த காரில் பெண் காவலர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், விசாரணை நடத்தினர். அதில், இப்பெண்ணின் கணவர் மனோஜ் சிறப்புப் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுவது தெரியவந்தது. அவரை தொடர்புகொள்ள முடியாமல் காவல் துறையினர் தவித்துவந்த நிலையில், மனோஜ் தனது சொந்த கிராமத்தில் தனது தூப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் அதுல் குமார் தாக்கூர் கூறுகையில், " கொலை செய்யப்பட்ட பெண் காவலருக்கும் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால், இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்துள்ளனர். பெண் காவலரின் உடல் கிடைத்த தினத்தன்று அவரின் கணவர் நண்பனிடம் எமர்ஜென்சி கார் வேண்டும் என அதிகாலையில் வாங்கிச்சென்றுள்ளார். அதே காரில்தான் பெண் காவலரின் உடல் இருந்தது.

தனது மனைவியை கொலை செய்த அச்சத்தில் சொந்த கிராமத்திற்கு சென்று மனோஜ் தற்கொலை செய்திருக்கலாம். கொலைக்கான காரணங்கள் தெளிவாக தெரியவில்லை. இருவரின் உடல்களும் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த லோதி காலனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்" என்றார்.

இதையும் படிங்க: காட்டெருமை தாக்கியத்தில் ஒருவர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.