ETV Bharat / bharat

ஏழைகளின் பசி அறியாமல் அறிவிக்கப்பட்ட 21 நாள் அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேதனை!

author img

By

Published : Apr 1, 2020, 12:48 PM IST

டெல்லி: ஏழைகளின் பசியை அறிந்து அவர்களின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிவிட்டு, அதன்பின்னர் தேசிய அளவிலான ஊரடங்கை மத்திய அரசு அறிவித்திருக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாயிலாக வேதனை தெரிவித்துள்ளது.

Decision of lockdown was made without making necessary arrangements for poor: CPI  ஏழைகளின் பசி அறியாமல் அறிவிக்கப்பட்ட 21 நாள் அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  கரோனா வைரஸ் பரவல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அறிக்கை, கோவிட்19 அச்சம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு  Decision of lockdown was made without making necessary arrangements for poor
Decision of lockdown was made without making necessary arrangements for poor: CPI ஏழைகளின் பசி அறியாமல் அறிவிக்கப்பட்ட 21 நாள் அடைப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கரோனா வைரஸ் பரவல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அறிக்கை, கோவிட்19 அச்சம், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிப்பு Decision of lockdown was made without making necessary arrangements for poor

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் முழு பூட்டுதலால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக் கூலி தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினரால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தங்களது சொந்த இடத்திற்கு செல்ல விரும்புகின்றனர்.

முறையான தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் ஒரு தேசிய பூட்டுதலை விதிக்கும் போது அரசாங்கம் இவற்றையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அரசாங்கம் ஏழைகளை பசியையும், சரியான வசதிகளை ஏற்பாடு செய்யாமல் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே துன்புறுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு மேலும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு மத்திய, மாநில மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல் இலவச மருந்துகளை வழங்குவதன் மூலமும், இலவச சோதனை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வீட்டு வாசலில் இலவச உணவு வழங்கப்பட வேண்டும்.

இதேபோல் ஒரு சிறப்பு பஸ் சேவை இருக்க வேண்டும். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பிற ஊழியர்கள் அந்தந்த பணியிடங்களை சரியான நேரத்தில் மற்றும் சிரமமின்றி அடைய முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளாவில் கரோனா தொற்றுக்கு எட்டு லட்சத்துக்கு அதிகமானோரும் இந்தியாவில் 1600க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் முழு பூட்டுதலால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தினக் கூலி தொழிலாளிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் டெல்லி, உத்தரப் பிரதேசத்தில் காவல்துறையினரால் தொந்தரவு செய்யப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் தங்களது சொந்த இடத்திற்கு செல்ல விரும்புகின்றனர்.

முறையான தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் ஒரு தேசிய பூட்டுதலை விதிக்கும் போது அரசாங்கம் இவற்றையெல்லாம் எதிர்பார்த்திருக்க வேண்டும். அரசாங்கம் ஏழைகளை பசியையும், சரியான வசதிகளை ஏற்பாடு செய்யாமல் இவ்வாறு நடந்துகொண்டுள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே துன்புறுத்தப்பட்ட புலம்பெயர்ந்தோருக்கு மேலும் தீங்கு விளைவிக்க வேண்டாம் என்று காவல்துறைக்கு மத்திய, மாநில மற்றும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்த வேண்டும்.

அதேபோல் இலவச மருந்துகளை வழங்குவதன் மூலமும், இலவச சோதனை மற்றும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சையையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். அவர்களுக்கு வீட்டு வாசலில் இலவச உணவு வழங்கப்பட வேண்டும்.

இதேபோல் ஒரு சிறப்பு பஸ் சேவை இருக்க வேண்டும். இதனால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளின் பிற ஊழியர்கள் அந்தந்த பணியிடங்களை சரியான நேரத்தில் மற்றும் சிரமமின்றி அடைய முடியும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உலகளாவில் கரோனா தொற்றுக்கு எட்டு லட்சத்துக்கு அதிகமானோரும் இந்தியாவில் 1600க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.