ETV Bharat / bharat

16 வயது சிறுமியின் உடல் கண்டெடுப்பு: ஒடிசாவில் அரங்கேறிய கூட்டு பாலியல் வன்முறை! - ஒடிசாவில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்

புவனேஷ்வர்: நபரங்பூர் மாவட்டத்தில் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு உடலில் ரத்தக் காயங்களுடன் 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Odisha
Odisha
author img

By

Published : Dec 14, 2019, 8:49 PM IST

Updated : Dec 14, 2019, 9:14 PM IST

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று இரவு 9 மணியிலிருந்து காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை குமாண்டிலி கிராமத்திலுள்ள நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் இறந்த சிறுமி காணாமல்போனவர் என்று உறுதி செய்தனர்.

இது குறித்து, காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இறந்த சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும் அவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சிறுமியின் உடல் அவரது வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றபோது கடத்தப்பட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டினார்.

தனது மகள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின் கயவர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் சிறுமியின் தாயார் வேதனை தோய்ந்த குரலில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் முனா திரிபாதி கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

உடற்கூறாய்வு செய்வதற்காக சிறுமியின் உடலை காவல் துறையினர் எடுத்தபோது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எடுக்கவிடாமல் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Odisha

விசாரணை மேற்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து உடலை எடுக்க அனுமதித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி நேற்று இரவு 9 மணியிலிருந்து காணவில்லை. பெற்றோர், உறவினர்கள் இரவு முழுவதும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், இன்று காலை குமாண்டிலி கிராமத்திலுள்ள நெல் பயிரிடப்பட்டிருந்த விவசாய நிலத்தில் சிறுமி ஒருவரின் உடல் கிடப்பதாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த காவல் துறையினர் இறந்த சிறுமி காணாமல்போனவர் என்று உறுதி செய்தனர்.

இது குறித்து, காவல் துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், இறந்த சிறுமியின் மூக்கிலிருந்து ரத்தம் வடிந்ததாகவும் அவரின் உடலின் பல்வேறு பகுதிகளில் காயமடைந்ததற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், சிறுமியின் உடல் அவரது வீட்டிலிருந்து 300 மீட்டர் தொலைவில் இருந்ததாகவும் அவர் கூறினார்.

வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு சிறுமி இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே சென்றபோது கடத்தப்பட்டதாக அவரது தாயார் குற்றஞ்சாட்டினார்.

தனது மகள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பின் கயவர்களால் கொலை செய்யப்பட்டதாகவும் சிறுமியின் தாயார் வேதனை தோய்ந்த குரலில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் குறித்து அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் முனா திரிபாதி கூறுகையில், குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

உடற்கூறாய்வு செய்வதற்காக சிறுமியின் உடலை காவல் துறையினர் எடுத்தபோது ஆத்திரமடைந்த கிராம மக்கள் எடுக்கவிடாமல் குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Odisha

விசாரணை மேற்கொண்டு உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து உடலை எடுக்க அனுமதித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

Intro:ସ୍ଲଗ - ନାବାଳିକା ଙ୍କ ମୃତଦେହ ଉଦ୍ଧାର
ଫର୍ମାଟ - ଏଭିଓ, ୧୪/୧୨/୧୯
ରିପୋର୍ଟ - ତପନ ବିଷୋୟୀ, ନବରଙ୍ଗପୁର
-------------------------------------------------------
ଆଙ୍କର - ନବରଙ୍ଗପୁର ଜିଲ୍ଲା କୋଷାଗୁମୁଡ଼ା ବ୍ଲକ ଗୁମଣ୍ଡଳୀ ରେ ଜଣେ ନାବାଳିକା ଙ୍କ ମୃତ ଦେହ ଉଦ୍ଧାର କରାଯାଇଛି । ଗୁମଣ୍ଡଳୀ ରେ ଗତକାଲି ଦିଆଳି ପର୍ବ ଥିବା ବେଳେ ଗ୍ରାମରେ ସମସ୍ତେ ମୌଜମୌଜଲିସ ରେ ବ୍ୟସ୍ତ ଥିଲେ । ତେବେ ଆଜି ସକାଳୁ ଗ୍ରାମର ନାବାଳିକା ଙ୍କ ମୃତ ଦେହ ଉଦ୍ଧାର କରାଯାଇଛି । ଗ୍ରାମ ଠାରୁ ପ୍ରାୟ ଅଧାକିଲୋମିଟର ଦୂର ରେ ଥିବା ଏକ ବିଲରେ ଶବ ପଡିରହିଛି । ଶବ ନିକଟରେ ଦୁଇଟି ଜିନ୍ସ ପ୍ୟାଣ୍ଟ ପଡି ରହିଛି । ଯାହାକୁ ନେଇ ଗଣ ଦୁଷ୍କର୍ମ ପରେ ହତ୍ୟା ସନ୍ଦେହ କରାଯାଉଥିବା ଗ୍ରାମବାସୀ ମାନେ ସୂଚନା ଦେଇଛନ୍ତି, ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ପୋଲିସ ପହଞ୍ଚି ନାହିଁ Body:Tapan Kumar Bissoyi Conclusion:NABARANGPUR
Last Updated : Dec 14, 2019, 9:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.