ETV Bharat / bharat

க்யார் புயலால் கர்நாடகாவில் வீடுகள், மரங்கள் சேதம்!

பெங்களூரு: கர்நாடகாவில் க்யார் புயலால் தக்ஷின கன்னட உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. மேலும் புயலின் தாக்கத்தால் அப்பகுதிகளில் உள்ள வீடுகள் சேதமடைந்துள்ளன.

author img

By

Published : Oct 26, 2019, 11:56 AM IST

க்யார் புயல்

அரபிக் கடலில் உருவாகியுள்ள க்யார் புயலின் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முன்னதாக கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னட, உடுப்பி, உத்தர கன்னடவிற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தக்ஷின கன்னட மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் சாய்ந்ததோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

புயலானது மகாராஷ்டிராவில் உள்ள கடலோரப் பகுதியான ரத்தனகிரியில் மையம் கொண்டுள்ளது என்றும், அதன் வலிமை இன்னும் 12லிருந்து 36 மணி நேரத்தில் அதிகரிக்கும் எனவும் இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களில் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்தியக் கிழக்கு நாடான ஏமன் அருகே உள்ள ஓமன் கடற்பகுதியை அடையும் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கோவா, தென் குஜராத் பகுதிகளில் கனமழை பெய்யகூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓமனை விட்டு நகரும் ஹிகா புயல்

அரபிக் கடலில் உருவாகியுள்ள க்யார் புயலின் தாக்கத்தால் கர்நாடக மாநிலத்தில் நேற்றிலிருந்து தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. முன்னதாக கடலோர மாவட்டங்களான தக்ஷின கன்னட, உடுப்பி, உத்தர கன்னடவிற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக தக்ஷின கன்னட மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அந்தப் பகுதியில் 90 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் சாய்ந்ததோடு வீடுகளும் சேதமடைந்துள்ளன.

புயலானது மகாராஷ்டிராவில் உள்ள கடலோரப் பகுதியான ரத்தனகிரியில் மையம் கொண்டுள்ளது என்றும், அதன் வலிமை இன்னும் 12லிருந்து 36 மணி நேரத்தில் அதிகரிக்கும் எனவும் இந்திய வனிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து நாட்களில் புயல் கொஞ்சம் கொஞ்சமாக தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து மத்தியக் கிழக்கு நாடான ஏமன் அருகே உள்ள ஓமன் கடற்பகுதியை அடையும் என்று கூறப்படுகிறது.

கர்நாடகாவைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, கோவா, தென் குஜராத் பகுதிகளில் கனமழை பெய்யகூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுகப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓமனை விட்டு நகரும் ஹிகா புயல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.