ETV Bharat / bharat

இந்தியாவில் கரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வரும் - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்

author img

By

Published : Jul 3, 2020, 4:22 PM IST

Updated : Jul 3, 2020, 6:13 PM IST

ஹைதராபாத்: உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 முதல் பொதுபயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசி- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்
ஆகஸ்ட் 15 முதல் பொதுபயன்பாட்டிற்கு கரோனா தடுப்பூசி- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம்

உலகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 10 லட்சத்தும் அதிகமானோரை பாதித்துள்ள கோவிட் -19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. கரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க உலக நாடுகள், சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் இணைந்து உருவாக்கப்படும் கரோனா வைரஸ் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த மருந்தின் சோதனைகள் இன்னும் முடியவடையாததினால், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகை மிரட்டும் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் COVAXIN என்ற தடுப்பூசி மருந்தை, பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் (NIV) இணைந்து வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) தனது இலக்கை அடைவதற்கு விரைவாக செயல்பட்டுவருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பை பொறுத்து இறுதி முடிவு அமையும்” என்று தெரிவித்தார்.

கரோனா வைரஸிற்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கியதாக பாரத் பயோடெக் அறிவித்தது. இது ‘துரிதப்படுத்தப்பட்ட’ மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதியையும் பெற்றுள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் தனது ஒத்துழைப்பை அறிவித்த 52 நாள்களுக்குள், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தனது விரிவான முன் மருத்துவ ஆய்வுகளை முடித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "பொதுவாக 14-15 ஆண்டுகள் எடுக்கும் தடுப்பூசி இப்போது ஒரு வருடத்திற்குள் உருவாக்கப்படலாம்" என்று கூறினார். விரைவான கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை மற்றும் சோதனை செயல்முறைகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மத்திய அரசு அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கான, பதிவுக்கான முதல் படியாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதில், தர மதிப்பீடு மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான காலத்தை 12 மாதங்களிலிருந்து மூன்று மாதங்களாக மாற்றி அமைத்துள்ளது.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கோவிட் -19 குணப்படுத்துதலுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது அனைத்து நெறிமுறைகளையும் விதிகளையும் கடைப்பிடிப்பது கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சோதனை விஷயங்களின் உரிமைகள் அல்லது பாதுகாப்பு நெறிமுறைகள் இந்த செயல்பாட்டில் சமரசம் செய்யப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது.

இந்திய மருந்தக நிறுவனங்கள் தடுப்பூசியை விரைவாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டம், 1940இல், மத்திய அரசு, சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தடுப்பூசிகள் பரவலான பயன்பாட்டிற்காக வெளியிடப்படுவதற்கு முன்னர் அவற்றை அங்கீகரிப்பதற்கு முக்கியமான மருத்துவ பரிசோதனைகள் நீண்ட கால செயல்முறையாகவே இருக்கின்றன. அவை மூன்று வெவ்வேறு கட்டங்களின் கீழ் நடத்தப்படுகின்றன, அதன் பிறகு சோதனை முடிவுகள் ஒப்புதல்கள் மற்றும் சரிபார்ப்புகளுக்காக கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்படுகின்றன. இந்த ‘துரிதப்படுத்தப்பட்ட’ சோதனைகளின் விஷயத்தில் கூட, சோதனையின் ஒவ்வொரு கட்டமும் நிறைபெற்று முழுமையடைய குறைந்தது ஆறு மாதங்களுக்கும் மேலாகும்.

இருப்பினும், உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி விஷயத்தில், இந்த காலவரிசைகள் மேலும் மாற்றப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அறிக்கையில், டாக்டர் பார்கவா கூறியுள்ளதாவது: “கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார அவசரநிலை மற்றும் தடுப்பூசியை தொடங்குவதற்கான அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகக் கண்டறிந்து உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ​​உலகெங்கிலும் பல்வேறு கட்ட சோதனைகளில் சுமார் 140 தடுப்பூசிகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதில், மனிதர்களுக்கு சோதனை செய்யக்கூடிய நிலையில், சுமார் 10 தடுப்பூசிகள் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரம்பகால கரோனா தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும். இந்தியாவால் இந்த இலக்கை அடைய முடிந்தால், மருந்து ஒழுங்குமுறை நடைமுறைகளை, நம் நாடு முழுமையாக மாற்றியமைக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

உலகளவில் கிட்டத்தட்ட ஒரு கோடியே 10 லட்சத்தும் அதிகமானோரை பாதித்துள்ள கோவிட் -19 தொற்றுநோய்க்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு உலகம் ஆவலுடன் காத்திருக்கிறது. கரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்க உலக நாடுகள், சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் மருந்து நிறுவனங்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) உடன் இணைந்து உருவாக்கப்படும் கரோனா வைரஸ் தடுப்பூசி இந்தாண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ஐ.சி.எம்.ஆர்) அறிவிப்பு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த மருந்தின் சோதனைகள் இன்னும் முடியவடையாததினால், இந்தாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகை மிரட்டும் கரோனா வைரஸைக் குணப்படுத்தும் COVAXIN என்ற தடுப்பூசி மருந்தை, பாரத் பயோடெக், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய வைராலஜி நிறுவனத்துடன் (NIV) இணைந்து வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், 2020 ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) தனது இலக்கை அடைவதற்கு விரைவாக செயல்பட்டுவருகிறது. இருப்பினும், இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பை பொறுத்து இறுதி முடிவு அமையும்” என்று தெரிவித்தார்.

கரோனா வைரஸிற்கு எதிராக இந்தியாவின் முதல் தடுப்பூசியை உருவாக்கியதாக பாரத் பயோடெக் அறிவித்தது. இது ‘துரிதப்படுத்தப்பட்ட’ மனித மருத்துவ பரிசோதனைகளுக்கான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலின் அனுமதியையும் பெற்றுள்ளது. இது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் தனது ஒத்துழைப்பை அறிவித்த 52 நாள்களுக்குள், பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனம் தனது விரிவான முன் மருத்துவ ஆய்வுகளை முடித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எலா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "பொதுவாக 14-15 ஆண்டுகள் எடுக்கும் தடுப்பூசி இப்போது ஒரு வருடத்திற்குள் உருவாக்கப்படலாம்" என்று கூறினார். விரைவான கோவிட் -19 தடுப்பூசிக்கு ஒழுங்குமுறை மற்றும் சோதனை செயல்முறைகள் எவ்வாறு கவனிக்கப்படுகின்றன என்பதை அந்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

மத்திய அரசு அனைத்து மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனைகளுக்கான, பதிவுக்கான முதல் படியாக மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது. இதில், தர மதிப்பீடு மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான காலத்தை 12 மாதங்களிலிருந்து மூன்று மாதங்களாக மாற்றி அமைத்துள்ளது.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மார்ச் 30ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், கோவிட் -19 குணப்படுத்துதலுக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளும்போது அனைத்து நெறிமுறைகளையும் விதிகளையும் கடைப்பிடிப்பது கடினம் என்று சுட்டிக்காட்டியுள்ளது. எவ்வாறாயினும், சோதனை விஷயங்களின் உரிமைகள் அல்லது பாதுகாப்பு நெறிமுறைகள் இந்த செயல்பாட்டில் சமரசம் செய்யப்படாது என்றும் அது தெளிவுபடுத்தியது.

இந்திய மருந்தக நிறுவனங்கள் தடுப்பூசியை விரைவாக செயல்படுத்துவதற்கு ஏதுவாக மருந்துகள் மற்றும் அழகுசாதனச் சட்டம், 1940இல், மத்திய அரசு, சில தளர்வுகளை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும், தடுப்பூசிகள் பரவலான பயன்பாட்டிற்காக வெளியிடப்படுவதற்கு முன்னர் அவற்றை அங்கீகரிப்பதற்கு முக்கியமான மருத்துவ பரிசோதனைகள் நீண்ட கால செயல்முறையாகவே இருக்கின்றன. அவை மூன்று வெவ்வேறு கட்டங்களின் கீழ் நடத்தப்படுகின்றன, அதன் பிறகு சோதனை முடிவுகள் ஒப்புதல்கள் மற்றும் சரிபார்ப்புகளுக்காக கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்படுகின்றன. இந்த ‘துரிதப்படுத்தப்பட்ட’ சோதனைகளின் விஷயத்தில் கூட, சோதனையின் ஒவ்வொரு கட்டமும் நிறைபெற்று முழுமையடைய குறைந்தது ஆறு மாதங்களுக்கும் மேலாகும்.

இருப்பினும், உள்நாட்டு கோவிட் -19 தடுப்பூசி விஷயத்தில், இந்த காலவரிசைகள் மேலும் மாற்றப்பட்டன. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக அறிக்கையில், டாக்டர் பார்கவா கூறியுள்ளதாவது: “கோவிட் -19 தொற்றுநோயால் ஏற்பட்ட பொது சுகாதார அவசரநிலை மற்றும் தடுப்பூசியை தொடங்குவதற்கான அவசரம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகக் கண்டறிந்து உறுதிசெய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ​​உலகெங்கிலும் பல்வேறு கட்ட சோதனைகளில் சுமார் 140 தடுப்பூசிகள் உள்ளன என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. இதில், மனிதர்களுக்கு சோதனை செய்யக்கூடிய நிலையில், சுமார் 10 தடுப்பூசிகள் உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, ஆரம்பகால கரோனா தடுப்பூசி 2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சந்தைக்கு வரக்கூடும். இந்தியாவால் இந்த இலக்கை அடைய முடிந்தால், மருந்து ஒழுங்குமுறை நடைமுறைகளை, நம் நாடு முழுமையாக மாற்றியமைக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Last Updated : Jul 3, 2020, 6:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.