கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் உடலில் உள்ள கரோனா வைரஸ் எத்தனை மணி நேரம் உயிருடன் இருக்கும் என மருத்துவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஆக்ஸ்போர்டு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிரபல தடயவியல் நிபுணர் தினேஷ் ராவ், தனது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த 62 வயது நபரின் உடலை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.
ஆய்வின் முடிவில் கரோனா வைரசால் உயிரிழந்தவரின் உடலில் 18 மணிநேரம் வைரஸ் உயிருடன் இருக்கிறது என தெரியவந்தது.
அதுமட்டுமின்றி அவரின் உடலின் பல பாகங்கள் சேதமடைந்துள்ளதையும், எடை அதிகரிப்பு, மூளையில் இரத்த உறைவு, இதயத்தில் சேதம், கல்லீரல், சுவாச பாதை சேதம் ஆகிய பாதிப்புகள் இருப்பதையும் கண்டறிந்துள்ளார்.
இதையும் படிங்க...உலகளவில் கரோனா பாதிப்பு நிலவரம்!