ETV Bharat / bharat

'வாடும் நேபாளம், பயத்தில் பாகிஸ்தான், வென்ற இலங்கை'- இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன? - கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்

ஹைதராபாத்: இந்நேரத்தில், உலகம் முழுக்க புதிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொள்கின்றன.

COVID-19  COVID-19 pandemic  Coronavirus  COVID-19 outbreak  Coronavirus in India's neighbouring countries  கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்  இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன
COVID-19 COVID-19 COVID-19 pandemic Coronavirus COVID-19 outbreak Coronavirus in India's neighbouring countries கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள் இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்னCOVID-19 pandemic Coronavirus COVID-19 outbreak Coronavirus in India's neighbouring countries கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்
author img

By

Published : May 1, 2020, 3:33 PM IST

கோவிட்-19 பெருந்தொற்று நோயை ஏற்படுத்தும் புதிய கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. விளைவு, கடந்த ஒரு மாதமாக நாடு ஊரடங்கால் முடங்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மற்றொருபுரம் அண்டை நாடும், வைரஸின் பிறப்பிடமுமான சீனா, கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தி பாதிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டது, தற்போது நமக்குள் கேள்வியொன்று எழுகிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் நிலைமை? இங்கு கோவிட்-19 விளைவு எவ்வாறு உள்ளது? அந்த அரசாங்கங்களின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? அந்த மக்கள் என்ன வகையான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்? இந்தப் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நிலைமை என்ன? அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

இத்தகைய கேள்விகள் தொடர்பான விவாதங்களை கீழே பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான்

  • கட்டமைப்பு, சேவைத் தட்டுப்பாடு

தலிபான்களால் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானில், கரோனா அழிவை ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே வறுமை மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை நிலவுவதால், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அண்மையில் அரசாங்கம் ஊரடங்கு (லாக்டவுன்) உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான சுயதொழில் பிரிவுகள் மூடப்பட்டன. மில்லியன் கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். ஏழைகளைப் பாதுகாக்க அரசாங்கம், இப்போது சீனா, பாகிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவை முழுமையாக நம்பியுள்ளது. பாகிஸ்தான், ஈரானில் இருந்து மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் திரும்பிவருவதால் புதியப் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கான முக்கியக் காரணம் தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பாதிப்பில்லாத நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுவதாகும். இது நாட்டு மக்களிடையே நோய்த்தொற்றுகள் விரைவாக உயர வழிவகுத்துள்ளது.

இதன் விளைவாக நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களும் உடனடியாக பூட்டப்பட்டன. தொற்றுநோயின் தீவிரம் என்னவென்றால், தலிபான்கள் கூட லாக்டவுனை ஆதரித்துவருகின்றனர். ஆப்கானிஸ்தானில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாதிப்பு அறியப்பட்டது. முதல் உயிரிழப்பு மார்ச் மாதம் 22ஆம் தேதி பதிவானது.

பாகிஸ்தான்

  • மறைந்திருக்கும் அறிகுறியற்ற பாதிப்பாளர்கள்

பாகிஸ்தானில் 25 விழுக்காடு மக்கள் ஏழ்மையான நிலையில் வறுமையில் வாடுகின்றனர். இங்கு கோவிட்-19 பேரிடி ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை கற்பனை செய்யக்கூட பார்க்க முடியாததாக உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் சுமார் ஒரு கோடியே 87 லட்சம் மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19  COVID-19 pandemic  Coronavirus  COVID-19 outbreak  Coronavirus in India's neighbouring countries  கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்  இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன
பாகிஸ்தானில் முகக்கவசம் விற்பனை செய்யும் சிறுவன்

ஈரானுக்குச் சென்ற இரண்டு மாணவர்களுக்கு, பிப்ரவரி 26-ஆம் தேதி முதலில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. முதல் மரணம் மார்ச் 30-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை லாகூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தப்லீக் ஜமாஅத் கூட்டம், வைரஸின் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களை’ உருவாக்கியது.

கூட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் வைரஸ் விரைவான கட்டத்தில் பரவியது. பாதிப்புகள் அதிகரித்தபோது, ​​அலுவலர்கள் சுமார் 20 ஆயிரம் தப்லீக் ஜமாஅத் பங்கேற்பாளர்களை தனிமைப்படுத்தினர். மார்ச் 15-ஆம் தேதி முதல், அனைத்து மாநிலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஊரடங்கை அறிவிக்கத் தொடங்கின.

அங்கு சமூகப் பரவல் காணப்படுகிறது. எனினும், தற்போது கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 8 கோடி ஏழை மக்களுக்கு, அவர்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனாலும், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினி கிடக்கின்றனர்.

வைரஸ் வேகமாக பரவிவருவதாக கவலைகள் இருந்தாலும், ரம்ஜானின் பிரார்த்தனைக்காக மசூதிகளைத் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. கோவிட்-19 பரிசோதனைகளில், வேகமின்மைதான் வைரஸ் பாதிப்பாளர்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என்று எச்சரிக்கைகள் வந்துள்ளன.

இதன் காரணமாக, ஏராளமான மறைந்திருக்கும் அறிகுறியற்ற பாதிப்பாளர்கள் சுதந்திரமாகச் சுற்றிவருகின்றனர். இத்தகைய நோயாளிகள் சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், நாட்டில் குறைந்தது 1.18 லட்சம் படுக்கைகளை அவசர அவசரமாக ஏற்பாடு செய்வதன் மூலம் எந்தவொரு அசம்பாவித நிலைமையைச் சமாளிக்க அரசாங்கமும் அலுவலர்களும் தயாராக உள்ளன.

நேபாளம்

  • சோதனைகளை நடத்துவதற்கு கூட பட்ஜெட் இல்லை

ஜனவரி 23 ஆம் தேதி வூகானில் இருந்து நேபாளத்திற்குத் திரும்பிவந்த ஒரு இளைஞரிடம் கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இருப்பினும் அவரைப் சோதிக்க எந்தவித கருவிகளும் நாட்டில் கிடைக்கவில்லை. கோவிட் -19 வைரஸைக் கண்டறிவதற்கான சோதனைக்கு 17 ஆயிரம் நேபாள ரூபாய் வரை செலவாகும்.

எனவே, நபரின் மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அடுத்த ஒன்பது நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

அறிகுறி நிகழ்வுகளில் விரைவான வளர்ச்சியை அவர்கள் கவனித்ததால், அரசாங்கம் முதல் கட்டத்தில் சுமார் 100 சோதனை கருவிகளை வாங்கியது. இது நேபாளத்தின் வறிய விவகாரத்தின் பிரதிபலிப்பாகும். ஏற்கனவே குறைந்த பொருளாதார குறியீட்டைக் கொண்ட நேபாளம், இந்தியா மற்றும் சீனாவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலா உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் பல்வேறு மலையேறும் பயணங்களுக்காகவும், நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள். தொற்றுநோய் காரணமாக, நேபாளம் தனது சுற்றுலா விசாக்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

மேலும் இந்தோ- நேபாள எல்லையை மூட வேண்டியிருந்தது. மார்ச் 24ஆம் தேதி, முதல் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. இதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். மலையேறுபவர்களும், அவர்களுக்கு ஆதரவாக கூலி சம்பாதிக்கும் மக்களும் இப்போது சும்மா இருக்கிறார்கள்.

அவசரகால மருந்துகள் கூட, இந்திய அரசால் மட்டுமே வழங்கப்படுகின்றன.

பூடான்

  • விரைவான நடவடிக்கை

பூடானில் முதல் கரோனா பாதிப்பு மார்ச் 6ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயதான ஒரு பயணி கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. உடனடியாக, அவரது மனைவியும், 70 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே மாதத்தின் 13ஆவது நாளில், அமெரிக்கர் தனது நாட்டுக்குப் புறப்பட்டார். இருப்பினும், அவரது மனைவியும், ஓட்டுநரும் பூடானிலேயே இருந்தனர்.

இந்தியாவில் வைரஸ் பரவுவது பற்றி அறிந்த பூடான் மன்னர், முழு இந்திய-பூடான் எல்லையையும் மூடினார். பல்வேறு பொருட்களின் இறக்குமதியும் தடை செய்யப்பட்டது. இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கையில் படித்து வேலை செய்கிறவர்கள் வெளியேற்றப்பட்டு, நாட்டின் தலைநகரான திம்புவில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முற்றிலுமாக குணமடைந்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த வழியில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இலங்கை

  • முன்மாதிரி விழிப்புணர்வு

நாட்டில் ஒரு மருத்துவ அவசரநிலையை எவ்வாறு கையாள்வது என்பதை இலங்கை உலகுக்குக் காட்டியுள்ளது. பேரழிவுக்கு அரசாங்கம் தயாராகி, அதன் குடிமக்களின் நலனை முன்னுரிமையாக வைத்து முன்னணியில் செயல்பட்டது. அரசாங்கத்தின் விழிப்புணர்வு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியது.

ஆரம்பத்தில், வைரஸ் ஆபத்தான விகிதத்தில் பரவிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16-ஆவது இடத்தில் இருந்தது. அதன் சரியான உத்திகள் மற்றும் செயல்படுத்தல் காரணமாக, இது சமீபத்தில் கொடிய தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்த நாடுகளின் பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசாங்கம் தனது நாடு முழுவதும் செயல்படுத்தி வந்த வெற்றிகரமான உத்திகளின் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.

உலக சுகாதார அமைப்பு (WHO) வைரஸ் மற்றும் தொற்றுநோய் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டவுடன், நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மூடப்பட்டன. முன்னதாக, ஜனவரி 27ஆம் தேதி, சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய ஒரு பெண்ணுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்.

சீனாவின் வூகானில் தாக்கப்பட்ட இலங்கை மாணவர்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கையில் ஒரு சுற்றுலா வழிகாட்டி, மார்ச் 10 தேதியன்று சில இத்தாலிய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பரவிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மார்ச் 14 ஆம் நாள் தேதி முதல், நாட்டில் ஊரடங்கு நடவடிக்கைகளை அரசாங்கம் விதித்தது. இது வைரஸ் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்த உதவியது.

வங்கதேசம்

  • ரோஹிங்கியா குடியேற்றத்தின் கடுமையான வறுமை

வங்க தேசத்தின் மொத்த மக்கள் தொகை 16 கோடி. இங்கு எந்தவொரு அவசரநிலையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரத்து 169 அவசர சிகிச்சை பிரிவு வார்டு (ஐ.சி.யூ) படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதாவது ஒரு லட்சம் பேருக்கு ஒரு படுக்கைக்குக் குறைவானது.

இதனை இம்மாத இறுதிக்குள் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இங்கு முதல் கோவிட் -19 பாதிப்பு, மார்ச் 8 ஆம் தேதி கண்டறியப்பட்டது. முதல் மரணம், அன்றிலிருந்து 18-ஆவது நாளில் நிகழ்ந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அந்நாட்டில் அமலில் உள்ளது.

COVID-19  COVID-19 pandemic  Coronavirus  COVID-19 outbreak  Coronavirus in India's neighbouring countries  கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்  இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன
இந்திய வங்கதேச எல்லையில் கோவிட்-19 பரிசோதனை

ஜவுளித் தொழிலுக்கு அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் குறைவான சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையான வகையில் அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மறுபுறம், சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் கரோனா வைரஸின், “சூப்பர் ஸ்ப்ரெடர்களாக“ (பரப்பாளர்கள்) மாறக்கூடும் என்ற கவலைகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மியான்மர்

  • ரகசிய நெருக்கடி

மியான்மரின் இரு எல்லைகளிலும் உள்ள சீனாவும் தாய்லாந்தும் தங்கள் நாடுகளில் பெரும் நெருக்கடி நிலையை அறிவித்துவருகின்றன. மேலும் ஏராளமான பாதிப்பாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. இருந்தபோதிலும், மியான்மர் மிகக் குறைந்த அளவில் பாதிக்கப்படுவதாக அறிவிக்கிறது.

அரசாங்கம் போதுமான சோதனைகளை செய்யவில்லை என்றும், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. இந்தக் கொடிய வைரஸ் பரவுவதிலிருந்து அவர்களின் வாழ்க்கை முறையே, அவர்களைப் பாதுகாத்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

மியான்மரில், மக்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் கைகளை குலுக்குவதில்லை. மேலும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பதையோ, ரூபாய் நோட்டு தாள்களை எண்ணும்போது நாக்கை நனைப்பதையோ ஊக்குவிப்பதில்லை. கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு வாழ்க்கை முறை தங்கள் நாட்டில் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்கிறது. மியான்மரில் முதல் வைரஸ் தொற்று மார்ச் 23 அன்று பதிவாகியுள்ளது.

மியான்மரை பொறுத்தமட்டில் மாவட்ட வாரியாக லாக்டவுன் நடைமுறை அமலில் உள்ளது. அங்கு ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், பல்வேறு ஏற்பாடுகளை ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டின் பிறப் பகுதிகளில் மக்கள் சமூக தூரத்தை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு, மீட்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை காணலாம்.

நாடுகள்பாதிப்புமீட்புஇழப்பு
பாகிஸ்தான்16,8174,315385
வங்கதேசம்7,667160168
ஆப்கானிஸ்தான்2,17126064
இலங்கை66515407
மியான்மர்1502706
பூடான்070500
நேபாளம்571600

இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா பரிசோதனை சாத்தியமா?

கோவிட்-19 பெருந்தொற்று நோயை ஏற்படுத்தும் புதிய கரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. விளைவு, கடந்த ஒரு மாதமாக நாடு ஊரடங்கால் முடங்கப்பட்டுள்ளது. நாட்டின் மூலை முடுக்கெங்கிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

மற்றொருபுரம் அண்டை நாடும், வைரஸின் பிறப்பிடமுமான சீனா, கோவிட்-19 பெருந்தொற்றை கட்டுப்படுத்தி பாதிப்பிலிருந்து மீண்டு வந்துவிட்டது, தற்போது நமக்குள் கேள்வியொன்று எழுகிறது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், பூடான் மற்றும் மியான்மர் உள்ளிட்ட நாடுகளின் நிலைமை? இங்கு கோவிட்-19 விளைவு எவ்வாறு உள்ளது? அந்த அரசாங்கங்களின் முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன? அந்த மக்கள் என்ன வகையான துன்பங்களை அனுபவிக்கிறார்கள்? இந்தப் பின்தங்கிய நாடுகளின் பொருளாதார நிலைமை என்ன? அந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

இத்தகைய கேள்விகள் தொடர்பான விவாதங்களை கீழே பார்ப்போம்.

ஆப்கானிஸ்தான்

  • கட்டமைப்பு, சேவைத் தட்டுப்பாடு

தலிபான்களால் பாதிக்கப்பட்ட நாடான ஆப்கானிஸ்தானில், கரோனா அழிவை ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே வறுமை மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை நிலவுவதால், நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. அண்மையில் அரசாங்கம் ஊரடங்கு (லாக்டவுன்) உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இதையடுத்து, ஆயிரக்கணக்கான சுயதொழில் பிரிவுகள் மூடப்பட்டன. மில்லியன் கணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர். ஏழைகளைப் பாதுகாக்க அரசாங்கம், இப்போது சீனா, பாகிஸ்தான், ஈரான், உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தியாவை முழுமையாக நம்பியுள்ளது. பாகிஸ்தான், ஈரானில் இருந்து மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் திரும்பிவருவதால் புதியப் பிரச்சினைகள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் கரோனா வைரஸ் வேகமாக பரவுவதற்கான முக்கியக் காரணம் தனிமைப்படுத்தப்பட்ட வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் பாதிப்பில்லாத நபர்கள், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறுவதாகும். இது நாட்டு மக்களிடையே நோய்த்தொற்றுகள் விரைவாக உயர வழிவகுத்துள்ளது.

இதன் விளைவாக நாட்டின் கிட்டத்தட்ட அனைத்து மாகாணங்களும் உடனடியாக பூட்டப்பட்டன. தொற்றுநோயின் தீவிரம் என்னவென்றால், தலிபான்கள் கூட லாக்டவுனை ஆதரித்துவருகின்றனர். ஆப்கானிஸ்தானில், கடந்த பிப்ரவரி மாதம் முதல் பாதிப்பு அறியப்பட்டது. முதல் உயிரிழப்பு மார்ச் மாதம் 22ஆம் தேதி பதிவானது.

பாகிஸ்தான்

  • மறைந்திருக்கும் அறிகுறியற்ற பாதிப்பாளர்கள்

பாகிஸ்தானில் 25 விழுக்காடு மக்கள் ஏழ்மையான நிலையில் வறுமையில் வாடுகின்றனர். இங்கு கோவிட்-19 பேரிடி ஏற்படுத்தப்போகும் தாக்கத்தை கற்பனை செய்யக்கூட பார்க்க முடியாததாக உள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கில் இருப்பதால் சுமார் ஒரு கோடியே 87 லட்சம் மக்கள் வேலை இழக்க நேரிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

COVID-19  COVID-19 pandemic  Coronavirus  COVID-19 outbreak  Coronavirus in India's neighbouring countries  கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்  இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன
பாகிஸ்தானில் முகக்கவசம் விற்பனை செய்யும் சிறுவன்

ஈரானுக்குச் சென்ற இரண்டு மாணவர்களுக்கு, பிப்ரவரி 26-ஆம் தேதி முதலில் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. முதல் மரணம் மார்ச் 30-ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்டது. மார்ச் 10 முதல் 12 ஆம் தேதி வரை லாகூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தப்லீக் ஜமாஅத் கூட்டம், வைரஸின் ‘சூப்பர் ஸ்ப்ரெடர்களை’ உருவாக்கியது.

கூட்டத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர். இதனால் வைரஸ் விரைவான கட்டத்தில் பரவியது. பாதிப்புகள் அதிகரித்தபோது, ​​அலுவலர்கள் சுமார் 20 ஆயிரம் தப்லீக் ஜமாஅத் பங்கேற்பாளர்களை தனிமைப்படுத்தினர். மார்ச் 15-ஆம் தேதி முதல், அனைத்து மாநிலங்களும் ஒன்றன்பின் ஒன்றாக ஊரடங்கை அறிவிக்கத் தொடங்கின.

அங்கு சமூகப் பரவல் காணப்படுகிறது. எனினும், தற்போது கட்டுப்பாடுகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டுள்ளன. நாட்டில் கிட்டத்தட்ட 8 கோடி ஏழை மக்களுக்கு, அவர்களின் தற்போதைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ரூ.11 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனாலும், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினி கிடக்கின்றனர்.

வைரஸ் வேகமாக பரவிவருவதாக கவலைகள் இருந்தாலும், ரம்ஜானின் பிரார்த்தனைக்காக மசூதிகளைத் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது. கோவிட்-19 பரிசோதனைகளில், வேகமின்மைதான் வைரஸ் பாதிப்பாளர்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என்று எச்சரிக்கைகள் வந்துள்ளன.

இதன் காரணமாக, ஏராளமான மறைந்திருக்கும் அறிகுறியற்ற பாதிப்பாளர்கள் சுதந்திரமாகச் சுற்றிவருகின்றனர். இத்தகைய நோயாளிகள் சமூகத்திற்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும், நாட்டில் குறைந்தது 1.18 லட்சம் படுக்கைகளை அவசர அவசரமாக ஏற்பாடு செய்வதன் மூலம் எந்தவொரு அசம்பாவித நிலைமையைச் சமாளிக்க அரசாங்கமும் அலுவலர்களும் தயாராக உள்ளன.

நேபாளம்

  • சோதனைகளை நடத்துவதற்கு கூட பட்ஜெட் இல்லை

ஜனவரி 23 ஆம் தேதி வூகானில் இருந்து நேபாளத்திற்குத் திரும்பிவந்த ஒரு இளைஞரிடம் கரோனா அறிகுறிகள் காணப்பட்டன. இருப்பினும் அவரைப் சோதிக்க எந்தவித கருவிகளும் நாட்டில் கிடைக்கவில்லை. கோவிட் -19 வைரஸைக் கண்டறிவதற்கான சோதனைக்கு 17 ஆயிரம் நேபாள ரூபாய் வரை செலவாகும்.

எனவே, நபரின் மாதிரிகள் சிங்கப்பூருக்கு அனுப்பப்பட்டன. அங்கு அவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். பின்னர் அடுத்த ஒன்பது நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டார்.

அறிகுறி நிகழ்வுகளில் விரைவான வளர்ச்சியை அவர்கள் கவனித்ததால், அரசாங்கம் முதல் கட்டத்தில் சுமார் 100 சோதனை கருவிகளை வாங்கியது. இது நேபாளத்தின் வறிய விவகாரத்தின் பிரதிபலிப்பாகும். ஏற்கனவே குறைந்த பொருளாதார குறியீட்டைக் கொண்ட நேபாளம், இந்தியா மற்றும் சீனாவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்வதால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டின் வருமானத்தின் முக்கிய ஆதாரமாக சுற்றுலா உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தில் பல்வேறு மலையேறும் பயணங்களுக்காகவும், நாட்டின் இயற்கை அழகை ரசிக்கவும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகிறார்கள். தொற்றுநோய் காரணமாக, நேபாளம் தனது சுற்றுலா விசாக்களை ரத்து செய்ய வேண்டியிருந்தது.

மேலும் இந்தோ- நேபாள எல்லையை மூட வேண்டியிருந்தது. மார்ச் 24ஆம் தேதி, முதல் லாக்டவுன் நடைமுறைக்கு வந்தது. இதன் விளைவாக, லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். மலையேறுபவர்களும், அவர்களுக்கு ஆதரவாக கூலி சம்பாதிக்கும் மக்களும் இப்போது சும்மா இருக்கிறார்கள்.

அவசரகால மருந்துகள் கூட, இந்திய அரசால் மட்டுமே வழங்கப்படுகின்றன.

பூடான்

  • விரைவான நடவடிக்கை

பூடானில் முதல் கரோனா பாதிப்பு மார்ச் 6ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த 79 வயதான ஒரு பயணி கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. உடனடியாக, அவரது மனைவியும், 70 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதே மாதத்தின் 13ஆவது நாளில், அமெரிக்கர் தனது நாட்டுக்குப் புறப்பட்டார். இருப்பினும், அவரது மனைவியும், ஓட்டுநரும் பூடானிலேயே இருந்தனர்.

இந்தியாவில் வைரஸ் பரவுவது பற்றி அறிந்த பூடான் மன்னர், முழு இந்திய-பூடான் எல்லையையும் மூடினார். பல்வேறு பொருட்களின் இறக்குமதியும் தடை செய்யப்பட்டது. இந்தியா, மாலத்தீவு மற்றும் இலங்கையில் படித்து வேலை செய்கிறவர்கள் வெளியேற்றப்பட்டு, நாட்டின் தலைநகரான திம்புவில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். முற்றிலுமாக குணமடைந்த பின்னரே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இந்த வழியில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இலங்கை

  • முன்மாதிரி விழிப்புணர்வு

நாட்டில் ஒரு மருத்துவ அவசரநிலையை எவ்வாறு கையாள்வது என்பதை இலங்கை உலகுக்குக் காட்டியுள்ளது. பேரழிவுக்கு அரசாங்கம் தயாராகி, அதன் குடிமக்களின் நலனை முன்னுரிமையாக வைத்து முன்னணியில் செயல்பட்டது. அரசாங்கத்தின் விழிப்புணர்வு நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிதும் உதவியது.

ஆரம்பத்தில், வைரஸ் ஆபத்தான விகிதத்தில் பரவிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 16-ஆவது இடத்தில் இருந்தது. அதன் சரியான உத்திகள் மற்றும் செயல்படுத்தல் காரணமாக, இது சமீபத்தில் கொடிய தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்த நாடுகளின் பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அரசாங்கம் தனது நாடு முழுவதும் செயல்படுத்தி வந்த வெற்றிகரமான உத்திகளின் நிரூபிக்கப்பட்ட உண்மை இது.

உலக சுகாதார அமைப்பு (WHO) வைரஸ் மற்றும் தொற்றுநோய் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட்டவுடன், நாட்டின் அனைத்து விமான நிலையங்கள் மூடப்பட்டன. முன்னதாக, ஜனவரி 27ஆம் தேதி, சீனாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய ஒரு பெண்ணுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர் உடனடியாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டார்.

சீனாவின் வூகானில் தாக்கப்பட்ட இலங்கை மாணவர்கள் மீண்டும் சொந்த நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு, அந்தந்த குடும்பங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இலங்கையில் ஒரு சுற்றுலா வழிகாட்டி, மார்ச் 10 தேதியன்று சில இத்தாலிய சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பரவிய கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்து, மார்ச் 14 ஆம் நாள் தேதி முதல், நாட்டில் ஊரடங்கு நடவடிக்கைகளை அரசாங்கம் விதித்தது. இது வைரஸ் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்த உதவியது.

வங்கதேசம்

  • ரோஹிங்கியா குடியேற்றத்தின் கடுமையான வறுமை

வங்க தேசத்தின் மொத்த மக்கள் தொகை 16 கோடி. இங்கு எந்தவொரு அவசரநிலையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரத்து 169 அவசர சிகிச்சை பிரிவு வார்டு (ஐ.சி.யூ) படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அதாவது ஒரு லட்சம் பேருக்கு ஒரு படுக்கைக்குக் குறைவானது.

இதனை இம்மாத இறுதிக்குள் அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இங்கு முதல் கோவிட் -19 பாதிப்பு, மார்ச் 8 ஆம் தேதி கண்டறியப்பட்டது. முதல் மரணம், அன்றிலிருந்து 18-ஆவது நாளில் நிகழ்ந்தது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் முதல் லாக்டவுன் அந்நாட்டில் அமலில் உள்ளது.

COVID-19  COVID-19 pandemic  Coronavirus  COVID-19 outbreak  Coronavirus in India's neighbouring countries  கரோனா அண்டை நாடுகள் பாதிப்பு  கரோனா வைரஸ், கோவிட்-19 பெருந்தொற்று, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், மியான்மர், பூடான், இலங்கை, ரோஹிங்யா அகதிகள்  இந்திய அருகாமை நாடுகளின் நிலை என்ன
இந்திய வங்கதேச எல்லையில் கோவிட்-19 பரிசோதனை

ஜவுளித் தொழிலுக்கு அனைத்து கட்டுப்பாடுகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் குறைவான சோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. இறந்தவர்களின் எண்ணிக்கை உண்மையான வகையில் அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

மறுபுறம், சுமார் 10 லட்சம் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் கரோனா வைரஸின், “சூப்பர் ஸ்ப்ரெடர்களாக“ (பரப்பாளர்கள்) மாறக்கூடும் என்ற கவலைகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.

மியான்மர்

  • ரகசிய நெருக்கடி

மியான்மரின் இரு எல்லைகளிலும் உள்ள சீனாவும் தாய்லாந்தும் தங்கள் நாடுகளில் பெரும் நெருக்கடி நிலையை அறிவித்துவருகின்றன. மேலும் ஏராளமான பாதிப்பாளர்கள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளன. இருந்தபோதிலும், மியான்மர் மிகக் குறைந்த அளவில் பாதிக்கப்படுவதாக அறிவிக்கிறது.

அரசாங்கம் போதுமான சோதனைகளை செய்யவில்லை என்றும், பாதிப்பாளர்களின் எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இருப்பினும் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. இந்தக் கொடிய வைரஸ் பரவுவதிலிருந்து அவர்களின் வாழ்க்கை முறையே, அவர்களைப் பாதுகாத்து வருவதாக அரசாங்கம் கூறுகிறது.

மியான்மரில், மக்கள் பொதுவாக ஒருவருக்கொருவர் கைகளை குலுக்குவதில்லை. மேலும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடிப்பதையோ, ரூபாய் நோட்டு தாள்களை எண்ணும்போது நாக்கை நனைப்பதையோ ஊக்குவிப்பதில்லை. கரோனா பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பே நீண்ட காலமாக இதுபோன்ற ஒரு வாழ்க்கை முறை தங்கள் நாட்டில் நடைமுறையில் இருப்பதாக அரசாங்கம் அறிவிக்கிறது. மியான்மரில் முதல் வைரஸ் தொற்று மார்ச் 23 அன்று பதிவாகியுள்ளது.

மியான்மரை பொறுத்தமட்டில் மாவட்ட வாரியாக லாக்டவுன் நடைமுறை அமலில் உள்ளது. அங்கு ஒருவருக்கொருவர் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், பல்வேறு ஏற்பாடுகளை ஆட்சியாளர்கள் செய்துள்ளனர். மேலும் அந்தந்த மாவட்டத்தில் உள்ளூர் அரசு ஊரடங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது. நாட்டின் பிறப் பகுதிகளில் மக்கள் சமூக தூரத்தை பின்பற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளது.

அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு, மீட்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை காணலாம்.

நாடுகள்பாதிப்புமீட்புஇழப்பு
பாகிஸ்தான்16,8174,315385
வங்கதேசம்7,667160168
ஆப்கானிஸ்தான்2,17126064
இலங்கை66515407
மியான்மர்1502706
பூடான்070500
நேபாளம்571600

இதையும் படிங்க: நாடு முழுக்க கரோனா பரிசோதனை சாத்தியமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.