ETV Bharat / bharat

விளக்கமளியுங்கள் : மத்திய அரசை வலியுறுத்தும் மம்தா

author img

By

Published : Apr 20, 2020, 7:13 PM IST

கொல்கத்தா : மத்திய அமைச்சரவை குழுக்களை மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான காரணத்தை விளக்குமாறு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

COVID 19
COVID 19

இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மம்தா, "கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகள், அறிவுரைகள் ஆகியவற்றை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு (மேற்கு வங்க மாநிலம் உள்பட) மத்திய அமைச்சரவை குழுக்களை அனுப்புவது குறித்த மத்திய அரசின் திட்டம் தெளிவாக இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

மம்தா பானர்ஜி ட்வீட், mamata banerjee tweet, mamata banerjee,
மம்தா பானர்ஜி ட்வீட்

எனவே, இதற்கான வரைமுறைகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பகிர வேண்டும். மத்திய அரசு விளக்கமளிக்கும் வரை இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!

இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த முதலமைச்சர் மம்தா, "கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகள், அறிவுரைகள் ஆகியவற்றை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால், இந்தியா முழுவதுமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு (மேற்கு வங்க மாநிலம் உள்பட) மத்திய அமைச்சரவை குழுக்களை அனுப்புவது குறித்த மத்திய அரசின் திட்டம் தெளிவாக இல்லை. இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

மம்தா பானர்ஜி ட்வீட், mamata banerjee tweet, mamata banerjee,
மம்தா பானர்ஜி ட்வீட்

எனவே, இதற்கான வரைமுறைகள் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பகிர வேண்டும். மத்திய அரசு விளக்கமளிக்கும் வரை இதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கமாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : கரோனா உயிரிழப்பு - உடல்கள் தகனம் செய்வதை தடுக்க வேண்டாம் என வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.