ETV Bharat / bharat

கோவிட் - 19: இந்தியாவில் 55 லட்சத்தை தாண்டிய கரோனா

author img

By

Published : Sep 22, 2020, 3:26 PM IST

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 75 ஆயிரத்து 83 கரோனா பேருக்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. இதன்மூலம் பாதிப்பு எண்ணிக்கை 55 லட்சத்தைத் தாண்டியது.

COVID-19
COVID-19

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 75 ஆயிரத்து 83 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 53 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 44 லட்சத்து 97 ஆயிரத்து 867 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 88 ஆயிரத்து 935 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 9 லட்சத்து 33 ஆயிரத்து 185 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஆறு கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 779 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் 2ஆவது நாளாகப் போராடும் சஸ்பெண்ட் எம்.பிக்கள் - திருச்சி சிவா இட்லி அனுப்பிவைப்பு!

நாட்டின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணிநேரத்தில் 75 ஆயிரத்து 83 கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. அத்துடன் ஆயிரத்து 53 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.

கோவிட் - 19 தற்போதைய நிலவரம்

இதையடுத்து, நாட்டின் மொத்த நோய்த் தொற்று எண்ணிக்கை 55 லட்சத்தை தாண்டியுள்ளது. இதுவரை மொத்தம் 55 லட்சத்து 62 ஆயிரத்து 663 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 9 லட்சத்து 75 ஆயிரத்து 861 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 44 லட்சத்து 97 ஆயிரத்து 867 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், நாட்டில் இதுவரை 88 ஆயிரத்து 935 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பரிசோதனை நிலவரம்

கரோனா பரிசோதனை விவரம் குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் இன்று (ஆகஸ்ட் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 9 லட்சத்து 33 ஆயிரத்து 185 பரிசோதனை மேற்கொண்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஆறு கோடியே 53 லட்சத்து 25 ஆயிரத்து 779 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் 2ஆவது நாளாகப் போராடும் சஸ்பெண்ட் எம்.பிக்கள் - திருச்சி சிவா இட்லி அனுப்பிவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.