ETV Bharat / bharat

ஆந்திராவில் அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்!

author img

By

Published : Apr 1, 2020, 11:29 AM IST

அமராவதி: கரோனா வைரஸ் பரவல் மிரட்டிவரும் நிலையில் ஆந்திராவில் அரசு பணியாளர்களின் சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Coronavirus outbreak  Lockdown  Coronavirus lockdown  Andhra Pradesh Chief Minister  ஆந்திராவில் அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்!  அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் நிறுத்தம்  மாத சம்பளம் நிறுத்தம்  கரோனா அச்சுறுத்தல், கரோனா பரவல், இந்தியாவில் கரோனா தாக்குதல்  Coronavirus outbreak: AP defers salaries of CM, govt staff
Coronavirus outbreak Lockdown Coronavirus lockdown Andhra Pradesh Chief Minister ஆந்திராவில் அரசு ஊழியர்களின் மாத ஊதியம் நிறுத்தம்! அரசு ஊழியர்களுக்கு மாத சம்பளம் நிறுத்தம் மாத சம்பளம் நிறுத்தம் கரோனா அச்சுறுத்தல், கரோனா பரவல், இந்தியாவில் கரோனா தாக்குதல் Coronavirus outbreak: AP defers salaries of CM, govt staff

ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி செவ்வாய்க்கிழமை (நேற்று) வெளியிட்ட அறிவிப்பில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் கருத்தில் கொண்டும், வருவாய் நீரோட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பள ஒத்திவைப்பு ஊழியர்களுக்கு 10 முதல் 100 விழுக்காடு வரை இருக்கும் எனவும் அவர் கூறினார்.

அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், மாநில மேல்சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.), சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு 100 விழுக்காடு சம்பள ஒத்திவைப்பு அமல்படுத்தப்படும்.

அகில இந்திய சேவை அலுவலர்களுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) 60 விழுக்காடும், மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் 50 விழுக்காடும், நான்காம் நிலை ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காடு சம்பளம் ஒத்திவைக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆந்திராவில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க 1600க்கும் மேற்பட்டோரும், உலகம் முழுக்க 8 லட்சத்துக்கு மேற்பட்டோரும் இந்த ஒட்டுண்ணி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தெலுங்கு தேசங்களின் துயர் துடைத்த ராமோஜி!

ஆந்திர தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி செவ்வாய்க்கிழமை (நேற்று) வெளியிட்ட அறிவிப்பில், “ஆந்திர அரசு முதலமைச்சர், அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோரின் மாதச் சம்பளத்தை ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதைக் கருத்தில் கொண்டும், வருவாய் நீரோட்டம் முற்றிலும் வறண்டு விட்டதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பள ஒத்திவைப்பு ஊழியர்களுக்கு 10 முதல் 100 விழுக்காடு வரை இருக்கும் எனவும் அவர் கூறினார்.

அதாவது முதலமைச்சர், அமைச்சர்கள், மாநில மேல்சபை உறுப்பினர்கள் (எம்.எல்.சி.), சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு 100 விழுக்காடு சம்பள ஒத்திவைப்பு அமல்படுத்தப்படும்.

அகில இந்திய சேவை அலுவலர்களுக்கு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்) 60 விழுக்காடும், மற்ற அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் ஊதியத்தில் 50 விழுக்காடும், நான்காம் நிலை ஊழியர்கள், அவுட்சோர்ஸ் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் ஆகியோருக்கு 10 விழுக்காடு சம்பளம் ஒத்திவைக்கப்படும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆந்திராவில் 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுக்க 1600க்கும் மேற்பட்டோரும், உலகம் முழுக்க 8 லட்சத்துக்கு மேற்பட்டோரும் இந்த ஒட்டுண்ணி வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தெலுங்கு தேசங்களின் துயர் துடைத்த ராமோஜி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.