ETV Bharat / bharat

வழிப்பறியில் ஈடுபட்டவரை 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டு - காவல்துறையினருக்கு முதுநிலை கண்காணிப்பாளர் பாராட்டு

புதுச்சேரி: காரைக்காலில் ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றவரை, 24 மணி நேரத்தில் பிடித்த காவல்துறையினருக்கு முதுநிலை கண்காணிப்பாளர் பாராட்டு தெரிவித்தார்.

chain snatching
chain snatching
author img

By

Published : Dec 24, 2020, 2:51 AM IST

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் கிராம்புதோட்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி வசந்தகோகிலா. இவர், தனது மகளுடன் நேற்று (டிசம்பர் 23) வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வசந்தகோகிலா அணிந்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றார்.

இதையடுத்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வசந்தகோகிலா புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தீவிர விசாரணையில் ஈடுபட்டுனர். அப்போது, திருட்டில் ஈடுபட்டவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை வைத்து காரைக்கால் கடற்கரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தாலி செயினை திருடியவர் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சேட்டு (29) என்பதும், இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 11 சவரன் தாலி செயின், இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இதனிடையே, விரைவாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினரை, முதுநிலை கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் காரைக்கால், தெற்கு காவல் கண்காணிப்பாளர் விரவல்லவன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் கிராம்புதோட்டம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மனைவி வசந்தகோகிலா. இவர், தனது மகளுடன் நேற்று (டிசம்பர் 23) வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத ஒருவர், வசந்தகோகிலா அணிந்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள 11 சவரன் தாலி செயினை பறித்துச் சென்றார்.

இதையடுத்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் வசந்தகோகிலா புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள், தீவிர விசாரணையில் ஈடுபட்டுனர். அப்போது, திருட்டில் ஈடுபட்டவர் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் அடையாளங்களை வைத்து காரைக்கால் கடற்கரையில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், தாலி செயினை திருடியவர் என்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சேட்டு (29) என்பதும், இவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 11 சவரன் தாலி செயின், இரண்டு சக்கர வாகனத்தை கைப்பற்றினர்.

இதனிடையே, விரைவாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட நபரை கைது செய்த காவல்துறையினரை, முதுநிலை கண்காணிப்பாளர் நிஹாரிகா பட் மற்றும் காரைக்கால், தெற்கு காவல் கண்காணிப்பாளர் விரவல்லவன் ஆகியோர் வெகுவாக பாராட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.