ETV Bharat / bharat

தனிமைப்படுத்தப்பட்டவர்களின் செல்போன்களைக் கண்காணிக்கும் ஆந்திர அரசு!

author img

By

Published : Mar 31, 2020, 9:51 AM IST

வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் வீடுகளை விட்டு வெளியேறுவதைத் தடுக்க அவர்களின் அலைபேசி எண்களை ஆந்திர மாநில அரசு கண்காணித்துவருகிறது.

combating-covid-19-andhra-pradesh-to-track-cell-phones-of-those-in-home-quarantine-to-ensure-compliance
combating-covid-19-andhra-pradesh-to-track-cell-phones-of-those-in-home-quarantine-to-ensure-compliance

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்கள் ஆகியவற்றை அறிவதற்கு சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து ஆந்திர பேரிடர் மீட்பு மையத்தினர் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கரோனா எச்சரிக்கை கண்காணிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் அலைபேசி எண்களைத் தொலைத்தொடர்பு வல்லுநர்களுடன் இணைந்து கண்காணித்துவருகிறது. இதில் ஏற்கனவே 25 ஆயிரம் அலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

இந்தக் கண்காணிப்பு மையத்தின் மூலம், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது இடத்திலிருந்து 100 மீ அளவிற்கு கடந்துசென்றால், உடனடியாக நகராட்சி அலுவலர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

இதன்மூலம் அவரை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடியும். ஒருவேளை இதனை தனிமைப்படுத்தப்பட்டவர் தொடர்ந்து செய்தால், அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அலைபேசி எண்களைக் கொண்டு அவர்கள் எந்தெந்த பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இதன்மூலம் அந்தக் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர், எந்தப் பகுதியிலாவது 15 நிமிடங்கள் வரை நேரம் செலவிட்டிருந்தால், அதனை ரெட் சோனாக (Red Zone) அறிவித்து உடனடியாக சுகாதாரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

இந்தத் திட்டத்தினை தெலங்கானா, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இளவரசர் சார்லஸின் நிலைமை என்ன?

தனிமைப்படுத்தப்பட்டவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் பயண விவரங்கள் ஆகியவற்றை அறிவதற்கு சில தனியார் அமைப்புகளுடன் இணைந்து ஆந்திர பேரிடர் மீட்பு மையத்தினர் புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் கரோனா எச்சரிக்கை கண்காணிப்பு மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையம் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட மக்களின் அலைபேசி எண்களைத் தொலைத்தொடர்பு வல்லுநர்களுடன் இணைந்து கண்காணித்துவருகிறது. இதில் ஏற்கனவே 25 ஆயிரம் அலைபேசி எண்கள் கண்காணிக்கப்பட்டுவருகின்றன.

இந்தக் கண்காணிப்பு மையத்தின் மூலம், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தங்களது இடத்திலிருந்து 100 மீ அளவிற்கு கடந்துசென்றால், உடனடியாக நகராட்சி அலுவலர்களுக்கு எச்சரிக்கை அனுப்பப்படும்.

இதன்மூலம் அவரை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப முடியும். ஒருவேளை இதனை தனிமைப்படுத்தப்பட்டவர் தொடர்ந்து செய்தால், அரசு சார்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேபோல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அலைபேசி எண்களைக் கொண்டு அவர்கள் எந்தெந்த பகுதிகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்பதைக் கண்டறிந்துள்ளோம்.

இதன்மூலம் அந்தக் கரோனா பாதிப்புக்கு உள்ளான நபர், எந்தப் பகுதியிலாவது 15 நிமிடங்கள் வரை நேரம் செலவிட்டிருந்தால், அதனை ரெட் சோனாக (Red Zone) அறிவித்து உடனடியாக சுகாதாரப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுவருகிறது.

இந்தத் திட்டத்தினை தெலங்கானா, பிகார், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் பின்பற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: இளவரசர் சார்லஸின் நிலைமை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.