கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களைப் பாதுகாக்க புதுவை அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், நேற்று ஊரடங்கு உத்தரவின்போது மக்களுக்காக பணியாற்றியவர்களை முதலமைச்சர் நாராயணசாமி கை தட்டி பாராட்டினார்.
இதையடுத்து இன்று புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், “புதுச்சேரியில் கரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுபடுத்துவதற்காகவும், தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காகவும் முதலமைச்சர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் தங்களுடைய ஒரு மாத ஊதியத்தை ‘முதலமைச்சர் நிவாரண நிதிக்காக’ அளிக்கவுள்ளார்கள்.