ETV Bharat / bharat

இந்தியாவின் பொருளாதாரத் திட்டங்களைச் சீரழிக்க கங்கணம்கட்டி காத்துக்கொண்டிருக்கும் சீனா!

author img

By

Published : Feb 6, 2021, 9:23 AM IST

Updated : Feb 6, 2021, 2:26 PM IST

அண்டை நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் சீனா தனது ஆதிக்கப் பாதத் தடங்களை ஆழமாகப் பதித்து எப்படி, மற்ற நாடுகளின் நலன்களை காலில் போட்டு மிதித்து வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் அவற்றிற்கு அப்பாலும் தனது பொருளாதார, அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஆகப்பெரிய சாலைகளின் வலைப்பின்னலை உருவாக்கும் இலக்குடன் சீனா மிகப்பெரிய ‘பெல்ட் அண்ட் ரோட்ஸ் இனிஷியேட்டிவ்’ என்ற மிகப்பெரிய முயற்சியையும், பின்பு கடல் வணிகப் பாதைகளையும் உருவாக்கும் முயற்சியையும் எடுத்தது.

China
China

ஹைதராபாத்: அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் கூட்டுமுயற்சித் திட்டங்களைத் திருட்டுத்தனமாக ஊடுபுகுந்து சீர்குலைப்பது சீனாவுக்கு கைவந்த கலை; போதைப்பழக்கத்திற்கு நிகரான ஒரு கலை அது. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் கிழக்கு கொள்கலன் முனையம் (ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் - ஈசிடி) என்ற ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அரசு எடுத்த முடிவு.

கொழும்புவில் கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்குவது சம்பந்தமாக 2018இல் மைத்ரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நிர்வாகத்தின்போது இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய நாடுகள் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன, அந்தக் காலக்கட்டத்தில் மகிந்த ராஜபக்ச சிறிசேனவின் தலைமையிலிருந்த இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து (ஸ்ரீலங்கா ஃபிரீடம் பார்ட்டி – எஸ்எல்எஃப்பி) விலகிப் போயிருந்தார்.

அந்தக் கட்சியோடு கைக்கோத்து ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியா, ஜப்பான் என்ற கூட்டாண்மை நாடுகளோடு ஒரு ஒத்துழைப்பு வரைவுக்குறிப்பை (மெமோரண்டம் ஆஃப் கோஆப்பரேஷன்) சாத்தியமாக்கினார்.

அந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்து ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் பலனை இலங்கைக்கு அதிகரிக்கச் செய்வதுதான் ஒப்பந்தத்தின் அதிமுக்கிய நோக்கம். இந்தக் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருந்தால், இலங்கை அரசுக்கு, திட்டத்தின் நூறு விழுக்காடு உடமையும், திட்டத்தின் செயல்பாட்டில் 51 விழுக்காடு கூட்டாண்மை பங்கும் கிடைத்திருக்கும். ஆனால் சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த மற்ற திட்டங்களில் ஆசியாவின் பொருளாதார ஜாம்பவனாக இருந்து மிரட்டும் சீனா மட்டுமே பெரும்பங்கைக் கொண்டிருந்தது.

ஆனாலும் ராஜபக்ச சகோதாரர்கள் இந்த ஈசிடி முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஓர் எதிர்மறை பரப்புரையை நிகழ்த்திக் காட்டினார்கள். அது திட்டத்தை தீய சாத்தானாகக் காட்டியது மட்டுமல்லாமல், 2020 தேர்தலில் அவர்களுக்கு எதிரிகளை வெல்லும் பலத்தையும் கொடுத்தது. மேலும் அது கொழும்புத் துறைமுகத்தில் உருவாக இருந்த கண்டெய்னர் டெர்மினல் சம்பந்தமான ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்க, போராடிக் கொண்டிருந்த, எளிதில் ஏமாறக்கூடிய துறைமுகச் சங்க ஊழியர்களை மேலும் தூண்டியது.

அந்தப் பிரச்சினை ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் ஒரு பாகமாக இருந்தது. தான் அந்த ஈசிடி ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக அவர் போராட்டத் தொழிலாளர்களுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அந்தத் தீவு தேசத்தில் இந்தியா சம்பந்தமான பல விஷயங்கள் மாறிவிடும் என்பது நிதர்சனமானது.

கிழக்கு கொள்கலன் முனையம் என்ற ஈசிடி திட்டம் சீனாவுக்கு நெருடலாகவும், உறுத்தலாகவும் இருந்தது. ஏனெனில் அந்த முனையம் ஏற்கனவே சீனா இலங்கையோடு கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கொழும்பு அகில உலக கொள்கலன் முனையத்தின் (கொழும்பு இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல்) அருகில் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கொழும்பு டெர்மினலில் சீனாவின் அதிகபட்ச பங்கு 84 விழுக்காடு.

அண்டை நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் சீனா தனது ஆதிக்கப் பாதத் தடங்களை ஆழமாகப் பதித்து எப்படி மற்ற நாடுகளின் நலன்களை காலில் போட்டு மிதித்து வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் அவற்றிற்கு அப்பாலும் தனது பொருளாதார, அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஆகப்பெரிய சாலைகளின் வலைப்பின்னலை உருவாக்கும் இலக்குடன் சீனா மிகப்பெரிய ‘பெல்ட் அண்ட் ரோட்ஸ் இனிஷியேட்டிவ்’ என்ற மிகப்பெரிய முயற்சியையும், பின்பு கடல் வணிகப் பாதைகளையும் உருவாக்கும் முயற்சியையும் எடுத்தது.

முற்றிலும் நிறைவேற வேண்டும் தன் லட்சியங்கள்; யாரும் எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது தனது இலக்குகளை என்பதுதான் சீனாவின் எண்ணம். இந்தியாவின் பரந்த தோற்றம், அதன் பூகோள அரசியல் நிலை அனிச்சையாகவே இந்தியாவை சீனாவின் ஆக்கிரமிப்பு விரிவாக்க கொள்கைக்கு எதிரியாக மாற்றிவிட்டது. அதனால்தான், எல்லா இடங்களிலும் இந்தியாவை துரத்துகிறது சீனா; அதன் பொருளாதாரப் பலத்தை சேதப்படுத்த அதன் வளர்ச்சித் திட்டங்களை முறியடிக்க முயல்கிறது.

கிழக்குக் கொள்கலன் முனையத் திட்டத்தைத் தவிர, மற்றுமொரு இந்தியாவின் திட்டத்தை சீனா முறியடிக்க முயன்றது. இர்கான் (ஐஆர்சீஓஎன்) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் மூலம் ஈரானுக்காக சபஹார்-ஜஹேடன் ரயில் பாதையை இந்தியா கட்டித்தர இருந்தது. ஆனால் சீனா ரகசியமாக ஈரான் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவை இந்தத் திட்டத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டுகோள்விடுத்ததால் இந்தத் திட்டம் சிறிது காலம் பின்னடவைச் சந்தித்தது.

ஆனால் இலங்கையைப் போலன்றி, ஈரான் இந்தியாவிற்கான வாய்ப்புகளை முற்றிலும் விலக்கிவிடவில்லை. நிஜத்தில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையைவிட்டு டொனால்ட் ட்ரம்ப் அவமானகரமான முறையில் வெளியேறியவுடன், சபஹார் துறைமுகத்தில் இந்தியாவின் செயல்பாடு அதிகரித்துவிட்டது.

சீனாவின் பிரித்தாளும் அரசியல்

ராஜபக்ச சகோதரர்கள் சிரி லங்கா பொதுஜன பேரமுனா (எஸ்எல்பிபி அல்லது மக்கள் முன்னணி) என்ற தங்களின் சொந்தக் கட்சியைத் தொடங்கிய பின்பு, அவர்கள் பெரிய அளவில் வளர்ந்தார்கள்; புத்தசமய சிங்கள இனவாதப் பிரதேசத்தில் அவர்களுக்கான ஆதரவும் பெரிய அளவில் வளர்ந்தது. அவர்களது புதிய மக்கள் முன்னணி இலங்கை சுதந்திரா கட்சி (எஸ்எல்எஃப்பி) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) ஆகிய இரண்டு பெரும் கட்சிகளின் அரசியல் தளத்தைத் தரைமட்டமாக்கி தவிடுபொடியாக்கியது.

முன்பு இலங்கை சுதந்திரா கட்சியின் தயவினால் மகிந்த ராஜபக்ச பிரதமராகச் செயல்பட்டிருந்தாலும், அவரது இளைய சகோதரர்தான் சீனாவின் ஆதரவோடு தனது சொந்தக் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார், ராஜபக்சவை மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவைக்கும் நோக்கத்துடன் இல்லாவிட்டால் இந்நேரம் போர்க்காலக் குற்றங்களுக்காக அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

சீனா தனக்கு எதிரானது என்று நினைத்த முந்தைய அரசின் கொள்கைத் தீர்மானத்தைத் தூக்கிக் கிடப்பில் போட்டதின் பயனை ராஜபக்ச சகோதரர்கள் நன்றாக அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எந்தவொரு விவேக உத்தித் திட்டத்திலும் ஈடுபடுத்துவது இலங்கைக்குச் சாத்தியமில்லை என்பதால், அந்தப் பகுதியில் வேறொரு பார்ட்னரைத் தேடிக் கண்டுபிடிப்பது அந்த நாட்டிற்குப் பொருத்தமானதுதான்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, ஈசிடி என்ற கிழக்குக் கொள்கலன் முனையம் (ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல்) திட்டத்திலிருந்து விலகிக் கொள்வது விவேகமான செயல் அல்ல. கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மீதான பேச்சுவார்த்தையை இந்தியா தொடர வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தியா என்னும் காரணியை இந்தப் பகுதியில் எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.

ஹைதராபாத்: அண்டை நாடுகளுடன் இந்தியா கொண்டிருக்கும் கூட்டுமுயற்சித் திட்டங்களைத் திருட்டுத்தனமாக ஊடுபுகுந்து சீர்குலைப்பது சீனாவுக்கு கைவந்த கலை; போதைப்பழக்கத்திற்கு நிகரான ஒரு கலை அது. அதற்கு ஆகச்சிறந்த எடுத்துக்காட்டுதான் கிழக்கு கொள்கலன் முனையம் (ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் - ஈசிடி) என்ற ஒப்பந்தத்திலிருந்து விலகிக் கொள்வதாக இலங்கை அரசு எடுத்த முடிவு.

கொழும்புவில் கிழக்கு கொள்கலன் முனையத்தை உருவாக்குவது சம்பந்தமாக 2018இல் மைத்ரிபால சிறிசேன-ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சி நிர்வாகத்தின்போது இந்தியா-ஜப்பான்-இலங்கை ஆகிய நாடுகள் ஒரு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன, அந்தக் காலக்கட்டத்தில் மகிந்த ராஜபக்ச சிறிசேனவின் தலைமையிலிருந்த இலங்கை சுதந்திரா கட்சியிலிருந்து (ஸ்ரீலங்கா ஃபிரீடம் பார்ட்டி – எஸ்எல்எஃப்பி) விலகிப் போயிருந்தார்.

அந்தக் கட்சியோடு கைக்கோத்து ஜனாதிபதி விக்கிரமசிங்க இந்தியா, ஜப்பான் என்ற கூட்டாண்மை நாடுகளோடு ஒரு ஒத்துழைப்பு வரைவுக்குறிப்பை (மெமோரண்டம் ஆஃப் கோஆப்பரேஷன்) சாத்தியமாக்கினார்.

அந்தப் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைத்து ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் பலனை இலங்கைக்கு அதிகரிக்கச் செய்வதுதான் ஒப்பந்தத்தின் அதிமுக்கிய நோக்கம். இந்தக் கூட்டாண்மை (பார்ட்னர்ஷிப்) திட்டம் மட்டும் வெற்றிபெற்றிருந்தால், இலங்கை அரசுக்கு, திட்டத்தின் நூறு விழுக்காடு உடமையும், திட்டத்தின் செயல்பாட்டில் 51 விழுக்காடு கூட்டாண்மை பங்கும் கிடைத்திருக்கும். ஆனால் சீனாவுடன் இலங்கை கொண்டிருந்த மற்ற திட்டங்களில் ஆசியாவின் பொருளாதார ஜாம்பவனாக இருந்து மிரட்டும் சீனா மட்டுமே பெரும்பங்கைக் கொண்டிருந்தது.

ஆனாலும் ராஜபக்ச சகோதாரர்கள் இந்த ஈசிடி முக்கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஓர் எதிர்மறை பரப்புரையை நிகழ்த்திக் காட்டினார்கள். அது திட்டத்தை தீய சாத்தானாகக் காட்டியது மட்டுமல்லாமல், 2020 தேர்தலில் அவர்களுக்கு எதிரிகளை வெல்லும் பலத்தையும் கொடுத்தது. மேலும் அது கொழும்புத் துறைமுகத்தில் உருவாக இருந்த கண்டெய்னர் டெர்மினல் சம்பந்தமான ஒப்பந்தத்தைக் கடுமையாக எதிர்க்க, போராடிக் கொண்டிருந்த, எளிதில் ஏமாறக்கூடிய துறைமுகச் சங்க ஊழியர்களை மேலும் தூண்டியது.

அந்தப் பிரச்சினை ராஜபக்சவின் தேர்தல் பரப்புரையில் ஒரு பாகமாக இருந்தது. தான் அந்த ஈசிடி ஒப்பந்தத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவதாக அவர் போராட்டத் தொழிலாளர்களுக்குத் தேர்தல் வாக்குறுதி அளித்தார். ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்றியவுடன், அந்தத் தீவு தேசத்தில் இந்தியா சம்பந்தமான பல விஷயங்கள் மாறிவிடும் என்பது நிதர்சனமானது.

கிழக்கு கொள்கலன் முனையம் என்ற ஈசிடி திட்டம் சீனாவுக்கு நெருடலாகவும், உறுத்தலாகவும் இருந்தது. ஏனெனில் அந்த முனையம் ஏற்கனவே சீனா இலங்கையோடு கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கொழும்பு அகில உலக கொள்கலன் முனையத்தின் (கொழும்பு இன்டர்நேஷனல் கண்டெய்னர் டெர்மினல்) அருகில் உருவாக்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. 1.4 பில்லியன் டாலர் மதிப்புள்ள கொழும்பு டெர்மினலில் சீனாவின் அதிகபட்ச பங்கு 84 விழுக்காடு.

அண்டை நாடுகளிலும் அவற்றிற்கு அப்பாலும் சீனா தனது ஆதிக்கப் பாதத் தடங்களை ஆழமாகப் பதித்து எப்படி மற்ற நாடுகளின் நலன்களை காலில் போட்டு மிதித்து வளர்ந்தது என்பதைப் புரிந்துகொள்வது முக்கியம். ஆசியாவிலும், ஐரோப்பாவிலும் அவற்றிற்கு அப்பாலும் தனது பொருளாதார, அரசியல் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்காக ஆகப்பெரிய சாலைகளின் வலைப்பின்னலை உருவாக்கும் இலக்குடன் சீனா மிகப்பெரிய ‘பெல்ட் அண்ட் ரோட்ஸ் இனிஷியேட்டிவ்’ என்ற மிகப்பெரிய முயற்சியையும், பின்பு கடல் வணிகப் பாதைகளையும் உருவாக்கும் முயற்சியையும் எடுத்தது.

முற்றிலும் நிறைவேற வேண்டும் தன் லட்சியங்கள்; யாரும் எதிர்த்துக் கேள்விக் கேட்கக் கூடாது தனது இலக்குகளை என்பதுதான் சீனாவின் எண்ணம். இந்தியாவின் பரந்த தோற்றம், அதன் பூகோள அரசியல் நிலை அனிச்சையாகவே இந்தியாவை சீனாவின் ஆக்கிரமிப்பு விரிவாக்க கொள்கைக்கு எதிரியாக மாற்றிவிட்டது. அதனால்தான், எல்லா இடங்களிலும் இந்தியாவை துரத்துகிறது சீனா; அதன் பொருளாதாரப் பலத்தை சேதப்படுத்த அதன் வளர்ச்சித் திட்டங்களை முறியடிக்க முயல்கிறது.

கிழக்குக் கொள்கலன் முனையத் திட்டத்தைத் தவிர, மற்றுமொரு இந்தியாவின் திட்டத்தை சீனா முறியடிக்க முயன்றது. இர்கான் (ஐஆர்சீஓஎன்) என்றழைக்கப்படும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனத்தின் மூலம் ஈரானுக்காக சபஹார்-ஜஹேடன் ரயில் பாதையை இந்தியா கட்டித்தர இருந்தது. ஆனால் சீனா ரகசியமாக ஈரான் தலைவர்களைச் சந்தித்து இந்தியாவை இந்தத் திட்டத்திலிருந்து விலக்கிவைக்க வேண்டுகோள்விடுத்ததால் இந்தத் திட்டம் சிறிது காலம் பின்னடவைச் சந்தித்தது.

ஆனால் இலங்கையைப் போலன்றி, ஈரான் இந்தியாவிற்கான வாய்ப்புகளை முற்றிலும் விலக்கிவிடவில்லை. நிஜத்தில் அமெரிக்காவில் வெள்ளை மாளிகையைவிட்டு டொனால்ட் ட்ரம்ப் அவமானகரமான முறையில் வெளியேறியவுடன், சபஹார் துறைமுகத்தில் இந்தியாவின் செயல்பாடு அதிகரித்துவிட்டது.

சீனாவின் பிரித்தாளும் அரசியல்

ராஜபக்ச சகோதரர்கள் சிரி லங்கா பொதுஜன பேரமுனா (எஸ்எல்பிபி அல்லது மக்கள் முன்னணி) என்ற தங்களின் சொந்தக் கட்சியைத் தொடங்கிய பின்பு, அவர்கள் பெரிய அளவில் வளர்ந்தார்கள்; புத்தசமய சிங்கள இனவாதப் பிரதேசத்தில் அவர்களுக்கான ஆதரவும் பெரிய அளவில் வளர்ந்தது. அவர்களது புதிய மக்கள் முன்னணி இலங்கை சுதந்திரா கட்சி (எஸ்எல்எஃப்பி) மற்றும் ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பி) ஆகிய இரண்டு பெரும் கட்சிகளின் அரசியல் தளத்தைத் தரைமட்டமாக்கி தவிடுபொடியாக்கியது.

முன்பு இலங்கை சுதந்திரா கட்சியின் தயவினால் மகிந்த ராஜபக்ச பிரதமராகச் செயல்பட்டிருந்தாலும், அவரது இளைய சகோதரர்தான் சீனாவின் ஆதரவோடு தனது சொந்தக் கட்சியை ஆரம்பிக்கும் எண்ணத்தைக் கொண்டிருந்தார், ராஜபக்சவை மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவைக்கும் நோக்கத்துடன் இல்லாவிட்டால் இந்நேரம் போர்க்காலக் குற்றங்களுக்காக அவர் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருந்திருப்பார்.

சீனா தனக்கு எதிரானது என்று நினைத்த முந்தைய அரசின் கொள்கைத் தீர்மானத்தைத் தூக்கிக் கிடப்பில் போட்டதின் பயனை ராஜபக்ச சகோதரர்கள் நன்றாக அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எந்தவொரு விவேக உத்தித் திட்டத்திலும் ஈடுபடுத்துவது இலங்கைக்குச் சாத்தியமில்லை என்பதால், அந்தப் பகுதியில் வேறொரு பார்ட்னரைத் தேடிக் கண்டுபிடிப்பது அந்த நாட்டிற்குப் பொருத்தமானதுதான்.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, ஈசிடி என்ற கிழக்குக் கொள்கலன் முனையம் (ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல்) திட்டத்திலிருந்து விலகிக் கொள்வது விவேகமான செயல் அல்ல. கொழும்புத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மீதான பேச்சுவார்த்தையை இந்தியா தொடர வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே இந்தியா என்னும் காரணியை இந்தப் பகுதியில் எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க முடியும்.

Last Updated : Feb 6, 2021, 2:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.