ETV Bharat / bharat

சீனாவின் உதவியை எதிர்நோக்கும் ஆப்பிரிக்க நாடுகள்! - ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமை

கம்பலா: கரோனா பெருந்தொற்று மிகப்பெரிய பொருளாதார அழிவு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 20 மில்லியனுக்கும் மேற்பட்டோருக்கு வேலையிழப்பு ஏற்படும் தருணத்தில், சிறந்த வர்த்தகப் பங்குதாரர் மற்றும் கடன் வழங்குபவரான சீனாவால் தங்களுக்கு என்ன செய்ய முடியும் என்றும், ஆப்பிரிக்க தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

China silent amid global calls to give Africa debt relief  global calls to give Africa debt  Africa  சீனாவின் உதவியை எதிர்நோக்கும் ஆப்பிரிக்க நாடுகள்  ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமை  ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான காலூன்றிய சீனா
China silent amid global calls to give Africa debt relief global calls to give Africa debt Africa சீனாவின் உதவியை எதிர்நோக்கும் ஆப்பிரிக்க நாடுகள் ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமை ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான காலூன்றிய சீனா
author img

By

Published : Apr 30, 2020, 12:26 PM IST

ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உடனடி நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இதில் பில்லியன் கணக்கான கடன் தொகைகளை விடுவித்தல் போன்றவைகளும் அடங்கும். சீனாவின் உதவிக்கான எதிர்பார்ப்பு ஆப்பிரிக்காவில் அதிகம். ஆனால், இவ்விவகாரத்தில் பெய்ஜிங் நீண்ட அமைதி காத்துவருகிறது.

ஆப்பிரிக்க அரசாங்கத்தின் கடனில் மூன்றில் ஒரு பகுதியை சீனா வைத்துள்ளது. நெடுஞ்சாலைகள் முதல் நீர்மின் அணைகள் வரை அனைத்தையும் கட்டியெழுப்ப, சீன ஆதரவு மூலதனத்திற்கான நாடுகளுக்கு கடன்பட்டுள்ளது. இது கடன் பற்றிய கவலைகளுக்கும், இறையாண்மையை இழப்பதற்கும் வழிவகுக்கிறது.
அங்கோலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் உட்பட, தங்கள் வரவு செலவுத் திட்டங்களில் கணிசமானப் பகுதியை கடனுக்காகச் செலவிடுகின்றன. அதே நேரத்தில், சுகாதாரமும், கல்வியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி உகாண்டா நாட்டின் நிதியமைச்சர் மத்தியா கசைஜா கூறுகையில், “உகாண்டா போன்ற ஒரு நாட்டிற்கு எந்தவொரு கால அவகாசமும் வரவேற்கத்தக்கது.

ஆனால் கடந்தாண்டு அதிர்ச்சியூட்டும் பற்றாக்குறைகள் காரணமாக, அரசாங்கத்தை இயங்க வைக்க அதிகளவு கடன் தேவைப்பட்டது. உகாண்டாவின் தேசியக் கடன் 2018 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவிற்கு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
சீனாவுடன் எங்களுக்கு வலுவான இருதரப்பு உறவுகள் உள்ளன. ஆனால், அவர்கள் தற்போது கடன் விவகாரங்கள் குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை” என்றார்.

China silent amid global calls to give Africa debt relief  global calls to give Africa debt  Africa  சீனாவின் உதவியை எதிர்நோக்கும் ஆப்பிரிக்க நாடுகள்  ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமை  ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான காலூன்றிய சீனா
சீன அதிபர் ஜி ஜின்பிங்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, 2020 ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் வரை கடன் கொடுக்க செல்வந்த ஜி20 நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினராக சீனா இதற்கு உடன்படவில்லை. ஆயினும், இந்த விவகாரத்தில் சீனா தனித்து செயல்படாது என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் உண்மையான கடன் விடுவிப்பு சாத்தியமில்லை என்றும், ஆப்பிரிக்காவில் பாரம்பரிய செல்வாக்கு இருந்தபோதிலும், உலகளாவிய அழுத்தம் காரணமாக ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என்று கணித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவின் நிதியமைச்சர் பெய்ஜிங்கிலிருந்து அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

சீனா வலுவாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையத்துடன் பேசிய கென் ஓஃபோரி-அட்டா கூறினார். சீனாவுக்கான ஆப்பிரிக்கா கடன் 145 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு சுமார் 8 பில்லியன் டாலர் பணம் தேவைப்படுகிறது. எனவே அதைப் பார்க்க வேண்டும். இது ஒரு வெளிப்படுத்துதலுக்கான தருணம். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம், ஆப்பிரிக்காவிற்கு சீனா கடன் நிவாரணம் அளிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ஏப்ரல் 7ஆம் தேதி சீனா, இந்த நாடுகளின் சிரமங்களை ராஜதந்திர வழியில் ஆலோசனை மூலம் தீர்க்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிரிக்காவுக்கு உதவுவதில் உள்ள சிரமங்களை சீனா சமாளித்துள்ளது. சீனா தனது திறன்களுக்கும், தொற்றுநோய் மற்றும் ஆபிரிக்காவின் தேவைகளுக்கு ஏற்பவும், அந்நாடுகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மூலதனத்துடன் வரும் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சில ஆப்பிரிக்க தலைவர்கள் பெய்ஜிங்கிற்கு திரும்பியுள்ளதால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சீனாவின் தடம் விரிவடைந்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற நிதி வழங்குநர்கள் ஊழல் மற்றும் பிறப் பிரச்சனைகள் காரணமாக தயங்குகின்றனர்.

இதுமட்டுமின்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற முனைப்பு காட்டிவருகிறது. அங்கோலா, கடந்த 2017ஆம் ஆண்டில் 42.8 பில்லியன் டாலர் வரை சீனாவிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளது.

கச்சா எண்ணெய்யை ஓரளவு சீனாவுக்கு அனுப்புவதன் மூலம் அதன் கடனை திருப்பிச் செலுத்துகிறது. சீன அரசாங்கம், வங்கிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் 2000ஆவது ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, 143 பில்லியன் டாலர் கடன்களை நீட்டித்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சீனா ஆப்பிரிக்கா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருவாய் பெருமளவு குறைந்துகொண்டே போவதால் பல கடன் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டு பெரும் அழுத்தத்திற்குள்ளாகும். மேலும் பல மறு நிதியளிப்பு, மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இவற்றில் பலவற்றிற்கு சீனா நிதியுதவி அளிக்கும். இது நாட்டுக்கு மறு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்கிறது என்று பொருளாதார புலனாய்வுப் பிரிவின் ஆப்பிரிக்கா ஆய்வாளர் நாதன் ஹேய்ஸ் கூறினார். ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடம் கடனை எதிர்நோக்கும் அதேநேரத்தில், சீனாவின் தற்போதைய நிலையையும் உணர்ந்துள்ளனர்.

உலகளவில் புதிதாக தலைதூக்கிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு, தொழில்கள் இடர்பாடு, வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் ஆப்பிரிக்க தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எவ்வாறாயினும், ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் அதீத முதலீடு தொடரும்பட்சத்தில், சில ஆபத்தான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த காலங்களில் சீனாவிலிருந்து 1.5 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை பின்தங்கியுள்ளது. அதன்பின்னர், 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்தின் பாதியை அரசுக்குச் சொந்தமான சீன வணிகர்கள் குழு திரும்ப வாங்கியது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய எஃப்.டி.ஐ. கொள்கை பாரபட்சமானது- சீனா

ஆப்பிரிக்க நாடுகளுக்கு உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் உடனடி நிவாரண நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. இதில் பில்லியன் கணக்கான கடன் தொகைகளை விடுவித்தல் போன்றவைகளும் அடங்கும். சீனாவின் உதவிக்கான எதிர்பார்ப்பு ஆப்பிரிக்காவில் அதிகம். ஆனால், இவ்விவகாரத்தில் பெய்ஜிங் நீண்ட அமைதி காத்துவருகிறது.

ஆப்பிரிக்க அரசாங்கத்தின் கடனில் மூன்றில் ஒரு பகுதியை சீனா வைத்துள்ளது. நெடுஞ்சாலைகள் முதல் நீர்மின் அணைகள் வரை அனைத்தையும் கட்டியெழுப்ப, சீன ஆதரவு மூலதனத்திற்கான நாடுகளுக்கு கடன்பட்டுள்ளது. இது கடன் பற்றிய கவலைகளுக்கும், இறையாண்மையை இழப்பதற்கும் வழிவகுக்கிறது.
அங்கோலா போன்ற எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் உட்பட, தங்கள் வரவு செலவுத் திட்டங்களில் கணிசமானப் பகுதியை கடனுக்காகச் செலவிடுகின்றன. அதே நேரத்தில், சுகாதாரமும், கல்வியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி உகாண்டா நாட்டின் நிதியமைச்சர் மத்தியா கசைஜா கூறுகையில், “உகாண்டா போன்ற ஒரு நாட்டிற்கு எந்தவொரு கால அவகாசமும் வரவேற்கத்தக்கது.

ஆனால் கடந்தாண்டு அதிர்ச்சியூட்டும் பற்றாக்குறைகள் காரணமாக, அரசாங்கத்தை இயங்க வைக்க அதிகளவு கடன் தேவைப்பட்டது. உகாண்டாவின் தேசியக் கடன் 2018 ஆம் ஆண்டில் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. இது அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சீனாவிற்கு கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
சீனாவுடன் எங்களுக்கு வலுவான இருதரப்பு உறவுகள் உள்ளன. ஆனால், அவர்கள் தற்போது கடன் விவகாரங்கள் குறித்து எங்களிடம் எதுவும் சொல்லவில்லை” என்றார்.

China silent amid global calls to give Africa debt relief  global calls to give Africa debt  Africa  சீனாவின் உதவியை எதிர்நோக்கும் ஆப்பிரிக்க நாடுகள்  ஆப்பிரிக்க நாடுகள் கடன் சுமை  ஆப்பிரிக்க நாடுகளில் வலுவான காலூன்றிய சீனா
சீன அதிபர் ஜி ஜின்பிங்

குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு, 2020 ஆம் ஆண்டில் 20 பில்லியன் டாலர் வரை கடன் கொடுக்க செல்வந்த ஜி20 நாடுகள் தடை விதித்துள்ளன. இந்த அமைப்பில் உறுப்பினராக சீனா இதற்கு உடன்படவில்லை. ஆயினும், இந்த விவகாரத்தில் சீனா தனித்து செயல்படாது என்றும் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் உண்மையான கடன் விடுவிப்பு சாத்தியமில்லை என்றும், ஆப்பிரிக்காவில் பாரம்பரிய செல்வாக்கு இருந்தபோதிலும், உலகளாவிய அழுத்தம் காரணமாக ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை சீனா தவிர்க்கும் என்று கணித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவின் நிதியமைச்சர் பெய்ஜிங்கிலிருந்து அதிகம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

சீனா வலுவாக வர வேண்டும் என்பதே எனது விருப்பம் என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய மேம்பாட்டு மையத்துடன் பேசிய கென் ஓஃபோரி-அட்டா கூறினார். சீனாவுக்கான ஆப்பிரிக்கா கடன் 145 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன்.

இந்த ஆண்டு சுமார் 8 பில்லியன் டாலர் பணம் தேவைப்படுகிறது. எனவே அதைப் பார்க்க வேண்டும். இது ஒரு வெளிப்படுத்துதலுக்கான தருணம். சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியனிடம், ஆப்பிரிக்காவிற்கு சீனா கடன் நிவாரணம் அளிக்குமா என்று கேட்கப்பட்டதற்கு, ஏப்ரல் 7ஆம் தேதி சீனா, இந்த நாடுகளின் சிரமங்களை ராஜதந்திர வழியில் ஆலோசனை மூலம் தீர்க்கும் என்று நம்புவதாகக் கூறினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு, மருத்துவப் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் ஆப்பிரிக்காவுக்கு உதவுவதில் உள்ள சிரமங்களை சீனா சமாளித்துள்ளது. சீனா தனது திறன்களுக்கும், தொற்றுநோய் மற்றும் ஆபிரிக்காவின் தேவைகளுக்கு ஏற்பவும், அந்நாடுகளுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மூலதனத்துடன் வரும் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, சில ஆப்பிரிக்க தலைவர்கள் பெய்ஜிங்கிற்கு திரும்பியுள்ளதால், ஆப்பிரிக்கக் கண்டத்தில் சீனாவின் தடம் விரிவடைந்து வருகிறது. அதே நேரத்தில் மற்ற நிதி வழங்குநர்கள் ஊழல் மற்றும் பிறப் பிரச்சனைகள் காரணமாக தயங்குகின்றனர்.

இதுமட்டுமின்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களை கைப்பற்ற முனைப்பு காட்டிவருகிறது. அங்கோலா, கடந்த 2017ஆம் ஆண்டில் 42.8 பில்லியன் டாலர் வரை சீனாவிடம் இருந்து கடன்களைப் பெற்றுள்ளது.

கச்சா எண்ணெய்யை ஓரளவு சீனாவுக்கு அனுப்புவதன் மூலம் அதன் கடனை திருப்பிச் செலுத்துகிறது. சீன அரசாங்கம், வங்கிகள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆப்பிரிக்க அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் 2000ஆவது ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை, 143 பில்லியன் டாலர் கடன்களை நீட்டித்ததாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சீனா ஆப்பிரிக்கா ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
வருவாய் பெருமளவு குறைந்துகொண்டே போவதால் பல கடன் நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் இந்த ஆண்டு பெரும் அழுத்தத்திற்குள்ளாகும். மேலும் பல மறு நிதியளிப்பு, மறு பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.

இவற்றில் பலவற்றிற்கு சீனா நிதியுதவி அளிக்கும். இது நாட்டுக்கு மறு பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பளிக்கிறது என்று பொருளாதார புலனாய்வுப் பிரிவின் ஆப்பிரிக்கா ஆய்வாளர் நாதன் ஹேய்ஸ் கூறினார். ஆப்பிரிக்க நாடுகள் சீனாவிடம் கடனை எதிர்நோக்கும் அதேநேரத்தில், சீனாவின் தற்போதைய நிலையையும் உணர்ந்துள்ளனர்.

உலகளவில் புதிதாக தலைதூக்கிய கரோனா வைரஸான கோவிட்-19 பெருந்தொற்று ஏற்படுத்திய பாதிப்பு, தொழில்கள் இடர்பாடு, வேலைவாய்ப்பு இழப்பு உள்ளிட்ட பிரச்னைகளையும் ஆப்பிரிக்க தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எவ்வாறாயினும், ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் அதீத முதலீடு தொடரும்பட்சத்தில், சில ஆபத்தான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும்.

கடந்த காலங்களில் சீனாவிலிருந்து 1.5 பில்லியன் டாலர் கடனை திருப்பிச் செலுத்துவதில் இலங்கை பின்தங்கியுள்ளது. அதன்பின்னர், 2017 ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்தின் பாதியை அரசுக்குச் சொந்தமான சீன வணிகர்கள் குழு திரும்ப வாங்கியது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய எஃப்.டி.ஐ. கொள்கை பாரபட்சமானது- சீனா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.