ETV Bharat / bharat

மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிக்கிறது - சிவ சேனா குற்றச்சாட்டு

author img

By

Published : Feb 3, 2020, 6:39 PM IST

மும்பை: எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது என சிவசேனா குற்றஞ்சாட்டியுள்ளது.

Shiv Sena
Shiv Sena

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது. முன்னதாக ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

பொது மக்களின் வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றில் தொடர்புடைய எல்ஐசி நிறுவனம் தற்போது சுமையாக தெரிகிறது. அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை இதேபோல் வேகமாக தொடர்ந்தால், திறம்பட செயல்படும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படும். நிதிநிலை அறிக்கையில் நடுத்தர குடும்பத்திற்காக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எப்போதும்போல், மும்பையும் மகாராஸ்டிராவும் வஞ்சிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி சுயேச்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது எல்ஐசி நிறுவன பங்குகளில் ஒரு பகுதியை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் ஐடிபிஐயில் மத்திய அரசின் மீதமுள்ள பங்குகளும் விற்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இது பொதுமக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருந்தன.

சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், "எல்ஐசி, ஐடிபிஐ ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்க முயற்சி செய்துவருவதன் மூலம் மத்திய அரசு தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பது தெரியவருகிறது. முன்னதாக ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் பங்குகளை விற்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

பொது மக்களின் வாழ்க்கை, இறப்பு ஆகியவற்றில் தொடர்புடைய எல்ஐசி நிறுவனம் தற்போது சுமையாக தெரிகிறது. அரசின் தனியார்மயமாக்கல் நடவடிக்கை இதேபோல் வேகமாக தொடர்ந்தால், திறம்பட செயல்படும் அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்க மத்திய அரசு முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுப்பப்படும். நிதிநிலை அறிக்கையில் நடுத்தர குடும்பத்திற்காக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எப்போதும்போல், மும்பையும் மகாராஸ்டிராவும் வஞ்சிக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லி சுயேச்சை வேட்பாளர்களின் மனு நிராகரிக்கப்பட்டது ஏன்? - உயர் நீதிமன்றம் கேள்வி

Intro:Body:

https://www.aninews.in/news/national/general-news/centre-attempting-to-promote-privatisation-through-disinvestment-of-lic-says-saamana20200203090337/


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.