ETV Bharat / bharat

சபாநாயகர் மீது நம்பிகையில்லா தீர்மானம்: பாஜக ஆதரவு! - BJP MLA gave Letter to Assembly Secratary against Speaker

புதுச்சேரி சட்டப்பேரவை வருகிற 26ஆம் தேதி கூடவுள்ள நிலையில், சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கு பாஜக சார்பாக சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர்
author img

By

Published : Aug 24, 2019, 7:24 PM IST

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 15, திமுக 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.

கடந்த வாரம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் கொடுத்தனர். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால் தலைமையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயிடம் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று கடிதம் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் பேசுகையில், ’ஆளுங்கட்சி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ் அரசு மக்களுக்கு எவ்வித நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முழு ஆதரவும் பாஜக சார்பாக உண்டு’ என்றனர்.

வருகிற 26ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் கடிதம் வழங்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் 15, திமுக 3, சுயேட்சை 1 என 19 எம்.எல்.ஏ.க்களுடன் காங்கிரஸ் ஆட்சி செய்துவருகிறது.

கடந்த வாரம் புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் கொடுத்தனர். இது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக எம்.எல்.ஏ.க்கள் செய்தியாளர்கள் சந்திப்பு

அதேபோல், என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் ஜெயபால் தலைமையில் பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் சாமிநாதன், செல்வகணபதி சட்டப்பேரவை செயலர் வின்சென்ட் ராயிடம் சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர இன்று கடிதம் அளித்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பாஜக எம்.எல்.ஏக்கள் பேசுகையில், ’ஆளுங்கட்சி மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரஸ் அரசு மக்களுக்கு எவ்வித நல்ல திட்டங்களையும் செய்யவில்லை. எனவே எதிர்க்கட்சிகள் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முழு ஆதரவும் பாஜக சார்பாக உண்டு’ என்றனர்.

வருகிற 26ஆம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் கடிதம் வழங்கியிருப்பது புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:புதுச்சேரி சட்டப்பேரவை 26ஆம் தேதி கூடவுள்ள நிலையில் பாஜகவும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது


Body:புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது இதில் காங்கிரஸ் 15 திமுக 3, சுயச்சை 1ஆதரவு எம்எல்ஏக்கள் என மொத்தம் 19 எம்எல்ஏக்கள் உடன் காங்கிரஸ் ஆளும் கட்சியாக நீடித்து வருகிறது


எதிர்க்கட்சிகள் என் ஆர் காங்கிரஸ் 7 அதிமுக 4 பாஜக 3 என 13 எம்எல்ஏக்களை வைத்திருக்கிறது

இந்த நிலையில் கடந்த வாரம்
புதுச்சேரி சபாநாயகர் சிவக்கொழுந்து மீது எதிர்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என் ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கடந்த சில வாரங்களுக்கு சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராயர் சந்தித்து சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் கடிதத்தை அளித்திருந்தனர் இது புதுச்சேரி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில் இன்று எதிர்க்கட்சியான என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஜெயபால் தலைமையில் பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் சாமிநாதன் ,செல்வகணபதி ஆகியோர் சட்டப்பேரவைக்கு வந்தவர்கள் சட்டப்பேரவை செயலர் வின்சன்ட் ராய் அவரது அறையில் சந்தித்து கடிதம் அளித்தனர் பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சாமிநாதன்

நடுநிலையோடு செயல்பட வேண்டிய சபாநாயகர் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார் அவரது செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லை என்றும் எதிர்க்கட்சியான என் ஆர் காங்கிரஸ் அளித்த சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தாங்களும் ஆதரிப்பதாக கூறியவர் காங்கிரஸ் அரசு மக்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார் மேலும் எதிர்கட்சிகளுக்கு தங்களுடைய முழு ஆதரவும் உண்டு என்றும் அவர்கள் தெரிவித்தனர்
ஏற்கனவே ஆளும் காங்கிரஸ் அரசு மீது என்ஆர் காங்கிரஸ் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் நிலையில்

அத்தீர்மானத்தை ஆதரிப்பதாக பாஜகவும் கடிதம் அளித்துள்ளது வரும் 26-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் கூடவுள்ள நிலையில் பாஜக ,சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர அளித்துள்ள கடிதம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது



Conclusion:புதுச்சேரி சட்டப்பேரவை 26ஆம் தேதி கூடவுள்ள நிலையில் பாஜகவும் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர சட்டப்பேரவை செயலரிடம் கடிதம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.