ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: முன்னாள் மேயருக்கு நீதிமன்ற காவல்!

author img

By

Published : Nov 20, 2020, 9:40 PM IST

Updated : Nov 20, 2020, 9:46 PM IST

பெங்களூரு: கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற்ற கலவரம் தொடர்பான வழக்கில் முன்னாள் மேயர் சம்பத் ராஜூக்கு நான்கு நாள்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சம்பத் ராஜ்
சம்பத் ராஜ்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸ் மூர்த்தி. இவரின் உறவினர் நவீன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸின் வீட்டினை முற்றுகையிட்டனர். அது திடீரென கலவரமாக மாறியது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகளை என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 17ஆம் தேதி, கலவரத்தில் தொடர்புடையதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சம்பத் ராஜை காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று (நவ. 20) அவர் சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி காத்யாயனி, அவருக்கு நவம்பர் 24ஆம் தேதிவரை, நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

இதுவரை டிஜே ஹல்லி காவல் நிலைய வழக்கில் 124 பேரும், கேஜே ஹல்லி காவல் நிலைய வழக்கில் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள புலிகேசி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸ் மூர்த்தி. இவரின் உறவினர் நவீன் என்பவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி அவதூறாக பதிவிட்டார். இதனால் அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் அகந்த சீனிவாஸின் வீட்டினை முற்றுகையிட்டனர். அது திடீரென கலவரமாக மாறியது.

கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கலவரம் தொடர்பான இரண்டு வழக்குகளை என்ஐஏ அமைப்பினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடந்த 17ஆம் தேதி, கலவரத்தில் தொடர்புடையதாகக் கூறி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மேயர் சம்பத் ராஜை காவல் துறையினர் பெங்களூருவில் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று (நவ. 20) அவர் சிவில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி காத்யாயனி, அவருக்கு நவம்பர் 24ஆம் தேதிவரை, நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார்.

இதுவரை டிஜே ஹல்லி காவல் நிலைய வழக்கில் 124 பேரும், கேஜே ஹல்லி காவல் நிலைய வழக்கில் 169 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Nov 20, 2020, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.