ETV Bharat / bharat

அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகிறோம் - மம்தா தாக்கு

author img

By

Published : May 12, 2020, 1:44 PM IST

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தேவையின்றி அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுவதாகப் பிரதமருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி கடுமையாகப் பேசினார்.

Mamata
Mamata

கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஐந்தாவது முறையாக நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராட மத்திய அரசு ஒரு தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டும். ஒருபுறம் மத்திய அரசு ஊரடங்கை முழுமையாகவும் கண்டிப்புடனும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் மறுபுறம் எல்லைகளைத் திறப்பது, ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறது. மத்திய அரசின் அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

தற்போது மாநிலத்திலுள்ள கள நிலைமையைக் கருத்தில்கொண்டு எந்தெந்தத் துறைகளில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம் எந்தெந்தத் துறைகளின் செயல்பாடுகளைத் தொடங்கக் கூடாது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

இந்தக் கோவிட்-19 பெருந்தொற்றை மத்திய அரசுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால், மேற்கு வங்க மாநிலம் தேவையின்றி அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகிறது.

ஒரு மாநிலத்தைக் குறிவைப்பதற்குப் பதில், கரோனாவுக்கு எதிராகப் போராட மத்திய அரசு ஒரு தெளிவான திட்டத்தை வரையறுக்கலாம்" என்றார்.

மேலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

கோவிட்-19 தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின் ஐந்தாவது முறையாக நேற்று பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, "கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராட மத்திய அரசு ஒரு தெளிவான திட்டத்தை வகுக்க வேண்டும். ஒருபுறம் மத்திய அரசு ஊரடங்கை முழுமையாகவும் கண்டிப்புடனும் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

ஆனால் மறுபுறம் எல்லைகளைத் திறப்பது, ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவது உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறது. மத்திய அரசின் அறிவிப்புகள் முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.

தற்போது மாநிலத்திலுள்ள கள நிலைமையைக் கருத்தில்கொண்டு எந்தெந்தத் துறைகளில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்கலாம் எந்தெந்தத் துறைகளின் செயல்பாடுகளைத் தொடங்கக் கூடாது என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும்.

இந்தக் கோவிட்-19 பெருந்தொற்றை மத்திய அரசுடன் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால், மேற்கு வங்க மாநிலம் தேவையின்றி அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்படுகிறது.

ஒரு மாநிலத்தைக் குறிவைப்பதற்குப் பதில், கரோனாவுக்கு எதிராகப் போராட மத்திய அரசு ஒரு தெளிவான திட்டத்தை வரையறுக்கலாம்" என்றார்.

மேலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மம்தா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பணத்தை ஏழைகள் கையில் கொடுங்கள் - நோபல் பரிசு வென்ற எஸ்தர் டஃப்லோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.