ETV Bharat / bharat

நிர்வாண நிலையில் சடலமாகக் கிடந்த சாமியார் - தடயங்களை ஆய்வுசெய்யும் காவல்துறை! - pudhucherry

புதுச்சேரி: அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த வயதான ஜோசியர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.

pudhucherry
author img

By

Published : Aug 29, 2019, 8:31 PM IST

Updated : Aug 29, 2019, 8:52 PM IST

புதுச்சேரி பாலாஜி நகர் பகுதியில் உள்ள கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் தனிமையாக வசித்து வந்தார் தத்துவானந்தா சுவாமி (வயது 64). அவர் அந்த பகுதியில் ஜோதிடம் பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த கோகுலம் குடியிருப்பு காவலாளி வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜோசியர் படுகொலை  புதுச்சேரி  astrologer murder  pudhucherry  தத்துவானந்த சுவாமி
தத்துவானந்தா சுவாமி

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குற்றவாளியை அடையாளம் காண மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தத்துவானந்தா சுவாமியின் வீட்டிற்குள் சென்றதும், அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார்.

கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பு

இதனையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தத்துவானந்தா சுவாமியைக் கொலை செய்தார்களா? அல்லது அது காவலாளி கூறும் கதையா? என்ற கோணத்தில் கோரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி பாலாஜி நகர் பகுதியில் உள்ள கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் தனிமையாக வசித்து வந்தார் தத்துவானந்தா சுவாமி (வயது 64). அவர் அந்த பகுதியில் ஜோதிடம் பார்க்கும் பணியை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் அவரின் வீட்டுக் கதவு திறக்கப்படாமல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்த கோகுலம் குடியிருப்பு காவலாளி வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, அவர் ரத்தவெள்ளத்தில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி கோரிமேடு தன்வந்திரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஜோசியர் படுகொலை  புதுச்சேரி  astrologer murder  pudhucherry  தத்துவானந்த சுவாமி
தத்துவானந்தா சுவாமி

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், குற்றவாளியை அடையாளம் காண மோப்ப நாய், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் தத்துவானந்தா சுவாமியின் வீட்டிற்குள் சென்றதும், அங்கு அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகவும் காவலாளி தெரிவித்துள்ளார்.

கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பு

இதனையடுத்து அந்த அடையாளம் தெரியாத நபர்கள் தத்துவானந்தா சுவாமியைக் கொலை செய்தார்களா? அல்லது அது காவலாளி கூறும் கதையா? என்ற கோணத்தில் கோரிமேடு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தத்துவானந்தாசுவாமி. ஜோதிடம் , அவரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் நிர்வாண கோலத்தில் படுகொலை செய்துள்ளனர் புதுச்சேரி போலீசார் விசாரணைBody:புதுச்சேரி பாலாஜி நகரில் உள்ள மொட்டை தோப்பு பகுதியில், கோகுலம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தத்துவானந்தாசுவாமி(வயது 64) என்பவர் அந்த பகுதியில் ஜோதிடம் சொல்பவர் .அவரை ம ர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் நிர்வாண கோலத்தில் படுகொலை செய்துள்ளனர் அங்கு பணிபுரியும் அடுக்குமாடி குடியிருப்பில் வேலை செய்து வரும் காவலாளி அவருடைய வீட்டில் கதவு மூடிய நிலையில் இருப்பதால், தன்வந்திரி நகரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்பு தன்வந்திரி நகர் காவல் துறை ஆய்வாளர் கண்ணன் தலைமையில், கொலை குற்றவாளிகளை பிடிக்க போலீசார் மோப்ப நாயுடன் வந்து சோதனை செய்தனர். கொலை குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர் ஜோசியர் அந்த பகுதியில் கொலை செய்து உள்ள சம்பவம் அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Conclusion:அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தத்துவானந்தாசுவாமி. ஜோதிடம் , அவரை மர்ம நபர்கள் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் நிர்வாண கோலத்தில் படுகொலை செய்துள்ளனர் புதுச்சேரி போலீசார் விசாரணை
Last Updated : Aug 29, 2019, 8:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.