ETV Bharat / bharat

'வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை'- இஸ்ரேல் தூதர் தகவல்!

author img

By

Published : May 7, 2020, 4:27 PM IST

ஹைதராபாத்: புதிய கரோனா வைரஸ் ஏற்படுத்திய கோவிட்-19 பெருந்தொற்று நோயைச் சமாளிக்க தடுப்பூசி இதுவரை இல்லையென்றாலும், வைரஸை எதிர்கொள்ளும் வகையில் எதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடிகள்) உருவாக்குவதில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது என்று இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் டாக்டர். ரான் மல்கா கூறினார்.

Israeli Envoy on Vaccine  Dr Ron Malka  Smita Sharma's article  COVID-19 vaccine  Antibody for COVID-19  coronavirus vaccine  வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை  இஸ்ரேல் தூதர் டாக்டர். ரான் மல்கா, ஸ்மிதா சர்மா, பாலஸ்தீனம்- இஸ்ரேல், கரோனா பாதிப்பு, கோவிட்-19, தடுப்பூசி, பாதிப்பு  சீனா, குற்றச்சாட்டு, வைரஸ்
Israeli Envoy on Vaccine Dr Ron Malka Smita Sharma's article COVID-19 vaccine Antibody for COVID-19 coronavirus vaccine வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை இஸ்ரேல் தூதர் டாக்டர். ரான் மல்கா, ஸ்மிதா சர்மா, பாலஸ்தீனம்- இஸ்ரேல், கரோனா பாதிப்பு, கோவிட்-19, தடுப்பூசி, பாதிப்பு சீனா, குற்றச்சாட்டு, வைரஸ்Israeli Envoy on Vaccine Dr Ron Malka Smita Sharma's article COVID-19 vaccine Antibody for COVID-19 coronavirus vaccine வைரஸை எதிர்கொள்ள எதிர்ப்பு சக்தி உருவாக்குவதில் திருப்புமுனை இஸ்ரேல் தூதர் டாக்டர். ரான் மல்கா, ஸ்மிதா சர்மா, பாலஸ்தீனம்- இஸ்ரேல், கரோனா பாதிப்பு, கோவிட்-19, தடுப்பூசி, பாதிப்பு சீனா, குற்றச்சாட்டு, வைரஸ்

உலகெங்கிலும் கரோனா வைரஸ் பரவல் தொடர்கிறது. இதனைக் கட்டுப்படுத்த உறுதியான சிகிச்சை தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலிய நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா, ஈடிவி பாரத் மூத்தச் செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு பேட்டிளித்தார்.

அப்போது, “கரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க எதிர்ப்பு சக்தி மருந்துகள் (ஆன்டிபாடிகள்) இஸ்ரேலிய பரிசோதனை கூடத்தில் ஒரு 'மேம்பட்ட கட்டத்தில்' இருப்பதை உறுதிப்படுத்தினார். இது, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், பரிசோதனையின் சரியான கட்டத்தை உறுதிப்படுத்துவது கடினம். கோவிட்-19 ஐை தடுப்பதற்கு இது ஒரு தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம். தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு மருந்தை (ஆன்டிபாடி) உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

தற்போது வரை தடுப்பூசி இல்லை. ஆனால் வைரசை எதிர்கொள்ள விரைவில் எதிர்ப்பு மருந்தை கண்டறிந்துவிடுவோம். இந்தியாவும் இஸ்ரேலும், தொற்று நோய்க்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் நெருக்கமாக ஒத்துழைத்துவருகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஒருங்கிணைக்கவும், செயற்கை நுண்ணறிவுத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி, இந்தியாவையும், இஸ்ரேலையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் இந்தியாவை விலைமதிக்க முடியாத நெருங்கிய நண்பராக பார்க்கிறோம். பரஸ்பர நம்பிக்கை, மரியாதையை அளிக்கிறோம்” என்றார். ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு சக்தி மருந்து) குறித்த கேள்விக்கு, “ஆன்டிபாடிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுமா, எப்போது என்பது குறித்து இன்னும் விவரங்கள் அறியப்படவில்லை.

ஆனால் ஒரு மேம்பட்ட இடத்தில் உள்ளோம். இந்த செயல்முறை முடிந்தபின்னர், அனைவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அல்லது தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறேன். தொற்று நோயை தடுக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். இஸ்ரேலில் 16 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை ஐந்து ஆயிரமாக குறைந்துள்ளது.

10 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 230 ஆக உள்ளது. 70 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று அறியப்பட்ட பின்னர், உள்நாடு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும் போது, ​​கட்டுப்பாடுகளை நீக்குவது எளிதாக இருக்கும். அதேநேரம், கோவிட்-19 பெருந்தொற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் கண்டறிதல், புதுமைகளுக்குப் பெயர் பெற்ற இஸ்ரேல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துகிறது.

சோதனை மையங்கள் வழியாக, 3 டி பிரிண்டிங் டிரைவ், வைரஸ் தனிநபர் பாதுகாப்பு உடைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முன்னணி வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்பாளர்களைக் கண்டறிய இஸ்ரேல் மொபைல் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகிறது.

இதில் இஸ்ரேல் கவனத்துடன் செயல்படுகிறது. இஸ்ரேலி அனைவரின் உரிமைகளையும், தனியுரிமை, சுதந்திரத்தையும் மதிக்கும் ஒரு துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு. ஆகவே தனியுரிமையை மீறத் தேவையில்லை. ஆனால், மறுபுறம், இந்தத் தொழில்நுட்பம் மக்களின் உயிரைக் கட்டுப்படுத்தவும், காப்பாற்றவும் உதவும்.

எனவே அது சமநிலைப்படுத்த மிகவும் கவனமாக கையாள வேண்டும்” என்றார்.

இந்திய அரசின் ஆரோக்ய சேது செயலி தொடர்பாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தது தொடர்பான கேள்விக்கு, “ தகவல் தொழில்நுட்பம் திறம்பட செயல்பட நம்பிக்கை மிக முக்கியமானது” என்று பதிலளித்தார். மேலும், “இஸ்ரேலில் இது மிகவும் சிறப்பாக செயல்படுவதற்கான காரணம், அடிப்படை விஷயம் நம்பிக்கை. மக்கள் ஏன் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் நம்ப வேண்டும், அதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிரைக் காப்பாற்றக்கூடிய தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது தொடர்பாக ஜனநாயக ரீதியாக நாம் செய்ய வேண்டியது அதனை புரிந்து கொள்வதும், ஏற்றுக் கொள்வதுதான்” என்றார்.

துப்புரவு மற்றும் சுத்தமான நீர் வசதி இல்லாததால், இஸ்ரேலின் மேற்குக் கரையில் மக்கள் பாதிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த தூதர், “இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆணையத்திற்கு உதவி வழங்கியது. இந்த வைரஸை சமாளிக்க உதவி, மருத்துவ வசதி வழங்க சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து பணியாற்றுவது முன்பைவிட இப்போது மிக முக்கியமானது. ஏனென்றால் இது எல்லோருக்கும் எதிரி. நாங்கள் எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம். இது நம் அண்டை நாடுகளுக்கு ஒரு பிரச்னையாக இருந்தால், அவர்கள் வந்து எங்கள் நாட்டின் கதவுகளையும் தட்டலாம்” என்றார்.

வைரஸின் தோற்றம் தொடர்பாக சீனா எதிர்கொள்ளும் பிரச்னைகள், குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, “தற்போது வைரஸை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துகிறோம்” பதில் கொடுத்தார். மேலும், “இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது? எப்படி பரவியது என்பது தொடர்பான விசாரணையில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.

எங்களின் ஆற்றலும், கவனமும் தடுப்பூசியை உருவாக்க முயற்சிப்பதில் உள்ளது” என்று புலம்பினார். இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

இதனை ஆமோதித்த மல்கா, “அந்த மருந்துகள் வைரஸை எதிர்கொள்கின்றன” என்றார். இதேபோல் ஒரு மருந்தை மேற்கொள் காட்டி, நெதர்லாந்து காப்புரிமை பெற்றுள்ளது. இந்த மருந்தை பெருமளவு உற்பத்தி செய்ய அந்நாடு முனைப்பு காட்டிவருகிறது.

இதையும் படிங்க: 'கோவிட்-19 குறித்து சுதந்திரமான ஆய்வு தேவை': ஆஸ்திரேலியத் தூதர்

உலகெங்கிலும் கரோனா வைரஸ் பரவல் தொடர்கிறது. இதனைக் கட்டுப்படுத்த உறுதியான சிகிச்சை தேவைப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலிய நாட்டின் தூதர் டாக்டர் ரான் மல்கா, ஈடிவி பாரத் மூத்தச் செய்தியாளர் ஸ்மிதா சர்மாவுக்கு பேட்டிளித்தார்.

அப்போது, “கரோனா வைரஸுக்கு சிகிச்சையளிக்க எதிர்ப்பு சக்தி மருந்துகள் (ஆன்டிபாடிகள்) இஸ்ரேலிய பரிசோதனை கூடத்தில் ஒரு 'மேம்பட்ட கட்டத்தில்' இருப்பதை உறுதிப்படுத்தினார். இது, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. எனினும், பரிசோதனையின் சரியான கட்டத்தை உறுதிப்படுத்துவது கடினம். கோவிட்-19 ஐை தடுப்பதற்கு இது ஒரு தடுப்பூசியாகப் பயன்படுத்தப்படலாம்” என்று அவர் தெளிவுப்படுத்தினார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “கோவிட்-19 பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் வகையில் இந்தியா, இஸ்ரேல் விஞ்ஞானிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகிறோம். தடுப்பூசி அல்லது நோய் எதிர்ப்பு மருந்தை (ஆன்டிபாடி) உருவாக்க ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.

தற்போது வரை தடுப்பூசி இல்லை. ஆனால் வைரசை எதிர்கொள்ள விரைவில் எதிர்ப்பு மருந்தை கண்டறிந்துவிடுவோம். இந்தியாவும் இஸ்ரேலும், தொற்று நோய்க்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில் நெருக்கமாக ஒத்துழைத்துவருகின்றன. அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரத் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் ஒருங்கிணைக்கவும், செயற்கை நுண்ணறிவுத் தரவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி, இந்தியாவையும், இஸ்ரேலையும் இன்னும் நெருக்கமாகக் கொண்டுவந்துள்ளது. நாங்கள் இந்தியாவை விலைமதிக்க முடியாத நெருங்கிய நண்பராக பார்க்கிறோம். பரஸ்பர நம்பிக்கை, மரியாதையை அளிக்கிறோம்” என்றார். ஆன்டிபாடிகள் (நோய் எதிர்ப்பு சக்தி மருந்து) குறித்த கேள்விக்கு, “ஆன்டிபாடிகள் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுமா, எப்போது என்பது குறித்து இன்னும் விவரங்கள் அறியப்படவில்லை.

ஆனால் ஒரு மேம்பட்ட இடத்தில் உள்ளோம். இந்த செயல்முறை முடிந்தபின்னர், அனைவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் அல்லது தடுப்பூசி கிடைக்கும் என நம்புகிறேன். தொற்று நோயை தடுக்க எங்களால் முடிந்ததைச் செய்வோம். இஸ்ரேலில் 16 ஆயிரம் பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை ஐந்து ஆயிரமாக குறைந்துள்ளது.

10 ஆயிரம் பேர் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 230 ஆக உள்ளது. 70 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று அறியப்பட்ட பின்னர், உள்நாடு, வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் வாழ்க்கைக்கும், வாழ்வாதாரத்திற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

பொருளாதாரம் மறுதொடக்கம் செய்ய வேண்டியிருக்கும் போது, ​​கட்டுப்பாடுகளை நீக்குவது எளிதாக இருக்கும். அதேநேரம், கோவிட்-19 பெருந்தொற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதிய தொழில்நுட்பம் கண்டறிதல், புதுமைகளுக்குப் பெயர் பெற்ற இஸ்ரேல் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு தொழில்நுட்பத்தை விரிவாகப் பயன்படுத்துகிறது.

சோதனை மையங்கள் வழியாக, 3 டி பிரிண்டிங் டிரைவ், வைரஸ் தனிநபர் பாதுகாப்பு உடைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் முன்னணி வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கோவிட்-19 பாதிப்பாளர்களைக் கண்டறிய இஸ்ரேல் மொபைல் உள்ளிட்ட தொழிற்நுட்பங்களை பயன்படுத்துகிறது.

இதில் இஸ்ரேல் கவனத்துடன் செயல்படுகிறது. இஸ்ரேலி அனைவரின் உரிமைகளையும், தனியுரிமை, சுதந்திரத்தையும் மதிக்கும் ஒரு துடிப்பான ஜனநாயகம் கொண்ட நாடு. ஆகவே தனியுரிமையை மீறத் தேவையில்லை. ஆனால், மறுபுறம், இந்தத் தொழில்நுட்பம் மக்களின் உயிரைக் கட்டுப்படுத்தவும், காப்பாற்றவும் உதவும்.

எனவே அது சமநிலைப்படுத்த மிகவும் கவனமாக கையாள வேண்டும்” என்றார்.

இந்திய அரசின் ஆரோக்ய சேது செயலி தொடர்பாக குற்றஞ்சாட்டுகள் எழுந்தது தொடர்பான கேள்விக்கு, “ தகவல் தொழில்நுட்பம் திறம்பட செயல்பட நம்பிக்கை மிக முக்கியமானது” என்று பதிலளித்தார். மேலும், “இஸ்ரேலில் இது மிகவும் சிறப்பாக செயல்படுவதற்கான காரணம், அடிப்படை விஷயம் நம்பிக்கை. மக்கள் ஏன் அதைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை நீங்கள் நம்ப வேண்டும், அதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

உயிரைக் காப்பாற்றக்கூடிய தொழில்நுட்பம் இருக்கிறது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இது தொடர்பாக ஜனநாயக ரீதியாக நாம் செய்ய வேண்டியது அதனை புரிந்து கொள்வதும், ஏற்றுக் கொள்வதுதான்” என்றார்.

துப்புரவு மற்றும் சுத்தமான நீர் வசதி இல்லாததால், இஸ்ரேலின் மேற்குக் கரையில் மக்கள் பாதிக்கப்படுவதாக வெளியான தகவல்களுக்கு பதிலளித்த தூதர், “இஸ்ரேல்- பாலஸ்தீனிய ஆணையத்திற்கு உதவி வழங்கியது. இந்த வைரஸை சமாளிக்க உதவி, மருத்துவ வசதி வழங்க சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொண்டுள்ளோம்.

நண்பர்கள், அயலவர்களுடன் இணைந்து பணியாற்றுவது முன்பைவிட இப்போது மிக முக்கியமானது. ஏனென்றால் இது எல்லோருக்கும் எதிரி. நாங்கள் எங்களால் முடிந்த உதவியைச் செய்கிறோம். இது நம் அண்டை நாடுகளுக்கு ஒரு பிரச்னையாக இருந்தால், அவர்கள் வந்து எங்கள் நாட்டின் கதவுகளையும் தட்டலாம்” என்றார்.

வைரஸின் தோற்றம் தொடர்பாக சீனா எதிர்கொள்ளும் பிரச்னைகள், குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு, “தற்போது வைரஸை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்துகிறோம்” பதில் கொடுத்தார். மேலும், “இந்த வைரஸ் எங்கிருந்து வந்தது? எப்படி பரவியது என்பது தொடர்பான விசாரணையில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை.

எங்களின் ஆற்றலும், கவனமும் தடுப்பூசியை உருவாக்க முயற்சிப்பதில் உள்ளது” என்று புலம்பினார். இஸ்ரேல் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் கரோனா வைரஸை எதிர்கொள்ளும் வகையில், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று கூறுகிறது.

இதனை ஆமோதித்த மல்கா, “அந்த மருந்துகள் வைரஸை எதிர்கொள்கின்றன” என்றார். இதேபோல் ஒரு மருந்தை மேற்கொள் காட்டி, நெதர்லாந்து காப்புரிமை பெற்றுள்ளது. இந்த மருந்தை பெருமளவு உற்பத்தி செய்ய அந்நாடு முனைப்பு காட்டிவருகிறது.

இதையும் படிங்க: 'கோவிட்-19 குறித்து சுதந்திரமான ஆய்வு தேவை': ஆஸ்திரேலியத் தூதர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.