ETV Bharat / bharat

வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்- சுற்றுலாப் பயணிகள் அவதி!

கடந்த நான்கு நாள்களாக ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளும் வெளியே வர முடியாமல் அவதியுறுகின்றனர்.

author img

By

Published : Jan 7, 2021, 7:47 AM IST

snowfall in Kashmir houseboat owners help stranded tourists heavy snowfall in Kashmir Tourists stranded due to snowfall Jammu and Kashmir snowfall Flights cancelled in JK வெண்பனியால் சூழ்ந்த ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் பனிப்பொழிவு பனிப்பொழிவு ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்
snowfall in Kashmir houseboat owners help stranded tourists heavy snowfall in Kashmir Tourists stranded due to snowfall Jammu and Kashmir snowfall Flights cancelled in JK வெண்பனியால் சூழ்ந்த ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீர் பனிப்பொழிவு பனிப்பொழிவு ஜம்மு-காஷ்மீரில் நிலவும் கடும் பனிப்பொழிவு வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனைத்து விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாலும், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் சிக்கித் தவித்தனர். இதற்கிடையில் ஸ்ரீநகரின் தால் ஏரி ஹோட்டல் சுற்றுலா பகுதிகளில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹவுஸ் படகு உரிமைகள் மீட்டனர்.

புத்தாண்டுக்கு முன்னதாக காஷ்மீரில் அழகிய பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்குக்குச் சென்று வெள்ளை போர்வை போன்று பனி அடர்ந்த மலைகள் மற்றும் சமவெளிகளைப் பார்வையிட்டனர். ஆனால், கடுமையான பனிப்பொழிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சில சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்களால் வேறு எங்கும் செல்லவும் முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்கு வானிலை மேம்படும் வரை இலவச தங்குமிடங்களை வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான மாலிக் மிர் அன்வர், “சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவது எங்களின் கடமை” என்று கூறினார்.

வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்- சுற்றுலாப் பயணிகள் அவதி!

இந்நிலையில் அவர்களை ஹோட்டல் உரிமையாளர்கள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவு 2019ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

அதன் பின்னர் கோவிட்-19 பொதுமுடக்கம் என ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக வீழ்ச்சியை கண்டது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் இறுதியாக புத்தாண்டு தினத்தன்று பள்ளத்தாக்குக்குச் செல்லத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடும் பனியில் உறைந்த வடக்கு இத்தாலி: சிலிர்க்க வைக்கும் காணொலி!

ஸ்ரீநகர்: கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அனைத்து விமானங்களும் ஞாயிற்றுக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதாலும், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாலும் சுற்றுலாப் பயணிகள் காஷ்மீரில் சிக்கித் தவித்தனர். இதற்கிடையில் ஸ்ரீநகரின் தால் ஏரி ஹோட்டல் சுற்றுலா பகுதிகளில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளை ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஹவுஸ் படகு உரிமைகள் மீட்டனர்.

புத்தாண்டுக்கு முன்னதாக காஷ்மீரில் அழகிய பனிப்பொழிவு காணப்பட்ட நிலையில், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்குக்குச் சென்று வெள்ளை போர்வை போன்று பனி அடர்ந்த மலைகள் மற்றும் சமவெளிகளைப் பார்வையிட்டனர். ஆனால், கடுமையான பனிப்பொழிவு மற்றும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் சில சுற்றுலாப் பயணிகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேற முடியவில்லை. அவர்களால் வேறு எங்கும் செல்லவும் முடியவில்லை.

சுற்றுலாப் பயணிகளுக்கு வானிலை மேம்படும் வரை இலவச தங்குமிடங்களை வழங்கி வருகிறார்கள். இது தொடர்பாக ஈடிவி பாரத்திடம் பேசிய ஹோட்டல் உரிமையாளர்களில் ஒருவரான மாலிக் மிர் அன்வர், “சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவது எங்களின் கடமை” என்று கூறினார்.

வெண்பனி மூடிய ஜம்மு காஷ்மீர்- சுற்றுலாப் பயணிகள் அவதி!

இந்நிலையில் அவர்களை ஹோட்டல் உரிமையாளர்கள் மீட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப்பிரிவு 2019ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது.

அதன் பின்னர் கோவிட்-19 பொதுமுடக்கம் என ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாத்துறை தொடர்ச்சியாக வீழ்ச்சியை கண்டது. இந்நிலையில், சுற்றுலாப் பயணிகள் இறுதியாக புத்தாண்டு தினத்தன்று பள்ளத்தாக்குக்குச் செல்லத் தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடும் பனியில் உறைந்த வடக்கு இத்தாலி: சிலிர்க்க வைக்கும் காணொலி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.