ETV Bharat / bharat

அம்ரபாலியில் வீடு வாங்குவதற்கு கடன் வழங்க வங்கிகளுக்கு உத்தரவு! - Justice Arun Mishra

டெல்லி: நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, அம்ரபாலி வீட்டு உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை என்.பி.ஏ என அறிவித்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை, கடன்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

Amrapali
Amrapali
author img

By

Published : Jun 11, 2020, 10:10 AM IST

முடங்கியுள்ள அம்ரபாலி குழும திட்டங்களில் வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யூ. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, செயல்படாத சொத்துக்களின் கணக்குகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக வங்கிகளுக்கு சில இட ஒதுக்கீடு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

"தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, செயல்படா சொத்துகளில் வாடிக்கையாளர்கள் வீடுகளை பதிவுசெய்ய கடனுதவி அளிக்கும்படி" உயர் நீதிமன்றம் தனது 36ஆம் பக்க தீர்ப்பில் கூறியது.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகளின்படி கடன்களில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்துள்ளது. மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீடு வாங்குபவர்களுக்கு கடன்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

"கடன் தொகையை மறுசீரமைக்க வேண்டும். கடன்களை வெளியிடுவதற்கான ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் ஆகியவற்றின் கீழ் இது வெளியிடப்படலாம்" என்று நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

முடங்கியுள்ள அம்ரபாலி குழும திட்டங்களில் வீடு வாங்குபவர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யூ. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு, செயல்படாத சொத்துக்களின் கணக்குகளுக்கு நிதியளிப்பது தொடர்பாக வங்கிகளுக்கு சில இட ஒதுக்கீடு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

"தற்போதைய சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, செயல்படா சொத்துகளில் வாடிக்கையாளர்கள் வீடுகளை பதிவுசெய்ய கடனுதவி அளிக்கும்படி" உயர் நீதிமன்றம் தனது 36ஆம் பக்க தீர்ப்பில் கூறியது.

ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகளின்படி கடன்களில் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரைத்துள்ளது. மேலும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீடு வாங்குபவர்களுக்கு கடன்களை விடுவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

"கடன் தொகையை மறுசீரமைக்க வேண்டும். கடன்களை வெளியிடுவதற்கான ரிசர்வ் வங்கியின் தற்போதைய விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட விகிதங்கள் ஆகியவற்றின் கீழ் இது வெளியிடப்படலாம்" என்று நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.