ஆரே காலனிப் பகுதியில் மெட்ரோ நிலையத்திற்கான வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆரே காலனி வனப்பகுதியில் உள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி அனுமதி அளித்தது.
இதனையடுத்து மரங்களை வெட்டும் பணியில் இறங்கிய மெட்ரோ அலுவலர்கள், மும்முரமாக மரங்களை வெட்டிச் சாய்த்தனர்.
![aarey forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4695857_new.jpg)
மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தி ஆரே வனப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என தடைவிதித்தது.
![aarey forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4695857_new-2.jpg)
இந்நிலையில் ஆரே காலனிப் பகுதியைச் சேர்ந்த உள்ளூர் ஆதிவாசி சமூகத்தினர், வெட்டப்பட்ட மரங்களுக்கு மலர்கள் தூவி, மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
வெட்டப்பட்ட மரங்கள் போன்ற ஓவியத்தை வரைந்து அதற்குக் கீழ் அவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
![aarey forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4695857_new-1.jpg)
மனிதர்களைப் போல மரங்களையும் பாவித்து ஆதிவாசி மக்கள் அஞ்சலி செலுத்திய இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![aarey forest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4695857_ani.jpg)
இதையும் படிங்க: சரியும் மரங்களும் வளரும் கட்டிடங்களும் - மெட்ரோ நகர் மும்பை!