ETV Bharat / bharat

ரஃபேல், இந்தியப் போர் விமானங்களைப் பற்றிய சுருக்கம்!

சர்ச்சைக்குரிய பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் மத்திய அரசு வாங்கிய பிரெஞ்சு ரஃபேல் போர் விமானங்களில் முதல் ஐந்து சீனாவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவுக்கு வரவுள்ளது. 2016 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இரு அரசுக்கு இடையேயான ஒப்பந்தத்தின் மூலம் 36 இரட்டை என்ஜின் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடிக்கு மத்திய அரசு வாங்கியது.

author img

By

Published : Jul 28, 2020, 7:30 PM IST

Indian Fighter Aircrafts Rafale Ambala airbase in Haryana Goldern arrows five Rafale jets Each engine provides a thrust of 75kN ரஃபேல் போர் விமானங்கள் சுருக்கம் ரஃபேல் இந்திய போர் விமானங்கள் ஹம்மர் ஏவுகணைகள் ஐந்து ரஃபேல் விமானங்கள் ஐக்கிய அ Indian Fighter Aircrafts Rafale Ambala airbase in Haryana Goldern arrows five Rafale jets Each engine provides a thrust of 75kN ரஃபேல் போர் விமானங்கள் சுருக்கம் ரஃபேல் இந்திய போர் விமானங்கள் ஹம்மர் ஏவுகணைகள் ஐந்து ரஃபேல் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம்ரபு அமீரகம்
Indian Fighter Aircrafts Rafale Ambala airbase in Haryana Goldern arrows five Rafale jets Each engine provides a thrust of 75kN ரஃபேல் போர் விமானங்கள் சுருக்கம் ரஃபேல் இந்திய போர் விமானங்கள் ஹம்மர் ஏவுகணைகள் ஐந்து ரஃபேல் விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகம்

ஹைதராபாத்: ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் முதல் தவணையாக திங்களன்று பிரான்சில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை (ஜூலை29) இந்தியாவுக்கு வரவுள்ளது. அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான நிலையத்தில் உள்ள இந்திய விமானப்படை கடற்படையில் சேரும்.

இந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, இந்தியா வரவுள்ளன. இந்திய விமானப்படையின் போர் திறன்களை வலுப்படுத்த சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா 2016 செப்டம்பரில் பிரான்சுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கிடையில், இரண்டு தளங்களில் தங்குமிடம், ஹேங்கர்கள் தடுப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் போன்ற தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) சுமார் 400 கோடி ரூபாய் செலவிட்டது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் ஐ.ஏ.எஃப்-ன் மிகவும் முக்கிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் அம்பாலா விமானப்படை நிலையத்தில் ரஃபேல் விமானத்தின் முதல் படை நிறுத்தப்படும்.

ரஃபேலின் இரண்டாவது படை மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா தளத்தில் நிறுத்தப்படும். அனைத்து 36 விமானங்களின் விநியோகமும் ஏப்ரல் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​இந்திய விமானப் படையில் 30 போர் படைப்பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு படைப்பிரிவும் 18 போர் விமானங்களைக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 538 போர் விமானங்கள் உள்ளன.

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

  • இரட்டை என்ஜின்

இது ஒரு இரட்டை என்ஜின் போர் விமானம் ஆகும். ரஃபேல் போர் விமானம் இரண்டு M88-2 இயந்திரங்களால் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு இயந்திரமும் 75 கிலோநியூட்டன் (கிஎன்) உந்துதலை வழங்குகிறது.

  • ரஃபேல் போர் விமானங்கள் ஒருவருக்கொருவர் வானில் உதவக்கூடும்

ரஃபேல் போர் விமானங்களில் ‘சக வீரனுக்கு உதவும் வகையில் (buddy-buddy)’ எரிபொருள் நிரப்புதல் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு விமானம் அதன் எரிபொருளை இன்னொரு விமானத்துக்கு நடுவானில் கடனாகக் கொடுக்கக் கூடும்.

  • ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும்

100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் எதிரி விமானங்களை தடுக்க முடியும்.

  • தரையில் 300 கிலோ மீட்டர் பாயும்

SCALP ஏவுகணைகள் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரையின் இலக்குகளை குறிவைத்து தாக்க முடியும். ரஃபேலில் SCALP ஏவுகணைகள் பொருத்தப்படலாம், இது ஒரு துல்லியமான நீண்ட தூர தரை தாக்குதல் ஏவுகணை. 300 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் இலக்குகளை வெற்றிகரமாக இயக்கும் திறன் கொண்டது.

  • ஒரே நேரத்தில் ஆறு ஏவுகணைகளை எடுத்துச் செல்லும்

ஒவ்வொரு ஏஏஎஸ்எம் (Armement Air-Sol Modulaire) ஏவுகணையிலும் ஜிபிஎஸ் மற்றும் அகச்சிவப்பு முனைய வழிகாட்டுதல் உள்ளன. இது 10 மீட்டர் துல்லியத்துடன் ஒரு இலக்கை துல்லியமாக தாக்க முடியும். இது ஒரு ஹாலோகிராபிக் காக்பிட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, ரஃபேல் ஒரு நேரத்தில் எட்டு இலக்குகளை இலக்காகக் கொள்ளலாம். மேலும் ரஃபேலில் ஹம்மர் ஏவுகணைகள் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு பிரான்ஸ் அலுவலர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஹம்மர் ஏவுகணைகளால் பதுங்குகுழிகளை கூட குறி பார்த்து பந்தாட முடியும். ஆகவே ரஃபேல் போர் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளன.

இதையும் படிங்க: கேரளா தங்க கடத்தல்: ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கக் காவல்!

ஹைதராபாத்: ஐந்து ரஃபேல் ஜெட் விமானங்கள் முதல் தவணையாக திங்களன்று பிரான்சில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை (ஜூலை29) இந்தியாவுக்கு வரவுள்ளது. அப்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போர் விமானங்கள் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டு ஹரியானாவில் உள்ள அம்பாலா விமான நிலையத்தில் உள்ள இந்திய விமானப்படை கடற்படையில் சேரும்.

இந்த விமானங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிக்கொண்டு, இந்தியா வரவுள்ளன. இந்திய விமானப்படையின் போர் திறன்களை வலுப்படுத்த சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க இந்தியா 2016 செப்டம்பரில் பிரான்சுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதற்கிடையில், இரண்டு தளங்களில் தங்குமிடம், ஹேங்கர்கள் தடுப்பு மற்றும் பராமரிப்பு வசதிகள் போன்ற தேவையான உள்கட்டமைப்புகளை உருவாக்க இந்திய விமானப் படை (ஐ.ஏ.எஃப்) சுமார் 400 கோடி ரூபாய் செலவிட்டது. இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் எல்லையிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் ஐ.ஏ.எஃப்-ன் மிகவும் முக்கிய தளங்களில் ஒன்றாகக் கருதப்படும் அம்பாலா விமானப்படை நிலையத்தில் ரஃபேல் விமானத்தின் முதல் படை நிறுத்தப்படும்.

ரஃபேலின் இரண்டாவது படை மேற்கு வங்காளத்தின் ஹசிமாரா தளத்தில் நிறுத்தப்படும். அனைத்து 36 விமானங்களின் விநியோகமும் ஏப்ரல் 2022 க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, ​இந்திய விமானப் படையில் 30 போர் படைப்பிரிவுகள் உள்ளன.

ஒவ்வொரு படைப்பிரிவும் 18 போர் விமானங்களைக் கொண்டுள்ளது. இதுவரை நாட்டில் 538 போர் விமானங்கள் உள்ளன.

ரஃபேல் போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

  • இரட்டை என்ஜின்

இது ஒரு இரட்டை என்ஜின் போர் விமானம் ஆகும். ரஃபேல் போர் விமானம் இரண்டு M88-2 இயந்திரங்களால் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு இயந்திரமும் 75 கிலோநியூட்டன் (கிஎன்) உந்துதலை வழங்குகிறது.

  • ரஃபேல் போர் விமானங்கள் ஒருவருக்கொருவர் வானில் உதவக்கூடும்

ரஃபேல் போர் விமானங்களில் ‘சக வீரனுக்கு உதவும் வகையில் (buddy-buddy)’ எரிபொருள் நிரப்புதல் பொருத்தப்பட்டுள்ளது. இதனால், ஒரு விமானம் அதன் எரிபொருளை இன்னொரு விமானத்துக்கு நடுவானில் கடனாகக் கொடுக்கக் கூடும்.

  • ஏவுகணைகளை வழிமறித்து தாக்கும்

100 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தில் எதிரி விமானங்களை தடுக்க முடியும்.

  • தரையில் 300 கிலோ மீட்டர் பாயும்

SCALP ஏவுகணைகள் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தரையின் இலக்குகளை குறிவைத்து தாக்க முடியும். ரஃபேலில் SCALP ஏவுகணைகள் பொருத்தப்படலாம், இது ஒரு துல்லியமான நீண்ட தூர தரை தாக்குதல் ஏவுகணை. 300 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் இலக்குகளை வெற்றிகரமாக இயக்கும் திறன் கொண்டது.

  • ஒரே நேரத்தில் ஆறு ஏவுகணைகளை எடுத்துச் செல்லும்

ஒவ்வொரு ஏஏஎஸ்எம் (Armement Air-Sol Modulaire) ஏவுகணையிலும் ஜிபிஎஸ் மற்றும் அகச்சிவப்பு முனைய வழிகாட்டுதல் உள்ளன. இது 10 மீட்டர் துல்லியத்துடன் ஒரு இலக்கை துல்லியமாக தாக்க முடியும். இது ஒரு ஹாலோகிராபிக் காக்பிட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, ரஃபேல் ஒரு நேரத்தில் எட்டு இலக்குகளை இலக்காகக் கொள்ளலாம். மேலும் ரஃபேலில் ஹம்மர் ஏவுகணைகள் நிரப்பிக் கொள்ளலாம். இதற்கு பிரான்ஸ் அலுவலர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஹம்மர் ஏவுகணைகளால் பதுங்குகுழிகளை கூட குறி பார்த்து பந்தாட முடியும். ஆகவே ரஃபேல் போர் விமானங்களில் ஹம்மர் ஏவுகணைகள் பொருத்தப்படவுள்ளன.

இதையும் படிங்க: கேரளா தங்க கடத்தல்: ஸ்வப்னா, சந்தீப் நாயருக்கு 5 நாள் சுங்கக் காவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.