ETV Bharat / bharat

மறுக்கப்பட்ட கல்வி, நீதிமன்றத்தை நாடிய 3 வயது பெண் குழந்தை!

author img

By

Published : Nov 10, 2019, 3:08 PM IST

பள்ளிகளில் கல்வி மறுக்கப்பட்ட நிலையில், தனது சொந்த தந்தைக்கு எதிராக மூன்றே வயதான பால்மணம் மாறாத பிஞ்சு ஒன்று நீதிமன்றத்தின் வாசற்கதவுகளை தட்டியுள்ளது.

மறுக்கப்பட்ட கல்வி, நீதிமன்றத்தை நாடிய 3 வயது பெண் குழந்தை.!

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு, நாம் வாழும் சமுகத்தின் மற்றொரு வெட்கக்கேடான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மறுக்கப்பட்ட கல்வியை போராடி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தின் வாசற்கதவுகளை தட்டியுள்ள அந்த பிஞ்சுக் குழந்தையின் வயது மூன்று. ஏதுமறியா அப்பாவி குணம், பால்மணம் மாறா பிஞ்சு முகம், இதனை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டோரும் ஒருகணம் கண்ணீர் சிந்தக்கூடும். எந்தத் தவறும் செய்யாத இந்தக் குழந்தையின் வாழ்வில் நடந்ததோ பெரும் சோகம்.

தந்தையும்-தாயும் சண்டையிட்டு பிரிந்துவிட்டனர். தாயின் அரவணைப்பாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவளின் தாயார், வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இக்குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்ற அங்கீகாரத்தை அளிக்க அவளின் தந்தையும் மறுத்துவிட்டார். விளைவு, இக்குழந்தைக்கு கல்வி மறுப்பு.

தந்தையின் தகவல்கள் இல்லாததால், இக்குழந்தைக்கு பள்ளி நிர்வாகம் கல்வியை மறுத்துவிட்டது. இதற்கு எதிராகத்தான் இக்குழந்தை நீதிமன்றத்திற்கு சென்று போராடுகிறது. குழந்தைக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர் சரிதா ரஜினி வாயிலாக இந்த தகவல்கள் கிடைத்தது. தற்போது இக்குழந்தை தனது பாட்டியிடம் வளருகிறது. அவளின் தாத்தாவும் இறந்துவிட்டார்.

குழந்தைக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவது சட்டப்படி குற்றம். அக்குழந்தைக்கு சட்டப்படி அடிப்படைக் கல்வி உரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பநல நீதிமன்ற ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்தார். இது மனதுக்கு ஆறுதல் தரும் விஷயம் என்றாலும், பிஞ்சுக் குழந்தையின் இந்த பரிதாப நிலைக்கு யார் காரணம்? பொறுப்பற்ற பெற்றோர்தானே, அவர்களுக்கு என்ன தண்டனை?

இதையும் படிங்க: ’புதிய கல்விக் கொள்கையை உயிரைக் கொடுத்து தடுப்போம்’

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் குடும்ப நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கு, நாம் வாழும் சமுகத்தின் மற்றொரு வெட்கக்கேடான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

மறுக்கப்பட்ட கல்வியை போராடி பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நீதிமன்றத்தின் வாசற்கதவுகளை தட்டியுள்ள அந்த பிஞ்சுக் குழந்தையின் வயது மூன்று. ஏதுமறியா அப்பாவி குணம், பால்மணம் மாறா பிஞ்சு முகம், இதனை பார்க்கும் கல்நெஞ்சம் கொண்டோரும் ஒருகணம் கண்ணீர் சிந்தக்கூடும். எந்தத் தவறும் செய்யாத இந்தக் குழந்தையின் வாழ்வில் நடந்ததோ பெரும் சோகம்.

தந்தையும்-தாயும் சண்டையிட்டு பிரிந்துவிட்டனர். தாயின் அரவணைப்பாவது கிடைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் கிடைக்கவில்லை. அவளின் தாயார், வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டார். இக்குழந்தை தனக்கு பிறந்ததுதான் என்ற அங்கீகாரத்தை அளிக்க அவளின் தந்தையும் மறுத்துவிட்டார். விளைவு, இக்குழந்தைக்கு கல்வி மறுப்பு.

தந்தையின் தகவல்கள் இல்லாததால், இக்குழந்தைக்கு பள்ளி நிர்வாகம் கல்வியை மறுத்துவிட்டது. இதற்கு எதிராகத்தான் இக்குழந்தை நீதிமன்றத்திற்கு சென்று போராடுகிறது. குழந்தைக்கு ஆதரவாக வாதாடும் வழக்குரைஞர் சரிதா ரஜினி வாயிலாக இந்த தகவல்கள் கிடைத்தது. தற்போது இக்குழந்தை தனது பாட்டியிடம் வளருகிறது. அவளின் தாத்தாவும் இறந்துவிட்டார்.

குழந்தைக்கு அடிப்படைக் கல்வி மறுக்கப்படுவது சட்டப்படி குற்றம். அக்குழந்தைக்கு சட்டப்படி அடிப்படைக் கல்வி உரிமை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று குடும்பநல நீதிமன்ற ஆலோசகர் நம்பிக்கை தெரிவித்தார். இது மனதுக்கு ஆறுதல் தரும் விஷயம் என்றாலும், பிஞ்சுக் குழந்தையின் இந்த பரிதாப நிலைக்கு யார் காரணம்? பொறுப்பற்ற பெற்றோர்தானே, அவர்களுக்கு என்ன தண்டனை?

இதையும் படிங்க: ’புதிய கல்விக் கொள்கையை உயிரைக் கொடுத்து தடுப்போம்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.