சிங்கப்பூரில் இருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்துக்கு விமானம் மூலம் வந்த சுரேஷ் என்பவர், வயிற்றில் மூன்று கிலோ தங்கத்தைக் கடத்தி வர முயன்றுள்ளார். ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர் மீது சந்தேகம் அடைந்து சோதனை செய்துள்ளனர்.
அப்போது, அவரின் இடுப்பில் துணியால் கட்டி மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க கட்டிகள், மற்றும் ஷூவில் மறைத்து வைத்திருந்த தங்கத்தையும் என மொத்தம் 3.3 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன்பின், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.