தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் ட்ரக் ஒன்றில் கஞ்சா கடத்துவதாகக் காவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் காவலர்கள் தீவிர வாகன தணிக்கை சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியே வந்த ட்ரக் ஒன்றில் 1500 கிலோ (15 குவிண்டால்) கஞ்சா கடத்திவந்தது தெரியவந்தது. இதையடுத்து வருவாய் புலனாய்வு அலுவலர்கள் அதனைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் நான்கு பேரை கைதுசெய்தனர்.